தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

Go down

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் Empty வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

Post  ishwarya Fri May 24, 2013 12:53 pm

சென்னை: தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் நேற்று தைப்பூச திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன்களை செலுத்தினர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் முன்பு அம்மன் கோயில் தெருவில் தைப்பூச பால்காவடி சங்கம் சார்பில் தைப்பூச விழா கொண்டாப்பட்டது. அந்த தெருவில் தீக்குண்டம் உருவாக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் பால்காவடி எடுத்தபடி பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர்.

பின்னர் 1000 பால்குடம் ஏந்தியபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும், 257 பேர் அலகு குத்தியபடியும், 6 பேர் தேர்களை அலகு குத்தி இழுத்த படியும் வந்தனர். இந்த ஊர்வலம் தெற்கு பெருமாள் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, வடக்கு பெருமாள் கோயில் தெரு, ஆற்காடு ரோடு, துரைசாமி ரோடு வழியாக முருகன் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது ஏராளமான பக்தர்கள் சாலையில் படுத்தப்படி அலகு குத்தி வந்தவர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் பக்தர்கள் சுமந்து வந்த பால்குடங்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum