தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போடிமெட்டு மலைப்பாதையில் போக்குவரத்து அடியோடு ரத்து

Go down

போடிமெட்டு மலைப்பாதையில் போக்குவரத்து அடியோடு ரத்து  Empty போடிமெட்டு மலைப்பாதையில் போக்குவரத்து அடியோடு ரத்து

Post  ishwarya Fri May 24, 2013 2:45 pm

போடிமெட்டு மலைப்பாதையில் போக்குவரத்து அடியோடு ரத்து  Stoneroad
போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததால்
போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டது. இதனால் மதுரை, கொச்சி தேசிய
நெடுஞ்சாலையில் இரவு முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தேனி
மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் போடி உள்ளது. இங்கிருந்து
கொச்சி, மூணாறு உள்ளிட்ட கேரள பகுதிகளுக்கு போடிமெட்டு மலைப்பாதை வழியாக
தான் செல்ல வேண்டும். சுமார் 5.5 மீட்டர் அகலம் உள்ள போடிமெட்டு
மலைச்சாலையை 7 மீட்டராக மாற்ற ஸீ17 கோடி மதிப்பில் பணிகள் நடந்து
வருகின்றன.

சாலை அகலப்படுத்தும் பணியின் போது வெடிகள் அதிகளவில் பயன்படுத்துவதால்,
அதிர்வு காரணமாக பாறைகள் உடைந்தன. நேற்று முன்தினம் மாலை போடி பகுதியில்
பலத்த மழை பெய்தது. மலைப்பாதையின் ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையின்
குறுக்கே பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் மலைச்சாலையில் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் பாறைகளை அகற்ற முடியவில்லை. இதனால் கேரளாவில்
இருந்து வந்த வாகனங்கள் இரவு முழுவதும் அங்கிருந்து நகர முடியாமல் நின்றன.
பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் இருந்த பயணிகள் உணவு மற்றும் குடிநீர்
கிடைக்காமல் திண்டாடினர். பயணிகள் பலரும் போடி முந்தல் பகுதிக்கு நடந்து
சென்று, அங்கிருந்து மாற்று வாகனங்கள் மூலம் போடி மற்றும் தேனி சென்றனர்.

நேற்றுகாலை மீண்டும் பாறைகளை அகற்றும் பணி துவங்கியது. பெரிய அளவிலான
பாறைகளை அகற்ற சிரமம் ஏற்பட்டதால், மாலையில் வெடி வைத்து பாறைகளை உடைக்கும்
பணி நடந்தது. இன்று முதல் போக்குவரத்து சீராகும் என்று நெடுஞ்சாலைத்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவில் திக்..திக்..பயணம்

கேரள மாநிலம் மூணாறில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக,
நெல்லையில் இருந்து ஒரு குடும்பத்தினர் வேனில் வந்திருந்தனர். திருமணம்
முடிந்து கீழிறங்கும் போது, பாறை உருண்டு போக்குவரத்து தடைபட்டது.
நீண்டநேரம் காத்திருந்தும் பலனில்லாததால், வேனில் வந்தவர்கள் குழந்தைகள்,
பெரியவர்களுடன், மலைச்சாலை வழியாக நடந்தே கீழிறங்கி சென்றனர். சிறுத்தை
உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில், இரவு நேரத்தில்
பயணிகள் பாதுகாப்பின்றி நடந்து வந்ததாக நெல்லையை சேர்ந்தவர்கள்
தெரிவித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum