தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்தன்று கருவளையம் இல்லாமலிருக்க சில டிப்ஸ்...

Go down

திருமணத்தன்று கருவளையம் இல்லாமலிருக்க சில டிப்ஸ்... Empty திருமணத்தன்று கருவளையம் இல்லாமலிருக்க சில டிப்ஸ்...

Post  meenu Mon Jan 28, 2013 12:49 pm

திருமணத்தன்று சருமத்திற்கு அதிக கவனம் சொலுத்தி, அதனை சரியாக பராமரிப்போம். அதற்காக நிறைய ஃபேஸ் பேக் போடுவது, அதிகமான அளவு பழங்களை சாப்பிடுவது, உடலை குறைக்கவும், சருமம் பொலிவாகவும் க்ரீன் டீ குடிப்பது என்றெல்லாம் செய்வோம்.

இருப்பினும் திருமணத்தன்று மட்டும் சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும். இந்த கருவளையத்தை என்ன செய்தாலும் போகாமல் இருக்கும். எனவே திருமணத்தன்று இந்த மாதிரியான கருவளையம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்....

* நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தாலே, தம்பதிகளுக்கு இருக்கும் குஷியில், இரவு முழுவதும் சாட்டிங் செய்வதால், தூக்கமே வராது தான். இருப்பினும் அவ்வாறு சரியாக தூங்காமல் இருந்தால், அது உடலையும், உடல் அழகையும் பாதிக்கும். அதற்காக இரவில் தூங்காமல் இருந்து, பகலில் தூங்கிக் கொண்டால் எதுவும் ஏற்படாது என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் இரவில் சரியான நேரத்தில் தூங்கினால் தான், கண்களில் கருவளையம் ஏற்படாமல் இருக்கும்.

* நிறைய பெண்கள் கருவளையம் வராமலிருக்க கண்களுக்கு வெள்ளரிக்காயை வைப்பார்கள். ஏனெனில் வெள்ளரிக்காயை வைத்தால், கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், பளிச்சென்று ப்ளீச்சிங் செய்தது போன்றும் இருக்கும். ஆகவே திருமண நாளன்று ஒரு 20 நிமிடம் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களுக்கு வைத்தால், கருவளையம் போய்விடும். வேண்டுமெனில் வெள்ளரிக்காய்க்கு பதிலாக உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம்.

* திருமணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்னர், கண்களில் உள்ள கருவளையத்தை போக்க வேண்டுமா? அப்படியெனில் டீ பேக்கை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, பின் அதனை பிளிந்து, அந்த டீ பேக்கை கண்களின் மீது 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை செய்து வந்தால், கண்களில் உள்ள கருவளையம் எளிதில் நீங்கிவிடும்.

* எலுமிச்சையின் சாற்றை வைத்து, கண்களைச் சுற்றி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது தக்காளி சாற்றையும் கலந்து செய்யலாம். அதிலும் இதனை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், கருவளையம் போய்விடும். கண்களும் நன்கு சற்று கொலுகொலுவென காணப்படும்.

* உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும், கருவளையம் வரும். ஆகவே அதற்கு பசலைக் கீரை, முட்டைகோஸ், கேரட், தக்காளி போன்றவற்றை சற்று அதிகம் சாப்பிட வேண்டும். மேற்கூறியவற்றை தவிர, அளவுக்கு அதிகமான தண்ணீரைக் குடித்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, கண்களும் நன்கு பொலிவோடு காணப்படும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum