தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி.

Go down

காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி. Empty காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி.

Post  ishwarya Mon May 13, 2013 6:31 pm

நாம் சந்திக்கும் மனிதர்களில் பலர் பிறர் பேசும்போது அடிக்கடி மறுபடியும் சொல்லுமாறு கேட்பதை, தொலைபேசியில் பேசும்போது சிரமப்படுவதை, ரேடியோ அல்லது டி.வி. உரையாடலை கேட்பதில் கஷ்டப்படுவதை, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதை என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். உரையாடலை கேட்டுக் கொள்வதை அல்லது வார்த்தைகளை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டால் அது காது கேளாமையின் ஓர் அடையாளமே!

ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால் அதுவே காது கேளாமையாகும். காது பிரச்சினையை அறிதலே அதை சரி செய்ய நாம் எடுக்கும் முதல் அடியாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உச்ச ஸ்தாயி ஒலிகள் கேட்க இயலாமை, தொலை தூரத்திலிருந்து வரும் ஒலிகளை கேட்பதில் சிரமம், ரேடியோ மற்றும் `டிவி’ கேட்பதில் சிரமம் போன்ற பல்வேறு வகையான அறிகுறிகளே காதுகேளாமையாகும்.

காது கேளாமை ஏற்பட முக்கிய காரணங்கள்:……..

நிலையான இரைச்சலில் எப்போதும் இருப்பது, அதிர்ச்சி, மரபியல் காரணங்கள், இயல்பான மூப்புத்தன்மை, கட்டிகள், பிறவிக்கோளாறு, நோய் வாய்ப்படுதல், நடுக்காதில் தொற்று நோய், காதிற்கான விஷத்தன்மையுள்ள மருந்துகள். காது கேளாமை பிரச்சினையின் அறிகுறிகளை நீங்கள் அறிந்தால், உடனே ஈ.என்.டி. மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்கள் காது பரிசோதனை செய்து காதுகேளாமையின் தீவிரம் மற்றும் அதன் ரகத்தை தீர்மானிப்பார்கள்.

காது கேளாமையின் வகைகள்:……..

காயம் அல்லது எலும்புகளின் பிரச்சினையினால் கூட காது கேளாமை ஏற்படலாம். செவிப்பறை அல்லது சவ்வுகள் வெளி மற்றும் நடுக்காதுகளிலிருந்து உட்காதிற்குள் ஒலியை மாற்றுகிறது. உட்காதுகளில் சீரழிவிற்கு காரணம் உணர்வு நரம்புகள் அல்லது கேட்பு நரம்புகளின் காது கேளாமை தன்மை என்றால் அதற்கு காது மிஷின் ஒன்றே தீர்வு.

தற்போது நவீன அறிவியல் முன்னேற்றத்தின் வளர்ச்சியால் டிஜிட்டல் மற்றும் புரோகிராம் செய்யப்பட்டுள்ள செவிக்கருவிகள் கிடைக்கின்றன. இது ஒலியை மிகவும் துல்லியாக உணர பயன்படுகிறது. முதலில் காது மிஷின்களை கேட்பதற்கு சிறிது பயிற்சி தேவைப்படும்.

அணிந்து கொள்பவர்களின் தேவையற்ற ஒலிகளை வடி கட்டி வேண்டுமென ஒலியை மட்டுமே காதில் வாங்க பயிற்சி செய்வேண்டும். நாளடைவில், அணிந்து கொள்பவர் காது மிஷின்கள் கொண்டு தரும் ஒலிகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுவார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum