தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அய்யா வைகுண்டர் அவதார தின விழா : சாமித்தோப்பில் பக்தர்கள் குவிந்தனர்

Go down

 அய்யா வைகுண்டர் அவதார தின விழா : சாமித்தோப்பில் பக்தர்கள் குவிந்தனர் Empty அய்யா வைகுண்டர் அவதார தின விழா : சாமித்தோப்பில் பக்தர்கள் குவிந்தனர்

Post  ishwarya Thu May 23, 2013 6:22 pm

நாகர்கோவில்: அய்யா வைகுண்டர் அவதார தின விழாவையொட்டி, சாமித்தோப்பில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலம் இன்று காலை தொடங்கியது. குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தின விழா இன்று நடக்கிறது. இதையொட்டி திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து வந்த அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம், நேற்று இரவு நாகர்கோவில் நாகராஜா திடலை அடைந்தது.

பின்னர் மாசி மாநாடு நடந்தது. பால பிரஜாதிபதி அடிகளார் தலைமை தாங்கினார். விடிய விடிய மாநாடு நடந்தது. இதில் அகில திரட்டு அருளுரை, அய்யா வழி நெறியுரை, ஏடுவாசிப்பு மற்றும் அய்யா வழி இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை சாமித்தோப்பு அய்யா கோயிலுக்கு அவதார தின ஊர்வலம் புறப்பட்டது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மீனாட்சிபுரம், சவேரியார்கோவில் சந்திப்பு, இடலாக்குடி, கரியமாணிக்கபுரம், சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு வழியாக சாமித்தோப்பு தலைமை பதியை அடைந்தது.

இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் தென்பால் கடற்கரை வலம் வந்து கலி வேட்டை திருக்காட்சி வழங்கும் நிகழ்வு நடக்கிறது. சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்து அய்யா வழி பக்தர்கள் ஏராளமானோர் சாமித்தோப்பில் குவிந்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum