தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்பக புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகள்

Go down

மார்பக புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகள் Empty மார்பக புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகள்

Post  meenu Thu Jan 24, 2013 1:44 pm




கள்ளிப்பாலுக்கும், நெற்மணிக்களுக்கும், பலி கொடுக்கப்பட்டு வந்த பெண் சிசுக்கள் கொலை ஒழிக்கப்பட்டு, பெண் இனத்தை போற்றும் அளவுக்கு அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் பெண்கல்வி, முன்னேற்றம், குறித்து பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு பெண்சிசுக்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டு வருகிறது. இப்படி பெண் இனத்தை போற்றப்படும் இந்த காலத்தில் பெண்களை தாக்கும் அதுவும் இந்திய பெண்களை அதிகமாக தாக்கும் புற்றுநோய் குறித்தும், அவை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சேலம் சுவர்ணபுரியை சேர்ந்த டாக்டர். எஸ். புவனேஸ்வரி கூறியதாவது:-

புற்றுநோய்.....

இந்த பெயரை கேட்டாலே அடுத்து மரணம் தான் என்று பொதுமக்கள் பலர் தவறாக பயப்படுகிறார்கள். இந்த நோயும் மற்றநோய்களை போலவே குணப்படுத்த முடியும். பெரும்பாலும் நோய் முற்றிய நிலையில் நோயாளிகள் வருவதாலே இந்த நோயை குணப்படுத்த முடிவதில்லை.

ஆனாலும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் கொடுத்து அவர்களிள் ஆயுளையும் மருத்தவர்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது தான் முதன் முதலில் பெண்களுக்கு புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அதற்கு சோதனைகள் நடத்தி தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அவை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் தற்போது இந்தியாவில் அதிகளவில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 80 ஆயிரம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 40 ஆயிரம் பேருக்கு மரணம் ஏற்படுகிறது. உலக அளவில் மார்பக புற்றுநோய் 11.5 லட்சம் பெண்களுக்கு உள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 2.3 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அவர்களில் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் மட்டுமே மரணம் அடைகிறார்கள். இந்தியாவை காட்டிலும் அமெரிக்காவில் அதிகளவில் நோய் தாக்கப்பட்டு இருந்தாலும், அங்கு மரணம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்றால் அங்குள்ள மக்கள் உடலில் ஏதாவது ஒரு மாற்றம் தென்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை செய்து கொள்கிறார்கள்.

அவ்வாறு செய்வதன் மூலம் நோய் இருப்பது முதலிலேயே கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொண்டு நோயை குணப்படுத்துகின்றர். இதனால் அங்கு இறப்பு சதவீதம் குறைகிறது. ஆனால் நம் நாட்டில் முறையாக நோயாளிகள் பதிவு செய்வதில்லை.

இதனால் எவ்வளவு பேருக்கு என்ன நோய் இருக்கிறது என்று கணக்கிடுவதில் சிக்கல் இருக்கிறது. மேலும் இங்குள்ள பெண்கள் நோய் முற்றி ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற நேரத்தில் தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள்.

பின்னர் அவர்களுக்கு தேவையான மருத்துவஆலோசனைகள், சிகிச்சை முறைகள் குறித்து தெரிவித்தாலும், அவர்கள் டாக்டர்கள் சொல்வதை கேட்காமல் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு, சிகிச்சை பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர்.

இதுவே இந்தியாவில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம். பொதுவாகவே பெண்களுக்கான மார்பக புற்றுநோயிக்கு முக்கிய காரணம் குறைந்த வயதிலேயே பூப்படைவதும், குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருப்பதுமே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

9-வயதுக்குள்ளே பெண்கள் பூப்படைப்டைவதற்கு முக்கிய காரணம் அதிகளவில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் தான். இந்த ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதன் காரணமாத்தான் புற்றுநோய் செல்கள் தோன்றுகிறது. இவ்வாறு குறைந்து வயதில் பூப்படையும் பெண்கள் 20-வயதுக்கு மேல் குழந்தைகள் பெற்ற பின் கண்டிப்பாக மருத்துவபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

அவ்வாறு செய்து கொண்டால் அவர்களுக்கு புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்று முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். அப்படி அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்றால், அவர்களை ஒரு ஆண்டு கழித்து மீண்டும் சோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.

அப்போது அவர்களது மார்பகங்களில் ஏதாவது கட்டி தென்பட்டால் அவற்றை கண்டுபிடித்து உடனடியாக அகற்றி அவர்களின் உயிரை காப்பாற்றி விடலாம். இல்லை என்றால் நோய் முற்றி மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இருக்கும் வரை நோயின்றி வாழ சோதனைகள் எடுத்துக்கொள்வது அவசியம்.

இதே போல் 50 அல்லது 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது நிற்காவிட்டாலும் புற்றுநோய் ஏற்படும். மாதவிடாய் ஏற்படுவதற்கு ஈஸ்ட்ரோஜன் முக்கிய காரணம். இது அதிக அளவில் சுரந்தால் தான் புற்றுநோய் உண்டாகும். எனவே இது போல் உள்ள பெண்களும் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.

இதே போல் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு காலை, மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பால் கொடுக்கின்றனர். இது போல் பால் கொடுக்கும் பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும். எனவே குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளும் நன்றாக இருக்கும்.

தாய்மார்களும் புற்றுநோய் வராமல் தப்பித்து கொள்ளலாம். ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படும். இது பெரும் ஆபத்தில்லை. பொதுவாகவே புகை பிடித்தல் காரணமாகவே ஆண்களுக்கு 15 சதவீதம் மார்பக புற்றுநோய் ஏற்படும் நிலை இருக்கிறது. மேலும் மரபு வழியிலும் மார்பக புற்றுநோய் 15 சதவீதம் வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த ஜீன்கள் பி.ஆர்.சி. ஏ-1. பி.ஆர்.சி. ஏ-2 என்று அழைக்கப்படுகிறது. ஒரு வீட்டில் ஏற்கனவே புற்றுநோய் யாருக்காவது இருந்தால் அவர்கள் மேமோகிராபி சோதனை செய்து கொண்டு நோயை தடுக்கலாம். வெளிநாடுகளில் சிலர் மார்பகங்களை அகற்றவும் ஆபரேசன் செய்து கொள்கிறார்கள்.

மரபு வழியில் வரும் இந்த புற்றுநோயையும் சரியான நேரத்தில் வந்தால் நாம் சரிசெய்து கொள்ளலாம். மேலும் பெண்கள் தங்களது மார்பகங்களில் ஏதேனும் கட்டி தென்பட்டாலோ அல்லது, நீர், ரத்தம், சீழ் முதலியவை வடிந்து வந்தாலோ, இயல்பு நிலையில் இருந்து மாறி இருந்தாலோ, இரு மார்பகங்களில் ஒன்று பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் இருந்தாலோ, தடித்து இருந்தாலோ உடனடியாக டாக்ரை அணுகி தேவையான சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேமோ கிராபி சோதனையின் மூலம் பொதுவாகவே நம் கைகளுக்கு தட்டுப்படாத தடிப்புகள், சிறுகட்டிகள் கூட இந்த மேமோ கிராபியில் மிக துல்லியமாக தெரிந்து விடும். எனவே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்து கொண்டால் மார்பக புற்றுநோயை மிக ஆரம்ப கட்டத்திலேயே கண்டு பிடிக்க முடியும்.

அதனால் அவர்கள் நவீன சிகிச்சை முறைகளால் மற்ற பெண்களை போல இயல்பான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் பெற முடியும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum