தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீரிழிவு நோயின் வீரியத்தை குறைக்க வெந்தயம் சாப்பிடுங்க

Go down

 நீரிழிவு நோயின் வீரியத்தை குறைக்க வெந்தயம் சாப்பிடுங்க Empty நீரிழிவு நோயின் வீரியத்தை குறைக்க வெந்தயம் சாப்பிடுங்க

Post  ishwarya Wed May 08, 2013 5:28 pm

வெந்தயம் உடலுக்கு நன்மை விளைவிக்க கூடியவற்றில் ஒன்று. வெந்தயத்தில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. வெந்தயகீரையின் இலை, தண்டு, விதை முதலியன பயன்தரக்கூடியவை. ஒரு சிறு வெந்தயச் செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும். இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது.

இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும். பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன்படுத்துவார்கள். பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். காய்களை காயவைக்கவேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள் விதை இரு பிளவு போன்றிருக்கும் அது 50 -110 மில்லி நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும்.

இதன் விதைகள் அதிகம் நார்சத்துகள் மற்றும் தண்ணீரில் கரையக்கூடிய தன்மை கொண்டது. இதை தண்ணீரில் ஊறவைக்கும் போது வெளிப்புற தோலானது நார்சத்துகளை சுரக்கிறது-. 100 கிராம் வெந்தயத்தில் 24.6 கிராம் அல்லது 65% நார்சத்துகளை வழங்குகின்றது. வெந்தயத்தின் முக்கிய சத்து நார்சத்து ஆகும். நார்சத்து மட்டுமல்லாது மாவுசத்து, பாலிசாக்கரைடுகள் சபோனின் மற்றும் பெக்டின் ஆகியவை அடங்கியுள்ளது.

வெந்தயம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும், பெண்கள் வெந்தயக்கீரையை சாப்பிட்டு வந்தால் தாய்பால் பெருகும் மேலும் தீப்புண்ணை ஆற்றும், மதுமேகம் குணமாகும், உடல் கட்டிகள் பழுத்து உடையச் செய்யும், வலி போக்கும். சர்கரை வியாதியைக் குறைக்கும். பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும். வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து புண் விரைவில் குணமாகும். வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும். தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.

முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும். முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum