தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஞாபக சத்தியை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழி

Go down

ஞாபக சத்தியை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழி Empty ஞாபக சத்தியை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழி

Post  ishwarya Sat May 11, 2013 1:57 pm

நினைவாற்றல் என்றால் என்ன? – ‘ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பதுதான் நினை
வாற்றல்‘ என்று பதில் வரும். ஆனால், இது சரியான பதில் இல்லை! மனதில்
இருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தைச் சரியான நேரத்தில்
வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார் கள் விஞ்ஞானிகள்!
‘‘ஒரு மாணவனை எடுத்துக் கொள்ளுங்கள். பாடங்களை நன்றாகப் படித்துவிட்டு
தேர்வுக்குச் செல்கிறான். அவன் படித்ததில் இருந்து கேள்விகள் வருகின்றன.
ஆனால், தேர்வறையில் இருக்கும்போது பதில் நினைவுக்கு வராமல் வீட்டுக்குச்
சென்றபிறகு நினைவிற்கு வந்தால், அதனால் ஏதாவது பலன் இருக்குமா? நிச்சயம்
இல்லை.
பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும். ஆனால், தேவையான நேரத்தில்
குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பார்கள்.
தேவைப்படும் நேரத்தில் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வருவதே சரியான
நினைவாற்றல்.
மூளையின் சக்தி என்பது அளவிட முடியாதது. ஒருவர் நூறாண்டுகள் வாழ்கிறார்.
இந்த 100 ஆண்டுகளில் ஒவ் வொரு வினாடியிலும் ஒரு சில விஷயங்களை நினைவில்
சேகரித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு விஷயங்களையும் அவர் நினைவில்
சேகரித்து வைத்தால்கூட தனது மூளை செயல்திறனில் 10ல் ஒரு பங்கை மட்டுமே
பயன்படுத்துகிறார். அந்தளவுக்கு திறன் வாய்ந்தது மனித மூளை‘‘ என்கிறார்கள்
விஞ்ஞானிகள்.
அதெல்லாம் சரி.. நினை வாற்றலை எப்படி வளர்ப்பது? ‘‘உடல் பயிற்சி மூலம் உடலை
ஆரோக்கியமாக பேணிக் காப்பது போல மூளைக்கான பயிற்சியும் இருக்கிறது. இதற்
கான பயிற்சியைச் செய்யும் போது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
நினைவாற்றலையும் மேம்படுத்தலாம்.
அடிக்கடி கணக்குப் போட்டுப் பார்ப்பது, கணக்கு சூத்திரங்களை
நினைவுபடுத்திக் கொண்டிருப்பது மூளைக்கு நல்ல பயிற்சியே. கணிதப் பாடத்தின்
போது கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் கையால் எழுதிப் பெருக்கி வகுத்துக்
கணக்குப் போடுவது மூளைக்கு மிகமிக ஏற்றது. அதேபோல ரயில் பயணம் செய்வதாக
வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட நேர இடைவெளி கடந்ததும் எத்தனை ஸ்டேஷன்கள்
கடந்திருக்கிறோம் என்று நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.
சுறுசுறுப்பாக இயங்குபவர் களுக்கு மூளை அதிகமாக வேலை செய்யும். மூளையில்
இருக்கும் ‘நியூரான்கள்‘ விவரங்களை வெளிக்கொணர வேகமாக ஆர்வம் காட்டும்.
குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டினால், மன அழுத்தம் குறையும். மன
அழுத்தம் அதிகமாக இருக்கும்போது ‘அட்ரினலின்‘ என்ற ஹார்மோன் சுரக்கும்.
அது குழந்தைகளின் நினைவாற்றலைக் கெடுக்கும். குழந்தைகளுக்கு சத்தான உணவு
வழங்குவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். அதிக புரோட்டீன்
உணவுகளும் பயனளிக்கும்‘‘ என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum