தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அலற வைக்கும் அலர்ஜி

Go down

அலற வைக்கும் அலர்ஜி Empty அலற வைக்கும் அலர்ஜி

Post  meenu Sun Jan 27, 2013 12:53 pm


சருமம் முழுக்க கொப்புளங்கள்... அரிப்பு... தடிப்பு என்று நம்மை ரொம்பவே பாடாய் படுத்தி விடும்.. பிரச்சினை அலர்ஜி. அதை கவனிக்காமல் விட்டால், சில சமயம் ஆபத்தான கட்டத்துக்கும் கூட அழைத்துச் சென்று விடும். அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன? எந்தப் பொருட்களால் அல்லது சூழலால் நமக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்ற குழப்பங்கள் எல்லோர் மனதிலும் இருக்கின்றன. அந்த அலர்ஜி பற்றி பார்ப்போம்.

அலர்ஜியை இரு வகைப்படுத்தலாம். ஒன்று... நம் உடலுக்கு உள்ளேயே ஏற்படும் சில மாற்றங்களால் வரக்கூடிய அலர்ஜி. இதை எண்டோஜீனஸ் அலர்ஜி என்போம். இரண்டாவது, வெளியில் உள்ள தூசு, வேதி பொருட்கள், உணவுப் பொருட்களை போன்றவற்றை நம் உடல் ஒப்புக் கொள்ளாததால் ஏற்படும் அலர்ஜி. இதனை ளுளுஅலர்ஜி என்போம். முதலில் நாம் உடலுக்குள்ளே ஏற்படும் அலர்ஜியை பற்றி பார்ப்போம்.

பொதுவாக, வெளியிலிருந்து வரும் வேண்டாத பொருட்களை எதிர்ப்பதற்காக நம் ரத்தத்தில் சில தற்காப்புப் புரதங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்று மட்டும் சிலர் உடலில் அளவுக்கதிகமாக இருக்கும். நம் உடலில் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் செல்களையே திடீரென அந்தப் புரதம் தாக்கத் தொடங்கிவிடும்.

இதனால் அந்த செல்கள் பாதிப்படைந்து தோல் உரிதல், அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். பொதுவாக இந்த அலர்ஜி ஏற்படுத்துவதற்கு மரபு அல்லது ஜீன்களில் உள்ள பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். இந்த வகை அலர்ஜிகளை சிகிச்சையின் மூலம் முற்றிலும் குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில் தான் வைக்க முடியும்.

ஆனால், சிலருக்கு தானாகவே படிப்படியாக குறைந்து விடுவிதற்கான வாய்ப்பும் உள்ளது. அடுத்தது, எக்ஸோஜீனஸ் அலர்ஜி பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தான் வாழும் சூழலுக்கேற்றவாறு உடல் தானாகவே பழகி விடும். இதை சென்ஸிடைசேஷன் என்போம். ஆனால் சிலருக்கு சில விஷயங்களில் இந்த சென்ஸிடைசேஷன் இயல்பிலேயே குறைவாக இருக்கும்.

வெளி இடங்களில் தண்ணீர் குடித்தாலே சிலர் உடல் அதை ஒப்புக் கொள்வதில்லை. மற்ற விஷயங்களில் அவர் உடல் நார்மலாகவே இருக்கும். சிலர் உடலோ தண்ணீரை ஒப்புக்கொள்ளும். ஆனால், காற்றில் லேசாக தூசு இருந்தால் கூட அதை ஒப்புக் கொள்ளாது. இதைத் தான் அலர்ஜி என்கிறோம்.

பலவகை அலர்ஜி சுவாசத்தின் வழியாக அலர்ஜி, தொடும் பொருட்களால் அலர்ஜி, உணவுப் பொருள்களால் அலர்ஜி, ஒளியால் அலர்ஜி என்று அலர்ஜியை நான்காகப் பிரிக்கலாம். ஒவ்வாமையில் (அலர்ஜி) பல வகை உண்டு. உணவுப் பொருட்களில் ஒவ்வாமை, சில மருத்துகளில் ஒவ்வாமை, சுட்டெரிக்கும் சூரிய ஒளிக்கு ஒவ்வாமை, மாசு தூசால் ஏற்படும் ஒவ்வாமை இப்படி பல ஒவ்வாமைகள் உண்டு.

இளம் வயதில் கணிதப் பாடத்தைக் கண்டாலே எட்டிக்காய்யாய் கசக்கும் அனுபவத்தை நீங்கள் தவறாக எண்ணக் கூடாது அது ஒவ்வாமை அல்ல. எனக்கு தெரிந்த ஒரு நண்பர் சிறிதளவு தூசி இருந்தாலும் குறைந்தது 50 அல்லது 60 முறை தொடர்ச்சியாக தும்மிக்கொண்டே இருப்பார். ஆஸ்துமா கூட ஒவ்வாமையினால் ஏற்படும் நோய் என்று சொல்லலாம்.

அடியேனுக்கு வெயிலில் அதிக நேரம் இருந்தாலும், கோடையில் பருத்தியாடைத் தவிர வேறு ஆடை அணிந்தாலும் ஒவ்வாமை ஏற்பட்டு தோலில் அரிப்பு ஏற்படுவதுண்டு. உங்களில் பலருக்குக் கூட இந்த வகை அனுபவங்களும், ஒவ்வாமைகளும் இருக்கக் கூடும். ஆனால் உணவு பொருட்கள் சிலவற்றுக்கு ஒவ்வாமை ஏற்படுவது தான் கொடுமை.

நம்மில் பலர் ஒரு சில பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். காரணம் அதை உண்பதால் வயிற்றில் கோளாறு ஏற்படுகிறது. அல்லது சரியான ஜீரணம் ஏற்படவில்லை என்ற காரணங்களாக நாம் சொல்வோம். பாலடைக்கட்டி சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படுகிறது. எனவே நான் அதை சேர்ப்பதில்லை.

கருவாடு சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அதை கண்டாலே காத தூரம் ஓடிவிடுவேன் என்றெல்லாம் நம்மில் பலர் சொல்லக்கூடும் இவையெல்லாம் உணவுப் பொருட்களுக்கான நம் உடலின் ஒவ்வாமையே. பெரியவர்களாகிய நமக்கு இதெல்லாம் அனுபவத்தின் வாயிலாக தெரிந்து நாம் நமக்கு ஒவ்வாத பொருட்களை தவிர்த்து விடுகிறோம்.

பலவிதமான அலர்ஜி (ஒவ்வாமை) நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு அலர்ஜி நோயை குணப்படுத்த தனித்தனி மருந்துகளை டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரே மருந்து மூலம் அனைத்து விதமான அலர்ஜி நோய்களையும் குணப்படுத்தும் ஊசி மருந்தை விஞ்ஞானி டாக்டர் உல்ப் கேங்க் ரென்னர் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்தை தூசி, பூனை முடி, உள்ளிட்ட பல அலர்ஜி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஊசி மூலம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் 42 சதவீதம் பேர் நோயில் இருந்து குணமாயினர். இதே மருந்தை ஆஸ்துமா மற்றும் காய்ச்சலினால் அவதிப்பட்டவர்களின் உடலிலும் செலுத்தி சோதிக்கப்பட்டது.

அவர்களுக்கும் அந்த நோய் குணமாகி விட்டது. இதை தொடர்ந்து இம்மருந்தை மார்க்கெட்டில் விற்பனைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4 வருடத்தில் அம்மருந்து விற்பனைக்கு வரும். இதன் மூலம் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விரைவில் மீள முடியும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum