தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வர்ஷாவுடன் தயாரிப்பாளர்கள் மோதல்!

Go down

வர்ஷாவுடன் தயாரிப்பாளர்கள் மோதல்!  Empty வர்ஷாவுடன் தயாரிப்பாளர்கள் மோதல்!

Post  ishwarya Sat May 25, 2013 1:04 pm

"பேராண்மை" படத்தில் அறிமுகமானவர் வர்ஷா. அதன் பிறகு "நீர்ப்பறவை" படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். தற்போது "அமைதிப்படை" இரண்டாம் பாகமான "நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ" படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இதுவரை வர்ஷாதான் படத்தின் ஹீரோயின் என்பதைப்போல அவரது படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தனர். குறிப்பாக நீச்சல் குளத்தில் கும்மாளம் அடிப்பது போன்ற படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வர்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனியாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் தான் அமைதிப்படை பார்ட் 2வில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருவதாகவும், சீனியர்களுடன் நடிப்பது பற்றி தான் கவலைப்படவில்லை. அவர்களது அனுபவம் எனக்கு பயன்படுகிறது என்றும் நான்கு ஹீரோயின்களுடன் நடிக்க ஆரம்பித்து அது படிப்படியாக குறைந்து தற்போது "பனிவிழும் மலர்வனம்" படத்தில் தனி ஹீரோயினாக நடித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

வர்ஷா தனியாக பத்திரிகையாளர்களை சந்தித்தது தயாரிப்பு நிறுவனத்துக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, மற்றும் ரவிசந்திரன் ஆகியோர் சார்பில் படத்தின் செய்தி தொடர்பாளர் அனுப்பியுள்ள மெயிலில் கூறியிருப்பதாவது:"எங்கள் படத்தில் நடித்திருக்கும் வர்ஷா தான்தான் அமைதிப்படை பார்ட் 2வின் கதாநாயகி என்று கூறியிருப்பதாக அறிந்தோம். எங்கள் படத்தின் கதாநாயகிகள் கோமல் சர்மாவும், மிருதுளாவும் மட்டும்தான். வர்ஷா ஒரு கேரக்டரில் மட்டும் நடிக்கிறார். அதுவும் படத்தின் சில காட்சிகளே வந்து போகும் பாத்திரம் மட்டுமே. இவர் தான் கதாநாயகி என்ற பேட்டி அளித்திருப்பது எங்களது வியாபார ரீதியான அணுகுமுறைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. வேண்டுமானால் அவர் மற்ற படங்களின் கதாநாயகி என்று சொல்லிக் கொள்ளட்டும்" என்று கூறிப்பட்டிருக்கிறது.

"சில காட்சிகளில் மட்டுமே வரும் வர்ஷாவுக்கு இதுவரை முக்கியத்துவம் கொடுத்து வந்தது ஏன்?-. மற்ற நாயகிகள் கோமல் சர்மா, மிருதுளா படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லையே ஏன்?. காரணம் படத்தின் வியாபர சக்தி அவர்தானே தவிர படத்தில் நடித்திருக்கும் நாயகிகள் அல்ல. வர்ஷா பத்திரிகையாளர்களை சந்தித்தது அவரது தனிப்பட்ட கேரியரை பற்றிச் சொல்வதற்குதானே தவிர அமைதிப்படை பார்ட் 2 பற்றி பேசுவதற்காக இல்லை. அதற்கு தயாரிப்பாளர்கள் இத்தனை கோப்படுவதுதற்கு காரணம் இருக்கிறது அது விரைவில் வெளிவரும்" என்கிறது வர்ஷாவுக்கு நெருங்கிய வட்டாரம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum