தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருப்பை கருப்பை கருப்பை

Go down

 கருப்பை கருப்பை கருப்பை Empty கருப்பை கருப்பை கருப்பை

Post  meenu Thu Jan 24, 2013 1:33 pm

மனித உறுப்புகளில் மகத்துவம் நிறைந்தது, கருப்பை. பெண் இனத்திடம் மட்டுமே இருக்கும் ஆக்க சக்தியின் அற்புதம் இது! கிட்டத்தட்ட முக்கோண வடிவத்தில் மேல் பகுதி விரிந்தும், கீழ் பகுதி குறுகியும் காணப்படுகிறது. 8 முதல் 9 செ.மீ. நீளம் கொண்டது.

கருப்பையின் வாய்ப்பகுதி பெண் உறுப்பில் இருந்து தொடங்குகிறது.கரு தங்குவதற்கு முன்னால், கருப்பையை தொட்டுப்பார்த்தால் நமது மூக்கைத் தொட்டால் எப்படி இருக்குமோ அதுபோல் சற்று கடினமாகத் தெரியும். கரு தங்கி வளரத் தொடங்கிய பின்பு தொட்டுப்பார்த்தால் நமது உதடுகளைத் தொடுவது போன்று மென்மையாக உணர முடியும்.

கருப்பை தசைகளால் ஆனது. அதன் உள்ளே ரத்தக் குழாய்களால் ஆன மெத்தை போல் எண்டோமெட்ரியம் உள்ளது. சினைப் பையில் இருந்து சினை முட்டை முதிர்ந்து- வெடித்து- வெளியேறி கருக்குழாயில் உயிரணுவை சந்தித்து, அங்கேயே கருவாகி, அது சில ரசாயனங்களை வெளிப்படுத்தும்.

அந்த ரசாயன மாற்றங்களால் கரு நகர்ந்து, 5-வது நாள் கருப்பைக்குள் செல்லும். அங்கேயே ஒட்டி வளரத் தொடங்கிவிடும். கருவை வளர வைப்பது எண்டோமெட்ரியத்தின் வேலை. முதலில் சிறிதாக இருக்கும் எண்டோ மெட்ரியம், பின்பு வளர்ந்து 9 மி.மீ. அளவை எட்டும்.

வயதுக்கு வந்த எல்லா பெண்களுக்கும் மாத விலக்குக்கு முந்தைய நாள்வரை எண்டோ மெட்ரியம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். உடலுறவு நிகழ்ந்து உயிரணு சென்று- சினை முட்டையும் வெளியேறி வந்து- இரண்டும் சந்தித்து கருவாக்கத்திற்கான செயல்கள் நிறைவேறாவிட்டால் இந்த எண்டோமெட்ரியத்திற்கு கருப்பைக்குள் வேலையில்லை.

அதனால் அது வெடித்து வெளியேறும். இதுதான் மாத விலக்கு உதிரம். (கருவாக்கம் நிகழ்ந்தால் எண்டோ மெட்ரியம் கருவை வளர்க்கத் தொடங்கிவிடும்) மாதவிலக்கு உதிரம் 200-300 மி.லி. அளவில் 2-3 நாட்களாக வெளியேறிக் கொண்டிருக்கும்.

`மாதவிலக்கு காலத்தில் தம்பதிகள் உறவு வைத்துக்கொண்டால் ஜன்னி வந்துவிடும்' என்ற கருத்து தவறானது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால் செக்ஸ் உணர்வு மிகுதியாகும்.

அப்போது செக்ஸ் வைத்துக் கொள்வது பெண்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும் என்டார்பின் ஹார்மோன் வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு கால வலியையும் குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான முறையில் உடலுறவை மேற்கொள்ளலாம்.

(மாதவிலக்கு கால உறவால் கர்ப்பம் ஏற்படாது) மாதவிலக்கு உதிரப்போக்கு அதிக நாட்கள் தொடர்வதும், ஒரே நாளில் வந்து நின்று விடு வதும் குறைபாடுதான். சிகிச்சை மூலம் அதற்கு உடனடியாக தீர்வு கண்டிட வேண்டும். கருப்பை வளரும் தன்மை கொண்ட திசு.

உள்ளே தங்கும் கரு வளர வளர கருப்பையும் வளரும். இரண்டு, மூன்று குழந்தைகளை தாங்கும் சக்தியும் அதற்கு இருக்கிறது. கரு, திசுவாகி- குழந்தையாக வளர்ந்த பின்பு கருப்பைக்குள் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், அதனை சுருங்கவைத்து குழந்தையை வெளியே தள்ளுகின்றன.

இதுவே பிரசவத்திற்கான தூண்டுதலாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum