தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் சித்த-ஆங்கில மருத்துவம்

Go down

மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் சித்த-ஆங்கில மருத்துவம் Empty மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் சித்த-ஆங்கில மருத்துவம்

Post  meenu Tue Jan 22, 2013 5:27 pm



இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. பெண்களை தாக்கும் புற்று நோய்களில் 10.4 சதவீதம் மார்பக புற்றுநோய் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் மரணம் என்ற அச்சம் இருந்தது.

ஆனால் இன்று புற்றுநோயை குணப்படுத்தும் அரிய மருத்துவ முறைகள் வந்து விட்டன. சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் மார்பக புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம் என்கிறார் பிரபல சித்த- ஆங்கில மருத்துவமுறை நிபுணரான சூரிய பாரத் மருத்துவமனையின் சப்தரிஷி பவுண்டேசன் இயக்குனர் டாக்டர் எஸ்.எஸ்.மணிகண்டன், இவர் தமிழகத்தின் முன்னோடி மருத்துவரான சப்தரிஷி வைத்தியரின் பேரன். சப்தரிஷி 1860 முதல் 1975 வரை வாழ்ந்தவர்.

இங்கிலாந்து மன்னர்களான 5-ம் ஜார்ஜ், வின்ஸ்டன் சர்ச்சில், ட்ரூபன் போன்றோரின் ஆஸ்தான மருத்துவராக விளங்கியவர். அவரது வழியில் வந்த டாக்டர் எஸ்.எஸ்.மணி கண்டன் மார்பக புற்று நோயை சித்த- ஆங்கில முறை கலந்த மருத்துவத்தில்100 சதவீதம் குணப்படுத்தி விடலாம் என்கிறார். அவர் தரும் விளக்கம்:-

பெண்களை அதிக அளவில் மார்பக புற்றுநோய் தாக்குகிறது. இது மற்ற நோய்களைப்போல் ஆரம்பத்திலேயே வெளியே தெரியாது. நோய் முற்றிய நிலையில்தான் பாதிக்கப்பட்டு மருத்துவர்களை நாடி வருகிறார்கள். 4 கட்ட பரிசோதனைகளுக்கு பின்பு புற்றுநோய் உறுதிப்படுத்தப்படுகிறது. மார்பகங்களின் திரட்சியானது பிற திசுக்களில் இருந்து வேறுபட்டதாக மாறும்போது அதை மேமோகிராம் சோதனை மூலம் புற்றுநோயா என்பதை கண்டறியலாம்.

இதுதவிர மார்பக அளவு, வடிவம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம், அக்குள் பகுதியில் வீக்கம், தோலில் பருக்கள் தோன்றுதல், மார்பக காம்பு திரும்புதல் உள்ளிழுத்துக் கொள்ளுதல் ஏதேனும் ஒரு காம்பில் இருந்து தானாகவே நீர் வடிதல் போன்றவையும் அறி குறிகளாகும். அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவு, ஆல்கஹால் உட்கொள்ளுதல், உடல் பருமன், புகையிலை பயன்பாடு, கதிரியக்கம் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள், நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் பாதிப்பு போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய்கள் ஏற்படுகிறது.

மேலும் பரம்பரை மற்றும் கெட்ட பழக்க வழக்கங்களாலும் புற்றுநோய் கிருமிகள் உருவாகிறது. நாளமில்லா சுரப்பிகளில் அதிக அளவு ஹார்மோன்கள் சுரக்கும்போது அது நல்ல நிலையில் இருக்கும் செல்களை கொன்று விடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் பலம் இழந்து புற்றுநோய் செல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. எனவே நடன கலைஞர்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம்.

ஒரு மார்பில் புற்றுநோய் வந்தால் அந்த பெண்ணுக்கு மற்றொரு மார்பிலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே பெண்கள் சுயபரிசோதனை மூலம் மார்பகத்தில் கட்டிகள் அல்லது பிற அசாதாரண மாற்றங்கள் உள்ளனவா என்று அறிந்து கொள்ள வேண்டும். இதுதவிர மருத்துவமனைக்கு சென்று இதர பரிசோதனைகள் மூலம் மார்பக புற்றுநோயை கண்டறியலாம்.

இதற்காக மேமோகிராம், அல்ட்ரா சவுண்ட், நீடில் பயோப்சி, ஆகிய சோதனைகள் நடை முறையில் உள்ளன. மார்பகத்தில் தோன்றும் புற்றுநோய் கட்டியின் அளவு இருப்பிடம் பரிசோதனையின் முடிவுகள், நோயின் நிலை இவற்றை பொறுத்து மார்பக புற்று நோய்க்கான அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

ஆங்கில முறை மருத்துவத்தில் மார்பகத்தில் உள்ள புற்று கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப்பட்ட பின்னரும் அல்லது அழிக்கப்பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டுபிடிக்க முடியாத சிறு சிறு புற்றுநோய் அணுக்கள், சிகிச்சைக்குப்பின் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே பரவி இருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.

ஆங்கிலமுறை வைத்தியத்தில் ஹீமோதெரபி, ரேடியோதெரபி, புற்றுநோய் தடுப்பு மருந்துகள், வலி தடுப்பு மருந்துகள் அளித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் முழுமையான குணம் அடையாது. இந்த சிகிச்சையில் புற்றுநோய் செல்களை அழிக்கும்போது அருகில் உள்ள நல்ல செல்களையும் அழித்து விடுகிறது.

இதனால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும். அலோபதியால் ஏற்படும் பக்க விளைவை சித்த மருந்துகளை கொடுத்து குணப்படுத்தி விடலாம். மார்பக புற்றுநோய் கட்டி ஆறாத புண்ணாக மாறுதல் போன்ற நிலை ஏற்படலாம். இதுபோன்ற சமயங்களில் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது.

ஆனால் சித்த- ஆங்கில முறை இணைந்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை இல்லாமலே மார்பக புற்று நோய் கட்டியையும், ஆறாத புண்களையும் குணப்படுத்தி விடலாம். முற்றிய நிலையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உயிர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மார்பக புற்றுநோயே வராத அளவுக்கு இந்த மருத்துவம் உதவுகிறது.

மார்பக புற்றுநோய் கட்டி களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என் பதில்லை. சித்த மருத்துவத்தில் நவபாஷாணம், நவலோகம், நவ உப்பு, நவசிந்தாமணி, மூப்பு போன்ற மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகளின் சக்திகளை கொண்டு முதல்நிலை மார்பக புற்று நோயாளிகளை குணப்படுத்தி விடலாம்.

இந்த நவீன முறையில் மரணத்தின் பிடியில் இருந்த அரசு பெண் உயர் அதிகாரி உள்பட பலரது உயிரை காப்பாற்றி இருக்கிறேன். அவர்கள் நலமுடன் உள்ளனர். மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உணவு கட்டுப்பாடு அவசியம். அதிக அளவில் புளிப்பு சேர்த்தலை தவிர்க்க வேண்டும். எண்ணையில் தயாரித்த உணவு பண்டங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

சிறுகீரை, அகத்தி கீரையை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்காய், பெரிய பாகற்காய், வாழைக்காய் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். கருவாடு, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை அடியோடு தவிர்க்க வேண்டும்.

புற்றுநோயை தடுக்கும் கறிவேப்பிலை.........

உணவின் வாசனையை அதிகரிக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடாதீர்கள். அதில் புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. கறிவேப்பிலையில் ஏ.பி.சி. கால்சியம், அமினோ அமிலங்கள் உள்ளது. இதனால் இது சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக இயங்குகிறது. இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. தக்காளியில் ஆண்களுக்கான புற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

தக்காளியில் அதுவும் சமைத்த தக்காளியில் புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. தக்காளியில் காணப்படும் லைக்கோபீன் என்றொரு பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் தர்ப்பூசணி பழம் ரோஸ் நிற திராட்சை பழங்களிலும் லைக்கோபீன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum