தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகரித்து வரும் கள்ளக்காதல், கொலைகள்

Go down

அதிகரித்து வரும் கள்ளக்காதல், கொலைகள் Empty அதிகரித்து வரும் கள்ளக்காதல், கொலைகள்

Post  meenu Thu Jan 24, 2013 1:07 pm

சமீப காலமாக நாடு முழுவதும் கள்ளக் காதலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மற்ற பிரச்சினைகளை விட கள்ளக்காதல் காரணமாகத்தான் நாட்டில் கொலைகள் அதிக அளவில் நடக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக விவாகரத்துகள்!

கணவன்- மனைவியிடம் உள்ள புரிந்து கொள்ளாத தன்மை, உணர்வுகளை சரிவர அறியாததால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், தேவையே இல்லாமல் சொல்லும் பொய்கள் போன்றவை குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படுத்துகின்றன.இக்குழப்பங்கள் தொடர்ந்து நீடித்தால் தம்பதியரில் யாராவது ஒருவர் இன்னொரு ஜோடியை தேடி சென்று விடுவர். இதே போல் நம் நாட்டில் 20 சதவீதம் பேர் கள்ள தொடர்பில் சிக்கி நிம்மதி இழந்து தவிக்கிறார்கள் என்கிறார்

சென்னையின் பிரபல செக்சாலஜிஸ்ட் நிபுணர் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறியதாவது:-

கலாசாரத்தை சீரழிக்கும் வகையில், தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேற்றி வரும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு சில சமூக அக்கறையற்ற சக்திகளால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது.

சங்க காலத்திலேயே காதல் இருந்தாலும், அதில் கண்ணியம் இருந்தது. தற்போது காதல் விவகாரம் கொலை செய்யும் அளவிற்கு விபரீதமாகிக் கொண்டிருக்கிறது. காதலுக்கு தடை போடும் பெற்றோர் கவுரவக் கொலை என்ற பெயரில் குற்றவாளிகளாக மாறி வருகின்றனர். ஆண்டு தோறும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் தொடர்பான கொலைகளின் எண்ணிக்கை ஜெட், வேகத்தில் உயர்ந்து வருகிறது.

கலாச்சார சீரழிவிற்கு சினிமாவும், டி.வி. தொடர்களும் ஒருபுறம் காரணமாக அமைகின்றன. நல்ல விஷயங்களை கொண்ட சினிமாக்களும், டி.வி. தொடர்களும் வந்தாலும், வன்முறை செக்ஸ், வக்கிரங்கள், கள்ளக்காதல் விஷயங்கள், சமூக ஒழுங்கீனங்களை சித்தரிக்கும் சினிமாக்களும், டி.வி. தொடர்களும், அதிகளவில் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஒரு ஆணும், பெண்ணும் காதலிக்கும் போது ஜாதி, மத பேதங்கள் இருக்காது. காதல் வீட்டிற்கு தெரியும் போது, அனைத்தும் தடைக்கற்களாக வந்து நிற்கின்றன. இதை உடைத்தெறிந்து சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். தோல்வியடைவோரில் சிலர் யதார்த்தத்தை உணர்ந்து மாறினாலும், சிலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு சென்று விடுகின்றனர்.

தொழில் நுட்ப வளர்ச்சியால் ஐ.டி. துறையின் தாக்கம் அதிகரித்து பெண்கள் அதிகளவில் பணிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர். இருவருக்கும் பணிச்சுமையால் ஏற்படும் மன இறுக்கம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது. துணையின் தேவையை பூர்த்தி செய்ய மறுத்தல் போன்றவை தற்போதைய கள்ளக்காதல், தற்கொலை மற்றும் விவாகரத்து வழக்குகளுக்கு அடிப்படையாக உள்ளன.

சில நேரங்களில் கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிய வரும் போது, சிலர் நாசுக்காக பிரிந்து விடுகின்றனர். சிலர் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகின்றனர். சென்னையில் சமீப காலமாக இதுபோன்ற கொலை சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. இந்த வகையில் 2007-ல் 123 கொலைகளும், 2008-ல் 155 கொலைகளும், 2009-ல் 217 கொலைகளும் பதிவாகியுள்ளன. இத்தகைய கொலைகளின் எண்ணிக்கை இந்தாண்டு சென்னையில் அதிகரித்துள்ளது.

திருமண வாழ்க்கை வசந்தமாக மாற:

தம்பதியர் இருவரும் திருமண வாழ்வில் ஒளிவு மறைவின்றி இருப்பது நல்லது. இருவரும் மனைவியிடம் தினமும் பேச வேண்டும். அன்று நடந்த விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை வாழ்வது நல்லதல்ல. ரகசியம் என்பது இல்லற வாழ்வில் இருக்க கூடாது. ஒருவர் சொல்வதை மற்றவர் பொறுமையாக கேட்டு நடக்க வேண்டும்.

இருவரும் பேசும் போது அதில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். அன்பை அதிகமாக பொழிய வேண்டும், இது கருத்து வேறுபாடுகளை எளிதில் கரைய வைத்து விடும். ஒவ்வொரு நாளும் எது எதற்கு, என்னென்ன செலவு செய்தேன் என்பதை துணைவியிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. என்ன பொருள் வாங்கினாலும் அது பற்றி தெரிவிப்பதும், நல்ல விஷயமே. தம்பதியர் வாழ்வில் வெற்றி அடைய 3 விஷயங்கள் முக்கியமானது.

1.அன்பு காட்டுவது,

2.பாராட்டி பேசுவது,

3.தாம்பத்யம்

இந்த மூன்றும் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்வில் கிடைக்கவில்லை என்றால் இயல்பாகவே இன்னொரு துணையை மனம் தேட தொடங்கி விடுகிறது. தொடக்கத்தில் இது நட்பாகத்தான் தொடங்கும். நாளாக நாளாக அது காதலாக மாறி விடும்.

அந்த சமயத்தில் மனதில் உள்ள கஷ்டங்களை , பிரச்சினைகளை அந்த நபரிடம் பகிர்ந்து முழு ஆறுதல் கிடைத்தது போன்ற உணர்வு கிடைத்து விடுகிறது. இதனால் தனது மனைவியை விட புதிய காதலி விசேஷமானவர் போலவும், பாலைவனத்தில் சோலைவனம் போலவும் தெரியும். காரணம் கள்ள காதலில் ஈடுபடும்போது இருவரும் தங்களது உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.

ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்காக நிறைய பொய்களை அவிழ்த்து விடுவார்கள். ஆனால் அதே காதலர்கள் இல்லற வாழ்க்கையில் புகுந்தால் சுயரூபம் ஒவ்வொன்றாக வெளிப்படும்.தேவையே இல்லாமல் கோபப்படுவார்கள். காரணம் கள்ள காதல் என்பது ரகசியமானது. அதில் நிறைய சுவாரசியம் இருப்பது போன்ற மாய தோற்றம் இருக்கும். அதே ஜோடி திருமணம் செய்யும் போதுதான் வாழ்க்கை கசக்கும். காரணம் அவர்களிடம் உள்ள தீயகுணங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட தொடங்குவதுதான்.

கள்ளக்காதலை துண்டிக்க வழி:

கணவனோ, மனைவியோ கள்ளக் காதலில் ஈடுபடுவது தெரியவந்தால் முதலில் அவர்கள் வேலையை வேறு ஊருக்கு மாற்ற வேணடும். ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவரை காதலித்தால் ராஜினாமா செய்ய வைப்பது நல்லது. கள்ளக் காதலர்கள் சந்திக்க விடாமல் செய்து போன் தொடர்பையும் துண்டிக்க வேண்டும்.

மனைவியானவர்கள் கணவர் தன்னை விட்டு விலகிச் செல்வதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதை சரிப்படுத்த முயற்சிக்க வேண்டும். வாரத்தில் கணவன்- மனைவி 15 மணி நேரம் மனம்விட்டு பேச வேண்டும். ஒருவரை ஒருவர் மன்னிக்கும் மனபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் கணவன் கள்ளக்காதலிக்கு குட்-பை சொல்லி விட்டு மனைவியிடம் நிரந்தரமாக தங்கி விடுவார். கள்ளக் காதலியையும் மறந்து விடுவார்.

பொருந்தாத காதல்:

ஒரு ஆண் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தை என்று தெரிந்தும் சில பெண்கள் காதலிப்பார்கள். இது தவறு என்று தெரிந்தும் அவர்கள் தொடர்ந்து இதில் ஈடுபடுவார்கள். இந்த காதல் பல சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த வகை ஜோடிகள் காதலுக்காக தனது வேலை, குழந்தை, குடும்பத்தை கூட தியாகம் செய்ய துணிந்து விடுவார்கள்.

அவர்களின் மனதில் காதலியின் முகம், அழகு மட்டுமே ஆக்கிரமித்து இருக்கும். இதேபோல் மிகவும் வயது குறைந்த இளைஞர்களை சில பெண்கள் காதலிக்கிறார்கள். இதுவும் பொருந்தாத காதல். காம இச்சை முடிந்ததும் இருவரும் பிரிந்து விடுவார்கள்.

பொழுதுபோக்குக்காக!

சில ஆண்- பெண்கள் காதலை பொழுது போக்காக வைத்திருக்கிறார்கள். இல்லற வாழ்வில் ஈடுபட்டாலும் பொழுது போக்கிற்காக கள்ளக்காதலை தொடரும் போக்கு அவர்களிடம் உள்ளது. இவர்களிடம் மெச்சூரிட்டி (முதிர்நிலை) சுத்தமாக இருக்காது. காதல் கெமிஸ்ட்டிரி (ரசாயனம்) மட்டும்தான் இருக்கும்.

இவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்த கெமிஸ்ட்ரி காரணமாக குரங்கு போல பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு வாழ்வை சீரழித்து விடுவார்கள். இவர்களிடம் உண்மையான சந்தோஷம், நிம்மதி சிறிதளவு கூட இருக்காது என்று உறுதிபட சொல்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் காமராஜ்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum