தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மழை காலத்தின்போது நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?

Go down

மழை காலத்தின்போது நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?  Empty மழை காலத்தின்போது நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?

Post  ishwarya Wed May 08, 2013 2:08 pm

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், மழை காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய மின்பாதுகாப்பு குறிப்பு:

அதன் விவரம்:

மழை காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் அருகே செல்ல கூடாது.

மழையாலும், காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்கம்பி அருகே செல்ல கூடாது. எங்கேயாவது, மின் கம்பி அறுந்து விழுந்திருந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டும்.

மழை காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு தூரமாக செல்ல வேண்டும்.

இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடங்கள், வீடுகள், பஸ்கள், கார், வேன் போன்றவற்றில் தஞ்சமடைய வேண்டும். அதே நேரம் குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிழற்குடையின் கீழோ ஒதுங்க கூடாது.

உரிய இடம் இல்லை என்றால், மின் கம்பிகள், மின் கம்பங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம்.
திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க கூடாது.

டிவி, மிக்சி, கிரைண் டர், கம்ப்யூட்டர், தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த கூடாது.

ஒவ்வொரு வீட்டிற்கும் எர்த் பைப் போட வேண்டும். மேலும் அதனை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து பராமரிக்க வேண்டும்.
மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் அல்லது மின் கம்பத்தில் கயிறு கட்டி துணி காய வைக்க கூடாது.

மின் கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. அவற்றின் மீது விளம்பர பலகைகளை கட்ட கூடாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum