தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்த அதிசய காட்சி

Go down

    விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்த அதிசய காட்சி Empty விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்த அதிசய காட்சி

Post  ishwarya Thu May 23, 2013 2:02 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளியில் வரலாற்று சிறப்பு மிக்க அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி.12-ம் நுற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஈசானிய பார்வையில் வாயிற்படி கட்டப்பட்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார். இங்கு தரிசனம் செய்பவர்களுக்கு திருமணம் நடக்கும். நோய்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.

சூரிய ஒளி விழும் காட்சி இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 7 மணி வரை சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பக்தர்கள் தரிசனம் லிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து கோவிலில் உள்ள மூன்று பிரகாரங்களை கடந்து பின்னர் லிங்கத்தின் மீது விழுகிறது.

முதலில் லிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக லிங்கத்தின் மையப் பகுதியை அடைகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 15 நிமிடங்களில் நடந்து விடுகிறது. இன்று காலை 6.30 மணிக்கு சூரிய ஒளி விழுந்து பின்னர் காலை 6.45 மணிக்கு மறைந்து விட்டது. இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்த திரளான பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் நமச்சிவாய என கோஷமிட்டனர். இது அற்புதமான காட்சியாகும்.

இதைகாண தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகத்திலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்கள் 7 நாள் இதை தரிசனம் செய்தால் 7 ஜென்ம தீவினைகள் அகன்று நன்மை பெறலாம் என்று கூறப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நவபாஷாண சிவலிங்கம்
» 16 பட்டை சிவலிங்கம்
» மகன் படத்தில் பிராமனர்களை இழிவுபடுத்தும் காட்சி: நடிகர் மோகன்பாபு வீடு மீது திடீர் தாக்குதல்
» சங்கு, சக்கரத்துடன் மகாவிஷ்ணுதான் அருள்பாலிப்பார். ஆனால், ஒரு கோவிலில் முருகப்பெருமான் அப்படிப்பட்ட திருக் கோலத்தில் காட்சி தருகிறார். ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்க, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முர
» மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum