சுருக்கமில்லாத முகத்திற்கு....
Page 1 of 1
சுருக்கமில்லாத முகத்திற்கு....
இளமையோடும், அழகுடனும் இருக்கவேண்டும் என்பதே அனைத்து தரப்பு பெண்களின் எண்ணம்.
கண்களுக்கு கீழே கருவளையமோ, முகத்தில் லேசாக சுருக்கமோ ஏற்பட்டாலோ உடனே அழகு நிலையங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து முகத்தை அழகு படுத்திக்கொள்பவர்கள் இருக்கின்றனர்.
வெயிலில் அலைவதால் முகம் கருப்பாகிவிடும். அழுக்குகள் படிந்து முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும்.
2 ஸ்பூன் பாலுடன் ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் முழுவதும் பூசி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் புத்துணர்ச்சியோடு திகழும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக மாறும்.
வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக மை போல அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணெய் வழியாமல் இருக்கும்.முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.
இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும். முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுருக்கமில்லாத முகத்திற்கு காய்கறி, பழச்சாறு பூசுங்க !
» முகத்திற்கு சில எளிய பயிற்சிகள்
» வழு வழு முகத்திற்கு வாழைப்பழ பேஸ்மாஸ்க்!
» முகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி
» முகத்திற்கு இளமையும், பளபளப்பும் !
» முகத்திற்கு சில எளிய பயிற்சிகள்
» வழு வழு முகத்திற்கு வாழைப்பழ பேஸ்மாஸ்க்!
» முகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி
» முகத்திற்கு இளமையும், பளபளப்பும் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum