தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசவத்திற்கு பின் உடல் மெலிய வேண்டுமா? easy way

Go down

பிரசவத்திற்கு பின் உடல் மெலிய வேண்டுமா? easy way Empty பிரசவத்திற்கு பின் உடல் மெலிய வேண்டுமா? easy way

Post  ishwarya Mon May 13, 2013 12:48 pm

கர்ப்பமாக இருக்கும் போது உடல் நலனை கவனிப்பதைப் போல பிரசவத்திற்குப் பின்னர் உடல் நலனை கவனிக்கத் தவறிவிடுகின்றனர் தாய்மார்கள். இதனால் உடல் குண்டாகி ஏகப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குழந்தை பிறப்பிற்குப் பின்னர் தாய்மார்கள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் உடல் மெலிந்து பழைய நிலைக்கு வரலாம்.

கர்ப்பமாக இருக்கும் போது எந்த அளவிற்கு கவனமாக உடலை கவனித்துக் கொள்கிறோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உடல் நலனை அக்கறையோடு கவனித்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் மிகவும் அவசியம்.

பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் தான் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு கடுமையான வேலைகள் செய்வதை சில மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

பிரசவத்திற்குப் பின்னர் கொழுப்பு அதிகம் உள்ள கேக், ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்துவிட வேண்டும். அதிக இனிப்பு பண்டங்கள் உண்பது, எண்ணெயில் பொறித்த உணவுகளையே உண்பது, பகலில் தூங்குவது போன்றவை விரைவாக வயிறு போடத் தூண்டுகின்றன. பிரசவத்திற்குப்பின் எடை போடுவது, அதிலும் வயிற்றில் சதை போடுவது, சர்க்கரை வியாதி வருவதற்கு காரணமாகி விடுகிறது.

பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும்.

தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பழச்சாறுகளை அருந்துவதால் உடலில் தேவையற்ற கலோரிகள் சேருவது தடுக்கப்படும். சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் அருந்துவதுதான் நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் உணவுகளை தவிர்க்கக் கூடாது.

மூன்று வேளை உண்பதற்குப் பதிலாக சிறிது சிறிதாக 6 வேளை உணவாக உட்கொள்ளலாம். இடை இடையே காய்கறிகள், பழங்கள் போன்றவைகளை சாலட்களாக உட்கொள்ளலாம். பிரசவத்திற்குப்பின்னர் ஆயில் மசாஜ், வென்னீர் குளியல், நாட்டு மருந்து பத்திய உணவு, பகல் தூக்கம் தவிர்த்தல் போன்ற இயற்கை வைத்திய முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி முழுப்பயன் அடைந்து வந்தனர்.

மேற்கத்திய நாடுகளில் பிரசவத்திற்குப்பின்னர் பின்பற்ற வேண்டியவற்றை மருத்துவ மனைகளில் சரியான உணவு முறைகள் மற்றும் சரியான யோக (உடற்பயிற்சி) முறைகளையும் இன்றும் சொல்லித் தருகின்றனர்.

ஆனால் நம் நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதைப்பற்றி சொல்லித்தருவதில்லை. எனவே இயற்கை வழியை பின்பற்றி முன்னோர்கள் கூறியவைகளை பின்பற்றி நடந்தால் கர்ப்பத்திற்கு முந்தைய உடல் அமைப்பை பெறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum