தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!! பெ.மணியரசன்

Go down

கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!! பெ.மணியரசன் Empty கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!! பெ.மணியரசன்

Post  ishwarya Mon May 06, 2013 4:40 pm

காத்திருந்து தமிழினத்தைக் காவுகொண்டுவிட்டது இந்தியா. நயவஞ்சகத்தை மறைத்திட, நளினப்பேச்சு; கூட்டங் கூட்டமாகக் கொல்வதை மறைத்திட, “பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாமல் போர் நடத்துக” என்னும் போலிக்கூற்று; விடுதலை இயக்கத்தைக் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கும் வெறியை மறைத்திட, ‘அரசியல் தீர்வு’ என்னும் ஆசை மொழி. ஈழத் தமிழினத்தை ஒழித்துக்கட்ட இந்தியா கையாளும் உத்திகள் இவை!

ஆறுகோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் அருகில் நம் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கில் காக்கை, குருவிகளைச் சுட்டுக்கொன்றால் கூட, உலக நாடுகள் தலையிட்டு, உயிர்வதை கூடாது என்றும், உயிரிச் சமன்பாட்டில் ஊனம் ஏற்படும் என்றும் கூறித் தடுத்திருக்கும். ஆனால் தமிழ் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஒரு நாடில்லை. பத்துக்கோடித் தமிழர்கள் நிலக்கோளமெங்கும் பரவிக்கிடந்தாலும், நமக்கென்று ஒரு நாடில்லை, ஓர் அரசு இல்லை. அரசியல் அநாதைகளாய்க் கிடந்து அழிகிறோம்.

சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள். உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல் கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர்.

பன்னாட்டுச் சட்டங்களும், ஐ.நா. மன்றமும் தடை செய்துள்ள பாஸ்பரஸ் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி இலட்சக்கணக்கான தமிழர்களைக் கடந்த சில மாதங்களில் மட்டும் கொன்றது சிங்களப்படை. உறுப்புகளை இழந்தும் தசைகள் அறுந்தும் உயிருக்குப் போராடியோர்க்கு மருத்துவ வசதி கிடையாது. அவர்களுக்குச் சிகிச்சையளித்த தமிழின மருத்துவர்களான சண்முகராசா, சத்தியமூர்த்தி, வரதராசா ஆகியோரைச் சிறையிலடைத்தார் இராசபட்சே. அம்மக்களுக்கு ஆதரவு காட்டியதற்காக மாவட்ட ஆட்சியர் பார்த்திபனைச் சிறையிலடைத்தார்.

விடுதலைப்போரில் உலகம் வியக்க வீரமும், போர் உத்திகளும் காட்டிய தளபதிகள் சொர்ணம், தீபன், ரமேசு, பெண் தளபதிகள் விதிஷா, துர்க்கா எனப் பலர் வீரச்சாவெய்தினர். மேலை நாடுகள் சிலவற்றின் முயற்சியில் கடைசி நேரத்தில் போர் நிறுத்தப்பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்களப்படை அழைத்ததின் போரில், வௌ;ளைக்கொடியுடன் பேச்சு நடத்தப்போன அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன், அமைதிப்பேச்சுச் செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்டோரை சிங்களப்படை சுட்டுக்கொன்றது.

வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (!6, 17.05.209), உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர். கடைசி நாட்களில் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டதாக டைம்ஸ் ஏடு குறிப்பிடுகிறது.

போரில் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆன குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமாய் இருந்து பிரபாகரன் காப்பாற்றினார். அந்த ஆயிரத்து ஐநூறு குழந்தைகள் என்ன ஆனார்கள்? எப்படி மரித்தார்கள் ? யார் அறிவார்? சாட்சியில்லாத, சாவுக் களமாயிற்றே அது! ஐ.நா.மனித உரிமைகள் அமைப்போ அல்லது செஞ்சிலுவைச் சங்கமோ எதையுமே அங்கு அனுமதிக்கவில்லை. உலக நாடுகளின் ஊடகத்துறையினரை போர்க்களப்பகுதியில் அனுமதிக்கவில்லை.

ஆரிய ரத்னாவான ஸ்ரீலங்கா ரத்னா என். ராமின் ‘இந்து’ ஏட்டின் செய்தியாளர் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டார். தமிழ் இன எதிர்ப்பில் சிங்கள வெறியர்களையும் விஞ்சிய ஏடான ‘இந்து’ உண்மைச் செய்திகளைத் தராது. சிங்களப்படை உருவாக்கிய செய்தியை அந்நோக்கில் மேலும் மெருகேற்றித் தந்து கொண்டிருக்கிறது.

மூன்றரை லட்சம் தமிழர்களை “இடைத்தங்கல் கூடாரம்”, “நல் வாழ்வுச் சிற்றூர்’ என்ற பெயர்களில் உள்ள இட்லர் கால வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிடாதபடி, மின்கம்பி வேலி எடுத்துக் காவல் புரிகின்றனர் சிங்களப் படையாட்கள். இந்த வதை முகாம்களில் படுகாயமுற்றுத் துடிக்கும் தமிழர்களின் சிறுநீரகம், கண்கள் போன்ற பல உறுப்புகளை அறுத்து எடுத்து சிங்களர்களுக்குப் பயன்படுத்த கொழும்புக்கு அனுப்புகிறார்களாம். அதுவும் மயக்கமருந்து கூட கொடுக்காமல் அறுக்கிறார்களாம். இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லையா?

எவ்வளவு காலத்திற்கு, இந்த மந்தை அடைப்புகள் நீடிக்கும்? இராசபட்சே சொல்கிறார் “குறைந்தது மூன்றாண்டுகளுக்காவது இவர்கள் இங்கே தங்கியிருக்க வேண்டும் ; அவர்களின் சொந்த ஊர்களில் அவர்களின் வீடுகள் போரில் நாசமடைந்துவிட்டன. புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். அந்த ஊர்களில் புலிப்படை கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளது. அவற்றை அகற்ற வேண்டும். இதையெல்லாம் செய்ய மூன்றாண்டுகள் தேவை” என்கிறார். ஆனால் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் சொந்த வீடுகளில் சிங்களரைக் குடியேற்றிக் கொண்டுள்ளார் இராசபட்சே. தமிழர்களின் ஊர்களைச் சிங்கள மயமாக்கிக் கொண்டுள்ளார். தமிழர்களுக்கெனத் தாயகப்பகுதியாக, வரலாற்றுக் காலம் தொட்டு இருக்கும் மண்ணை சிங்களர் குடியேற்றங்களாக மாற்றுகிறார். தமிழர் தாயகத்தை அழிப்பதே அவர் நோக்கம்.

எதிர்காலத்தில் எஞ்சியுள்ள, தமிழர்களிடையே, உதவித்தொகைகள் மூலம், போதைப்பழக்கத்தையும், பாலியல் சிதைவுகளையும் ஏற்படுத்தி, ஒரு தேசிய இன உணர்வற்று, சிங்களரை அண்டிப்பிழைக்கும் மக்களாகத் தமிழர்களை ஆக்கவேண்டும் என்பது இலங்கை அரசின் திட்டம்.

அமெரிக்காவில் புதிதாகக் குடியேறிய ஆங்கிலேயர்களும் மற்ற ஐரோப்பிய இனத்தவரும், வரலாற்றுக் காலம் தொட்டு அங்கு வாழ்ந்துவந்த மண்ணின் மைந்தர்களாகிய செவ்விந்தியர்களைப் போரிட்டுத் தோற்கடித்தனர். அதன்பின் உதவித்தொகைகள் மூலம் அவர்களிடம் இடைவிடாத போதைப் பழக்கத்தையும், வரம்பற்ற பாலியல் நாட்டத்தையும் உருவாக்கினர். இன்று செவ்விந்தியர்கள், வந்தேறிகளான வௌ;ளையரை எதிர்க்கவில்லை. அவர்களை அண்டிப் பிழைக்கின்றனர். அந்த அடிமை நிலைக்குத் தமிழர்களைக் கீழே தள்ளுவது தான் சிங்கள அரசின் திட்டம்.

இவ்வளவு பெரிய இனப் பேரழிவு இந்திக்காரர்களுக்கோ, வங்காளிகளுக்கோ, மலையாளி களுக்கோ அல்லது வேறு இனத்தவர்க்கோ எங்காவது அடுத்த நாட்டில் நடந்திருந்தால் இந்தியா இப்போது இருப்பதைப் போல் அமைதி காத்திருக்குமா? இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள தலித் தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களும் அமைதி காத்திருப்பார்களா? திராவிட மாநிலங்கள் என்று சொல்லப்படுகின்ற ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்கள் அமைதி காத்திருக்குமா?

கடந்த ஓராண்டுக்குள் இலட்சக் கணக்கில் ஈழத்தமிழர்கள் சிங்கள அரசால் கொல்லப்படுவதை ஒரே ஒரு தடவையாவது மன்மோகன் கண்டித்ததுண்டா? சோனியாகாந்தி கண்டித்ததுண்டா? வடநாட்டுத்தலைவர்கள் கண்டித்த துண்டா? இல்லை. ஏன்? தமிழர்கள் அவர்கள் இனமில்லை. அது மட்டுமா? ஆயுதங்களால் தமிழர்களைக் கொன்றது இலங்கை. அதற்கு ஆயுதங்களை வழங்கியது இந்தியா. ஆயுதங்களை மட்டுமா வழங்கியது? அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று சிங்களப் படையினர்க்குப் பயிற்சி கொடுத்தது இந்தியா. விடுதலைப் புலிகளுக்கு எதிராக உளவு வேலை பார்த்தது. ரேடார்கள் கொடுத்தது. செயற்கைக் கோள்கள் வழியாக, விடுதலைப் புலிகளின், பாசறைகள், நடமாட்டம் அனைத்தையும் அறிந்து இலங்கைப் படைக்கு அன்றாடம் துப்புச் சொன்னது.

உயிர்காக்கக் கடல் வழியே தப்பி ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்துவிடாமல் இலங்கை எல்லை நெடுகத் தனது கப்பல் படையை நிறுத்தி அவர்களைத் தடுத்தது இந்தியா. இதனால், சுற்றி வளைக்கப்பட்டு இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் கடந்த ஓராண்டாக, ஈழத்தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்திற்கு வர முடியவில்லை. ஈழத்தமிழர்கள், கேரளக் கடலில் கரையேற முயல்வார்கள் என்று கருதி அங்கும் காவலை வலுப்படுத்தியது இந்தியா.

இவற்றை அறிந்த ஈழத்தமிழர் 22 பேர், ஆந்திரக்கடலில் கரையேறப் பயணம் செய்தனர். ஆனால் திசை தடுமாறி, பல நாட்கள் கடலில் சுற்றித் திரிந்து இறுதியில் காக்கி நாடாவில் கரை சேர்ந்தனர். அப்போது அப்படகில் 12 பேர் பிணமாகக் கிடந்தனர். உணவு தீர்ந்து, தண்ணீரும் தீர்ந்து, தாகம் தாங்காமல், கடல் நீரைக்குடித்து, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு - இப்படிப் பட்டினியாலும் வயிற்றுப் போக்காலும் 12 பேர் செத்துப்போயினர். இவ்வளவு கொடுமைகளையும் இந்தியா தமிழர்களுக்கு இழைப்பதேன்?

இந்தியா தமிழர்களுக்கான தாயகம் அல்ல. தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு இந்தியாவில் ஒரு காலனியாக இருக்கிறது. “இராசீவ் காந்தி தமிழ்நாட்டில் கொல்லப்பட்டார் ; அது விடுதலைப் புலிகளால் நடந்தது ; அதனால் இப்படி இந்தியா பகையாகிப் போனது “ என்று நடுநிலையாளர் சிலர் வாதிடக்கூடும். இந்தியாவின் இனச்சார்பு மற்றும் இனப்பகை அரசியலை அறியாதவர்களும், தமிழ்நாட்டுக்கு இந்தியா இழைத்து வரும் இரண்டகங்களை அறியாதாரும் இராசீவ் கொலையைக் காரணமாகக் கருதிக்கொள்வர்.

தமிழர்கள் மீது வரலாற்றுக் காலந்தொட்டு ஆரியர் கொண்டுள்ள பகைமை உணர்ச்சியை பழிவாங்கும் திட்டத்தை மறைக்க விரும்புவோரும் இராசீவ்காந்தி கொலையை நயவஞ்சகமாகக் காரணம் காட்டுகின்றனர். இராசீவ்காந்தி இந்திய அமைதிப்படை என்ற பெயரில் ஓர் ஆக்கிரமிப்புப் படையை அனுப்பி ஆறாயிரம் தமிழர்களை - ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொன்றொழித்தார். இந்தியப்படையினர் ஈழத்தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டு சீரழித்தனர். இவற்றின் எதிர்வினைதான் இராசீவ் கொலை.

நல்ல பாம்பு யாரையும் தேடிப் போய் கடிக்காது; “விதித்தால் கடிக்கும் அல்லது மிதித்தால் கடிக்கும்” என்பர். இங்கு மிதித்ததால் கடிபட்டார் இராசீவ்! இதேபோல், சீக்கிய மக்களை மிதித்ததால், இந்திராகாந்தி கொல்லப்பட்டார். அந்த சீக்கிய இனத்தோடு கூடிக் குலாவுகிறது இந்தியா. அவர்களுக்குப் பிரதமர் பதவியே கொடுக்கிறது! அது எப்படி?

இந்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும் தமிழ் ஈழம் அமைவதை எதிர்ப்பார்கள். இழந்த பகுதிகளை மீட்டு ஆனையிறவையும் மீட்டனர் புலிகள் 2001-இல்! அடுத்து யாழ்ப் பாணத்தை மீட்கப் படையெடுக்கப்போகிறார்கள் என்ற நிலை ஏற்பட்டது. யாழ்ப் பாணத்தில் அப்போது 16 ஆயிரம் சிங்களப் படையினர் இருந்தனர். அந்தப் 16 ஆயிரம்பேரையும் பிணமாகவோ உயிருடனோ புலிகள் பிடித்துவிடுவார்கள் என்ற நிலை. அன்று ஆட்சியிலிருந்த பா.ஜ.க. புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்கக் கூடாது என்று நிபந்தனை போட்டது. சிங்கள அரசுக்குப் போர்க்கப்பல் கொடுத்தது. யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்காமல் புலிகளைத் தடுக்கவேண்டும் என்று சி.பி.எம். கட்சி அறிக்கை வெளியிட்டது. அக்கட்சித்தலைவர்களில் ஒருவரான உமாநாத் இலங்கைக்கு இந்தியா இலவசமாக ஆயுதம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். இதுதான் இந்தியா!

தில்லி ஏகாதிபத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பா.ஜ.க. இருந்தாலும், இடதுசாரிகள் தலைமை தாங்கினாலும், ஈழம் பிறப்பதை ஏற்க மாட்டார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளது. அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைமையின் நிலை வேறு; அனைத்திந்தியத் தலைமையின் நிலை வேறு.

இராசீவ்காந்தியின் மனைவி என்பதால் சோனியா, ஈழத்தமிழர் அழிப்பில் மிகை முனைப்புக் காட்டுகிறார். மற்றபடி, காங்கிரசில் வேறு யாருமோ அல்லது பா.ஜ.க.வோ அல்லது இடதுசாரிகளோ இந்திய ஆட்சிக்கு, யார் தலைமை தாங்கினாலும், ஈழம் பிறப்பதைத் தடுத்திட அவர்கள் படையினரைப் பயன்படுத்துவார்கள். இந்தியா, தமிழ் இனத்தோடு, தமிழ்நாட்டிலும் சமரசம் ஆகவில்லை. ஈழத்திலும் சமரசம் காணவில்லை.

காவிரி நீர் உரிமையைக் கன்னடர் பறிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும் இந்திய அரசு கன்னடர் பக்கம் சாய்காலாக இருந்து அத்தீர்ப்புகளை செயல்படுத்த மறுத்தது. அதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் ஞாயத்தை ஏற்றுத் தீர்ப்புக் கொடுத்தாலும், இந்திய அரசு மலையாளிகளுக்குச் சாய்காலாக இருந்து அத்தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்தது. இவற்றைப்பார்த்த தெலுங்கர், ஆந்திராவில் பாலாற்றில் அணைகள் கட்டிக் கசிவு நீரும் தமிழகத்திற்கு வராமல் தடுக்க முற்பட்டுள்ளனர்.

ஒரு சுண்டைக்காய் நாடான சிங்களம், 450-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்ல ஊக்க மூட்டியது இந்தியாதான். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடல் இருக்கிறது. இரண்டு நாடுகளும் நான்குமுறை போரிட்டுக் கொண்டன. அடுத்த போர் எப்போது என்ற ஆயத்தத்தில் இருக்கின்றன. ஆனால் எல்லைதாண்டி வந்த மீனவர்களை இருநாடுகளும் சிறைப்பிடித்தார்களே அன்றி சுட்டுக்கொல்லவில்லை. இந்தியாவுக்கும், தமிழர் களுக்குமான அடிப்படை முரண்பாடு இனப்பகைமைதான். இது மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது.

அக்காலத்தில் இந்தியா இல்லை. இக்கால இந்திய ஆளும் வர்க்கத்தின் முதன்மைப்பிரிவினரின் முன்னோர்கள் இருந்தார்கள். அவர்கள் இனத்தின் பெயர் ஆரியர். இந்த இனப்பகைமைக்கு அடுத்த இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை முக்கியத்துவம் கொண்டவைதான், இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கையும் (புவிசார் அரசியலும்) பொருளியல் சுரண்டலும்.

கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இந்தியாவை நோக்கி நட்புக் கை நீட்டினார். மதியுரைஞர் ஆண்டன் பாலசிங்கம் இந்திய அரசு அதிகாரிகளுடன் பேசினார்; ஊடகங்கள் வழியாக விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை வெளிப் படுத்தினார். (இந்திய அரசு குறித்த புலிகளின் நிலைபாட்டை அப்போதிருந்தே த.தே.பொ.க. ஆதரிக்கவில்லை) தமிழீழ அரசு அமைய இந்தியா உதவி செய்தால், இந்தியப் பெருங்கடலில் அது இந்தியாவின் காவல் அரணாக விளங்கும் என்றார் பிரபாகரன்.சிங்களப்படைக்கு இந்தியா ஆயுதம், நிதி பன்னாட்டு அரசியல் ஆதரவு ஆகிய உதவிகளை அள்ளி அள்ளி வழங்கிய போதும் கூட கடைசிவரை, பிரபாகரன் இந்தியாவைக் கண்டிக்கவில்லை. மாறாக நட்பிற்குத்தான் நாடினார்.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வழிவகுத்துள்ளது. இலங்கையில் உள்ள அம்பன் தோட்டா என்ற துறைமுகத்தை சீனாவுக்குக் கொடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கப் பரவலை எதிர்கொள்ள தமிழீழத்தை ஏற்பதுதானே இந்தியாவின் புவிசார் அரசியலுக்கு உகந்த உத்தியாகும். ஏன் அத்திசையில் இந்தியா திரும்பவில்லை?

தமிழர்களை நம்பத் தயாராக இல்லை இந்தியா. தமிழீழத் தமிழர்களையும் நம்ப முடியாது. தமிழ்நாட்டுத் தமிழர்களையும் நம்ப முடியாது என்பது அதன் கணக்கு. ஆரியர்கள் வரலாற்று பகைமையைக் கணக்கில் எடுக்கத் தவறமாட்டார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி ஏமாறும் குணமுடையோர் தமிழர்கள். வங்காள தேசத்தைப் பிரித்துத் தந்தது போல், ஈழத்தைப் பிரித்தால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் உள்ள வங்காளிகளை இந்தியா நம்புகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களை நம்பவில்லை. தமிழைத்தவிர, இந்தியாவில் உள்ள பெரிய மொழிகள் அனைத்தும் வடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. தமிழிலிருந்து பிரிந்த “திராவிட” மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை வடமொழிக் கலப்பால் உருவானவை. வடமொழிச்சார்பின்றித் தனித்து நிற்கக் கூடிய ஒரே மொழி தமிழ் மட்டுமே!. தமிழ் இனம் மட்டுமே இன்னும் மரபினக் கூறுகளைக் கூடுதலாகக் கொண்டு பார்ப்பனியத்தையும் வடநாட்டு அரசியல், பண்பியல் ஆதிக்கத்தையும் கூடுதலாக எதிர்த்து வருகிறது. நமக்கு இணையாக, இந்தியத்தையும், ஆரியத்தையும் எதிர்ப்பவர்கள், வடகிழக்கு மாநிலங்களில் மங்கோலிய மரபினத்திலிருந்து பிறந்த தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அம்மாநிலங்களில் வங்காளிகள் குடியேற்றத்தை மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது இந்தியா. வங்காளிகளை வெளியேற்றக் கோரி அசாமில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அதில் உள்ள ஞாயத்தைப் பார்க்காமல் படையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது இந்தியா. அப்போது மக்கள் எழுச்சியை அடக்கமுடியாமல, அசாம் மாணவர் அமைப்புடன் ஓர் உடன்பாடு கண்டார் இராசீவ்காந்தி. அந்த உடன்பாட்டை செயல்படுத்தாமல் இந்தியா முடக்கிவிட்டது. அப்போதைய மாணவர்களில் ஒரு பிரிவினர் தேர்தல் கட்சி அமைத்துச் சீரழிந்தனர். இன்னொரு பிரிவினர் (உல்பா) அசாம் விடுதலைப் போராட்டம் நடத்துகின்றனர்.

காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம் அடிப்படையில் தேசிய இனம் சார்ந்ததே. அப்போராட்டத்திற்கு வெறும் மதச்சாயம் பூசுவது இந்தியாவின் பார்ப்பனிய உத்தியாகும். அயல் இனப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தி லிருந்து விடுதலை பெறப்போராடும் சிறுபான்மை இனம், மக்களைத் திரட்ட ஓரளவு மதத்தையும் பயன்படுத்தத்தான் செய்யும். அதைக் குற்றமாகக் கருத வேண்டியதில்லை.

தமிழ்நாட்டில் முதல் விடுதலைக் குரல் 1938- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எழுந்தது. அப்போது, “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தந்தை பெரியார் குரல் கொடுத்தார். மறைமலை அடிகளார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தமிழறிஞர்கள் அப்போது பெரியாருடன் கூட்டாக இருந்து அம்முழக்கத்தைத் திரும்பக் கூறினர்.

பெரியார் இறுதிவரை தனித்தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். 1949-இல் உருவான தி.மு.க தனித் திராவிட நாடு இலட்சியத்தை முன்வைத்தது. திராவிடநாடு கிடைக்காவிட்டாலும் தமிழ்நாடு கிடைக்கும் என்ற உறுதியில் தமிழ் மக்கள், தி.மு.க.வின் தனி நாட்டுக்கோரிக்கையை ஆதரித்தனர். தனி நாட்டுக்கோரிக்கைக்குப் பெருந்திரளாக, தேர்தல் வழி ஒப்புதல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்கும். தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிறுத்தி தி.மு.க, இரண்டு பொதுத் தேர்தல்களைச் சந்தித்தது. 1957-ல் 15 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. 1962-இல் 50 சட்டமன்றத்தொகுதிகளைக் கைப்பற்றியது.

ஆனால், அக்கழகம் பிரிவினைத் தடைச்சட்டம் பின்னர் வரப்போகிறது என்று தெரிந்ததும் 1963-இல் தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துதான் இந்தியா, தமிழர்களைச் சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களோ, தங்களின் சொந்த இனத்தின் வரலாற்றையும், அதன் தனித்தன்மையையும், அதன் பெருமிதத்தையும் உணராமலும், வரலாற்று வழிப்பட்ட இனப்பகையின் வஞ்சகத்தை முழு அளவில் அறியாமலும், தங்களை ‘இந்தியன்’ என்று சொல்லி ஏமாறுகின்றனர்.

இந்தியா, தமிழினத்தைக் காக்கும் என்று நம்பித் தோற்கின்றனர். தனது அடிமை நிலையைத் தமிழினம் அடையாளம் கண்டுகொள்ளாமல் மயக்குவதற்காகத் தமிழ்நாட்டில் கங்காணிகளை அரவணைத்தது இந்தியா. தனிநாடு கேட்ட தி,மு.க தில்லியின் தலைமைக் கங்காணியாக மாறியது. தி.மு.க. விலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க., தாயை விஞ்சிய குட்டியாக இந்திய ஆதிக்கத்தைத் தீவிரமாக ஆதரிக்கிறது. பார்ப்பனியத்தில் காலூன்றி நிற்கும் பார்ப்பன அம்மையாரின் தலைமையையும் அக்கழகம் ஆராதிக்கிறது. தமிழ், தமிழன், தலித்தியம் என்று பேசிக் கொண்டிருக்கும் மற்ற சிறு சிறு தேர்தல் கட்சிகளும் சாரத்தில் கங்காணி வேலை பார்ப்பவையே.

கங்காணி வேலை பார்க்காத கட்சிக்கு தேர்தல் அரசியலில் வாய்ப்பு ஏதும் இல்லை. இந்திய ஒருமைப்பாட்டையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் ஏற்றால்தான் தேர்தலில் நிற்க முடியும் என்பது முதற்காரணம். பெரிய கங்காணிக்கட்சிகளில் ஒன்றுடனோ அல்லது இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றுடனோ கூட்டணி சேர்ந்தால் தான் சில இடங்களாவது இச்சிறு கட்சிகளுக்குக் கிடைக்கும் என்பது இரண்டாவது காரணம்.

இவ்வளவு பெரிய இனப்பேரழிவு ஈழத்தில் ஒருநாளில் நடத்துவிடவில்லை. ஓராண்டாகப் போர் நடந்தாலும் கடந்த செப்டம்பர் மாதம் தீவிரம் அடைந்தது. அக்டோபர் இரண்டில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சியில், போர் நிறுத்தம் கோரித் தமிழ் நாடெங்கும் அனைத்துக்கட்சி உண்ணாப்போராட்டம் நடந்தது. அதன்பிறகு கூட்டாகவும், தனியாகவும் பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள் போராட்டங்களைத் தொடர்ந்தன. ஆனால் தேர்தல் கட்சிகள் தலைமைதாங்கிய போராட்டம் எதுவும் இந்திய அரசை எதிர்த்து நடைபெறவில்லை.

இலங்கை அரசு போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு இந்திய அரசைக் கோரினார்களே அன்றி, இந்திய அரசு அலுவலகங்களை, நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் முடக்கும் போராட்டம் எதையும் நடத்தவில்லை. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் தி.க., தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகிய மூன்றும் அமைத்த கூட்டமைப்பான ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ தஞ்சையில் இந்திய விமானப்படைத்தள முற்றுகை, இந்திய அரசின் வரிவசூல் அலுவலங்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் ஆகியவற்றை நடத்தியது. த.தே.பொ.க.வும், த.தே.வி.இ.யும் கூட்டாக இந்திய, சிங்கள அரசுகளின் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தின.

இந்தியாதான் ஆயுதம், நிதி, அரசியல் உதவிகள் செய்து ஈழத்தமிழர் அழிப்புப் போரை இயக்குகிறது என்கிற செய்தி தேர்தல் கட்சிகளின் தலைவர்கள் அனைவர்க்கும் தெரியும். திருட்டுப்பொருளை மீட்டுத்தருமாறு, திருடியவனிடமே புகார் கொடுத்தது போல், இந்திய அரசிடமே இத்தலைவர்கள் முறையிட்டார்கள். இக்கட்சிகள் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. தலைமையில் என்றைக்கும் கூட்டணி சேர்பவை. அக்கட்சிகளின் கீழ், பதவி பெறுபவை. எனவே இக்கட்சிகள் என்ன எக்காளமிட்டாலும், எதிர்த்துப்பேசினாலும் இவற்றின் கட்டுத்தறி தில்லியில் உள்ளது. அதில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் நீளத்திற்கு இக்கட்சிகளின் தலைவர்கள் கண்டிப்பார்கள், எச்சரிப்பார்கள். இவற்றையெல்லாம் ஏளனப் புன்னகையோடு தில்லி எசமானர்கள் ரசிப்பார்கள். இந்திய அரசு நிறுவனங்களை முடக்கும் அளவிற்கு இக்கட்சிகள் போகமாட்டா.

தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோகும் போதும் மேற்படி சிறு சிறு தேர்தல் கட்சிகள், இந்திய அரசு நிறுவனங்களை முடக்கும் அளவிற்குப் போராட்டங்களை நடத்தமாட்டா. ஈழத்தில் இன அழிப்புப்போர் நடைபெறும்போது தமிழ்நாட்டில் கொந்தளிப்பு வராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை, இந்திய அரசு ஏற்றது. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளை நம்பித்தான் காங்கிரஸ் அரசு இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதனடிப்படையில் இலங்கை அரசுக்கு உறுதியும் கொடுத்தது.

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் செயலலிதா, இயல்பிலேயே தமிழின எதிர்ப்பாளர். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகக் கருதுபவர். தனித்தமிழ் ஈழத்தை எதிர்ப்பவர். இந்திய அரசு இராணுவத்தை அனுப்பிப் பிரபாகரனைப் பிடித்துவந்து இந்தியாவில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் (16.04.2002) தீர்மானம் நிறைவேற்றியவர். "போர் நடக்கும் போது பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று இரண்டு மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டார். ஷஈழத்தமிழர’ என்று சொல்வது தவறு, ஷஇலங்கைத் தமிழர்’ என்றே கூறவேண்டும் எனச் செய்தியாளர்களைத் திருத்தினார். அவர் தேர்தல் ஆதாயத்திற்காக திடீரென்று ஒரு நாள் (09.04.2009) ஈழத்தமிழர்களுக்காக உண்ணாப்போராட்டம் நடத்தினார். 15- வது மக்களவைத்தேர்தல் நெருங்க, நெருங்க, ஈழத்தமிழர் சிக்கல் தேர்தல் சிக்கல் ஆகிவிட்டதை அறிந்து கொண்ட செயலலிதா “இராணுவத்தை அனுப்பித் தனி ஈழம் அமைத்துத் தருவேன்” என்று தேர்தல் கூட்டங்களில உறுதியாகப் பேசினார். அப்பேச்சு நம்பகத்தன்மை குறைந்த நபரிடமிருந்து வந்ததால் அதை உண்மை என்று கருத முடியவில்லை. மேற்கண்ட கடைசி நேரம் தவிர மற்ற காலங்களில் ஈழத்தமிழர் அழிப்புப் போரை ஆதரித்து வந்தவர்தாம் செயலலிதா.

இப்போது தேர்தல் முடிவுகள் வந்து, ஈழத்திலும் பேரழிவு நிகழ்ந்து, விடுதலைப்புலிகளுக்கு தற்காலிகத் தோல்வி ஏற்பட்டுள்ள நிலையில், தனி ஈழம் குறித்தும், புலிகள் குறித்தும் எதுவும் கருத்து தெரிவிக்காமல், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயர்துடைப்புப் பணிகள் ஐ.நா.மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்பதோடு நிறுத்திக்கொண்டுள்ளார் செயலலிதா. இனி எப்படி இச்சிக்கலை அணுகுகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டக் கூடிய வல்லவர். சாரத்தில் அவரின் நிலைபாடுகள் இராசபட்சே - சோனியா கும்பல் நடத்தும் தமிழ் இன அழிப்பைத் தாங்கிக்கொள்ளும் மனநிலையைத் தமிழர்களிடம் உண்டாக்கும் நோக்கங்கொண்டவை. தமிழினத்தை ஆயுதத்தால் அழித்தார் இராசபட்சே; அதற்கு ஆயுதம் கொடுத்தார் சோனியர் அந்த அழிவு கண்டு தமிழ்நாடு கொந்தளிக்காமல் இருக்க உளவியல் போர் நடத்தினார் கருணாநிதி.

ஐ.நா. மனித உரிமை அமைப்பும், ஐரோப்பிய நாடுகளும், போரில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள், அது கூடாது என்று கண்டித்த போது இராசபட்சே சொன்னார்: "பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் போர் நடக்கிறது. மக்களுக்கு எதிராக அல்ல”. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றார் இராசபட்சே.

இதை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றிவளைத்து மென்மையான சொற்களில் சொன்னார் கருணாநிதி: "ஈழ விடுதலைக்கு என்று இயக்கம் ஆரம்பித்து, சகோதரச் சண்டையில் ஈடுபட்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு இன்று கேள்விக்குறியாக நிற்க்கிறது. ஆனால் பிரபாகரன் என் நண்பர்” விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்தாம் என்ற மனநிலையைத் தமிழர்களிடையே உருவாக்கும் உளவியல் பணியைக் கருணாநிதி மேற்கொண்டார். பிறகு, “இன்னும் சில நாட்களில் பிரபாகரனைப் பிணமாகவோ அல்லது உயிருடனோ பிடித்து விடுவோம்’ என்று இராசபட்சே கொக்கரித்தார். அவ்வாறு பிரபாகரன் பிடிபட்டால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும் என்று கருதினார்கள். எனவே, பிணமாகவோ, உயிருடனோ பிடிபவடுவது உறுதி என்பதைத் தமிழ் நாட்டு மக்களிடம் முன்கூட்டியே தெரிவித்து, திடீர் அதிர்ச்சி வராமல் தடுத்து, அந்நிகழ்வை இயல்பான ஒன்றாக ஆக்கிட கருணாநிதி முயன்றார். அதற்காக அவர் சொன்னார்,

“பிரபாகரனைக் கைது செய்தால் அலெக்சாந்தர், போரஸ் மன்னனை நடத்தியதைப்போல் கவுரமாக நடத்த வேண்டும்.” பிரபாகரன் கைது உறுதி என்பதைத் தெரிவிக்கும் அதே வேளை அவர் மீது அக்கறைப்படுவதுபோல் காட்டிக்கொள்ளும் உளவியல் உத்தி இது. பிறகு ஆங்கிலத் தொலைக் காட்சி (என்.டி.டி.வி) செவ்வியில் “பிரபாகரன் கொல்லப்பட்டால் என்ன கருதுவீர்கள்” என்று கேட்டதற்கு “மிகவும் வருத்தப்படுவேன”; என்றார். பிரபாகரன் கொல்லப்படுவது நடக்கக்கூடிய ஒன்றுதான் என்று முன்கூட்டியே கூறித் தமிழர்களின் மனநிலையை இயல்புப்படுத்தும் - அதாவது உணர்வுகளைச் சமன்படுத்தும் உளவியல் உத்திதான் இந்த வினாவும்,

அதற்கான விடையும். “பிரபாகரனை ஏன் கைது செய்ய வேண்டும்? கைது செய்யக்கூடாது. அவரை ஏன் கொல்ல வேண்டும்? கொல்லக்கூடாது, போரை நிறுத்தி அவருடன் அமைதிப்பேச்சு நடத்த வேண்டும் என்பது தி.மு.க. நிலைபாடு; அதுவே தமிழக அரசின் நிலைபாடும;’, என்றல்லவா கருணாநிதி விடையளித்திருக்க வேண்டும.; போர் நிறுத்தம் வேண்டும் என்று தானே கருணாநிதி மனிதச் சங்கிலி நடத்தினார். சட்டப்பேரவையில் “இறுதித்” தீர்மானம் போட்டார் ; பேரணி நடத்தினார். அந்த நிலைபாட்டுக்கு நேர் முரணாக, “பிரபாகரன் கைது செய்யப்பட்டால், பிரபாகரன் கொல்லப்பட்டால”; என்ற நிலைபாடுகளை அவர் ஏன் எடுக்க வேண்டும்? திடீர் குட்டிக்கரணம் அடித்து செயலலிதா தனி ஈழத்தை ஆதரித்துப் பேசியபின், அதை முறியடிக்கக் காலை உணவுக்கும் பகல் உணவுக்கும் இடையில் “சாகும்வரை பட்டினிப்போராட்டம்” நடத்தி ‘உலகச் சாதனை’ படைத்தார் கருணாநிதி. போர்நிறுத்தம் செய்ய உறுதி அளித்து விட்டது இலங்கை அரசு என்று கூறி உண்ணாமையை நண்பகல் முடித்துக்கொண்டார். அன்று மட்டும் 272 பொதுமக்களை சிங்களப்படை கொன்றது. மறுநாள் 172 பேரைக் கொன்றது. அடுத்த நாள் ஆயிரம் பேரைக் கொன்றது. இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார்.

இவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டது வெறும் தூவானம் போன்றது தான் அவருக்கு! பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக 18.05.2009 அன்று இலங்கைப் படை அறிவித்தது. 19.05.2009 அன்று பிரபாகரன் உடல் கிடைத்ததாக, ஒட்டு வேலை செய்து ஓர் உடலைக்காட்டியது சிங்களப்படை. 20.05.2009 நாளேடுகளில் அப்படம் வெளிவந்த தினத்தந்தியில் கருணாநிதியின் வசன கவிதை ஒன்று வந்தது. புறநானூற்றில் உள்ள புலவர் பக்குடுக்கை நன்கணியார் பாடல் அது. அதற்கு விளக்கம் எழுதியிருந்தார் கருணாநிதி. அதன் பொருள் இதுதான். “ஒரு வீட்டில் திருமணப் பறையொலி கேட்கிறது; இன்னொரு வீட்டில் சாவுப்பறையொலி கேட்கிறது. ஒரு வீட்டில் இளங்காதலர்கள் தழுவிக் கொள்கின்றனர். இன்னொரு வீட்டில் கணவனைப்பிரிந்தோர், கண்ணீர் விடுகின்றனர். இவ்வாறு மகிழ்வும் துயரமும் ஒருசேரப் படைத்து விட்டான் பண்பில்லாத படைப்பவன். உலகின் இவ்வியல்பு உணர்ந்த யாவரும் துன்பந்தருவனவற்றைச் சிந்தை செய்யாது, இனியனவற்றை மட்டும் கண்டு மகிழ்வாராக”.

தேர்தல் முடிவுகள் வந்த வெற்றிக் களிப்பில், இந்திய அரசின் அமைச்சர்களாகப் போகிறார்கள் பிள்ளைகள

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum