தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் ஆரோக்கியம்

Go down

தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் ஆரோக்கியம் Empty தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் ஆரோக்கியம்

Post  ishwarya Tue May 21, 2013 6:17 pm

தாய்ப்பாலின் மகத்துவம் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் அதை குழந்தைகள் பருகுவதால் உடல் நிறை அதிகரிப்பு, நீரிழிவு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று டென்மார்க் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏனைய பால்மாக்களை அருந்தும் குழந்தைகளை விட, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் வளர்ச்சி தன்மையில் நிறைய வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.



அதாவது தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இரத்தத்தில் குறைந்த அளவிலான ஹோர்மோன், இன்சுலின் இருப்பதால் சீரான உடல் வளர்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. இதனால் எதிர்காலத்தில் நீரிழிவு, உடல் பருமன் ஆகியவற்றை தவிர்க்க முடியும். ஆனால் ஏனைய பால்மாக்களை பருகுவதால் கொழுப்பு செல்கள் அதிகரித்து குழந்தை பருவத்திலேயே உடல் நிறை அதிகரித்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


இதேவேளை, குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு அமெரிக்காவில் உள்ள வடகரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்தால் இருதய நோயிலிருந்து தாய்மார்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே அதுவாகும். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுத்தால் எதிர்காலத்தில் இவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். சுமார் 56 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டு இந்த முடிவை அவர் வெளியிட்டுள்ளார்.


நீண்ட நாட்களுக்குத் தாய்ப்பால் கொடுத்து வந்தால் அழகு கெட்டு விடும் என்ற தவறான நம்பிக்கை பல பெண்களிடம் உள்ளது. அப்படிப்பட்டவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வெகு விரைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இதனால்தான், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.



இதையும் மீறி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தயக்கம் காட்டும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கின்றனர். குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண், தொடர்ந்து தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தால் அவருக்கு உயர் இரத்த அழுத்த நோயும் ஏற்படாது என்பது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தால் தாய்-சேய் இருவருக்குமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பது உறுதி என்று கூறுகிறார்கள்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum