தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்களுக்கு வலியை ஏற்படுத்தும் செயல்கள்

Go down

கண்களுக்கு வலியை ஏற்படுத்தும் செயல்கள் Empty கண்களுக்கு வலியை ஏற்படுத்தும் செயல்கள்

Post  ishwarya Fri May 10, 2013 2:53 pm

சில நேரங்களில் நாம் செய்யும் ஒருசில செயல்களாலேயே கண்களில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது நமக்கு தெரியாது.

அதிலும் அது சாதாரணமான விஷயங்களாகத் தான் இருக்கும். இவ்வாறு கண்களுக்கு அதிகமான அளவில் கஷ்டம், அழுத்தம் போன்றவை தருவதால், வேறு பல நோய்களும் உடலில் வருகின்றன.

தூங்கிக் கொண்டு படித்தல்

படிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். அதற்காக படுக்கையில் படுக்கும் போது கூட படிக்க கூடாது.

ஏனெனில் அவ்வாறு படுக்கும் போது தூங்கினால், அவை கண்களுக்கு மிகுந்த தொந்தரவைத் தரும்.

எப்படியெனில் படுக்கும் போது படிப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் சில சமயங்களில் வலி கூட ஏற்படும்.

கம்ப்யூட்டர் பார்ப்பதால்

தொடர்ந்து கம்ப்யூட்டரை பார்த்து வேலை செய்வதாலும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது.

ஆகவே அவ்வாறு கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் போது பிரச்சனை வராமலிருக்க, கண்களுக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு வேலை செய்வது நல்லது.

பயணத்தின் போது படிப்பது

பயணத்தின் போது போர் அடிக்கும் என்பதால் புத்தகத்தைப் படிக்கலாம் என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் அது மிகவும் தவறானது ஒரு பழக்கம்.

அவ்வாறு படிக்கும் போது கண்கள் மிகவும் பாதிக்கப்படும். ஏனெனில் அந்த நேரம் நம் பார்வை ஒரே சீரான பார்வையில் இருக்காது, ஒருவித அசைவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆகவே அப்போது கண்களுக்கு மிகுந்த கஷ்டம் ஏற்படும்.

சூரிய வெளிச்சம்

வெளியே அளவுக்கு அதிகமான சூரிய வெளிச்சம் இருக்கும் போது, கண்களை சரியாக திறக்க முடியாமல், லேசாக திறந்து கொண்டு செல்வோம்.

ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள், கண்களைப் பாதிப்பதோடு, வறட்சியை ஏற்படுத்தி பார்வைக் கோளாறை உண்டாக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்லும் போது, கூலிங் க்ளாஸ் அணிந்து செல்ல வேண்டும்.

டிவி பார்ப்பது

டிவியும் கம்ப்யூட்டரைப் போன்று தான் கண்களுக்கு பிரச்சனையைத் தரும்.

அதிலும் எப்போதும் டிவியை மிகவும் அருகில் உட்கார்ந்து பார்த்தால், கண்கள் களைப்படைந்துவிடும்.

இந்த நேரம் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால், மிகுந்த தலைவலி கூட ஏற்படும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum