கூடங்குளம் அணுஉலை செயல்பட சுப்ரீம் கோர்ட் அனுமதி
Page 1 of 1
கூடங்குளம் அணுஉலை செயல்பட சுப்ரீம் கோர்ட் அனுமதி
ட்டுள்ளது. முதல் கட்டமாக அங்கு இரண்டு அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இந்த அணு உலைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தியா- ரஷியா நாடுகளின் அணுசக்தி அமைப்புகள் கூட்டாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த உள்ளன. எல்லா பணிகளும் முடிந்த நிலையில், கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்கள் இந்த அணுமின் நிலையத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதாக இல்லை. மேலும் இந்த திட்டத் தால் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதை மறுத்த மத்திய அரசு, உலகிலேயே கூடங்குளம் அணுமின் நிலையம் அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டிருப்பதாகவும், எத்தகைய இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும் இந்த அணுமின் நிலையத்தால் பாதிப்பு வராது என்று கூறியது.
இதையடுத்து அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள், 'பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
அப்போது மத்திய அரசு, ''கூடங்குளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன'' என்று கூறியது. அதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்குத் தேவையான யுரேனியத்தை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கியது.
அதன் பிறகு 3 மாதங்கள் விசாரணை நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் விசாரணை முடிந்த நிலையில் இறுதித் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த வழக்கில் இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் தீர்ப்பில் ''கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தடை இல்லை'' என்று அறிவித்தனர். 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-
இந்தியாவின் அணுசக்தி கொள்கையை சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக மதிக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக குழுக்கள் அனைத்தும் கூறி இருப்பதை கோர்ட்டு ஏற்றுக் கொள்கிறது.
நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு பெற வேண்டுமானால் மின்சாரம் அதிகம் தேவை. பொதுமக்கள் நலன் கருதி கூடங்குளத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை கோர்ட்டு விரும்புகிறது. எனவே கூடங்குளத்தில் அணு உலைகள் செயல்பட எந்த தடையும் இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் நடப்பு தலைமுறையினருக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் அணு மின்சாரம் தேவை. எனவே கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
ஏழைகள், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டே கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையம் செயல்பட்டால் நாடு விரைவான வளர்ச்சி பெறும். கூடங்குளம் அணுமின் நிலையம் எல்லா வகையிலும் பாதுகாப்பாக உள்ளதாக பல்வேறு நிபுணர் குழுக்கள் உறுதிபடுத்தியுள்ளன. இதை கோர்ட்டு ஏற்றுக் கொள்கிறது.
கூடங்குளத்தில் மின்சாரம் தயாரித்து முடிக்கப்பட்ட பிறகு வெளியேற்றப்படும் கழிவுகளை மத்திய அரசு பொறுப்பு ஏற்று கையாள வேண்டும். எனவே இதில் மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை. அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை திரும்ப பெறலாம். இதற்காக நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா கூறினார்கள்.
கூடங்குளத்தில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் 620-வது நாளான இன்று இறுதி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் 50 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படும். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தப்படும். அந்த வகையில் முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரத்தை தினமும் உற்பத்தி செய்வதற்கு இன்னும் 8 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
மத்திய- மாநில அரசுகள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது அதில் இருந்து சுமார் 650 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். இதையடுத்து இன்னும் 6 மாதம் கழித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையும் செயல்பட தொடங்கும்.
அப்போது தமிழ்நாட்டுக்கு மேலும் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். மின்வெட்டால் கடும் சிரமத்துக் குள்ளாகி இருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு இது ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
இந்தியா- ரஷியா நாடுகளின் அணுசக்தி அமைப்புகள் கூட்டாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த உள்ளன. எல்லா பணிகளும் முடிந்த நிலையில், கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்கள் இந்த அணுமின் நிலையத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதாக இல்லை. மேலும் இந்த திட்டத் தால் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதை மறுத்த மத்திய அரசு, உலகிலேயே கூடங்குளம் அணுமின் நிலையம் அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டிருப்பதாகவும், எத்தகைய இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும் இந்த அணுமின் நிலையத்தால் பாதிப்பு வராது என்று கூறியது.
இதையடுத்து அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள், 'பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
அப்போது மத்திய அரசு, ''கூடங்குளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன'' என்று கூறியது. அதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்குத் தேவையான யுரேனியத்தை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கியது.
அதன் பிறகு 3 மாதங்கள் விசாரணை நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் விசாரணை முடிந்த நிலையில் இறுதித் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த வழக்கில் இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் தீர்ப்பில் ''கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தடை இல்லை'' என்று அறிவித்தனர். 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-
இந்தியாவின் அணுசக்தி கொள்கையை சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக மதிக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக குழுக்கள் அனைத்தும் கூறி இருப்பதை கோர்ட்டு ஏற்றுக் கொள்கிறது.
நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு பெற வேண்டுமானால் மின்சாரம் அதிகம் தேவை. பொதுமக்கள் நலன் கருதி கூடங்குளத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை கோர்ட்டு விரும்புகிறது. எனவே கூடங்குளத்தில் அணு உலைகள் செயல்பட எந்த தடையும் இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் நடப்பு தலைமுறையினருக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் அணு மின்சாரம் தேவை. எனவே கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
ஏழைகள், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டே கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையம் செயல்பட்டால் நாடு விரைவான வளர்ச்சி பெறும். கூடங்குளம் அணுமின் நிலையம் எல்லா வகையிலும் பாதுகாப்பாக உள்ளதாக பல்வேறு நிபுணர் குழுக்கள் உறுதிபடுத்தியுள்ளன. இதை கோர்ட்டு ஏற்றுக் கொள்கிறது.
கூடங்குளத்தில் மின்சாரம் தயாரித்து முடிக்கப்பட்ட பிறகு வெளியேற்றப்படும் கழிவுகளை மத்திய அரசு பொறுப்பு ஏற்று கையாள வேண்டும். எனவே இதில் மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை. அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை திரும்ப பெறலாம். இதற்காக நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா கூறினார்கள்.
கூடங்குளத்தில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் 620-வது நாளான இன்று இறுதி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் 50 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படும். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தப்படும். அந்த வகையில் முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரத்தை தினமும் உற்பத்தி செய்வதற்கு இன்னும் 8 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
மத்திய- மாநில அரசுகள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது அதில் இருந்து சுமார் 650 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். இதையடுத்து இன்னும் 6 மாதம் கழித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையும் செயல்பட தொடங்கும்.
அப்போது தமிழ்நாட்டுக்கு மேலும் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். மின்வெட்டால் கடும் சிரமத்துக் குள்ளாகி இருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு இது ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அணுஉலை சோதனை ஓட்டத்துக்கு எதிர்ப்பு: கூடங்குளம் விஞ்ஞானிகள் குடியிருப்பு முற்றுகை 300 படகுகளில் சென்று கடலோர கிராம மக்கள் போராட்டம்
» முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» “இத்தாலிய தூதர் இந்தியாவை விட்டு தப்பி வெளியேற முடியாது” -சுப்ரீம் கோர்ட்!
» தொடர் மோதல் எதிரொலி : போலீஸ் சீர்திருத்த சட்டம் ; மத்திய, மாநிலஅரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
» தயாரிப்பாளர் சங்க பிரச்னை வாக்கு எண்ணிக்கை நடத்த கோர்ட் அனுமதி
» முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» “இத்தாலிய தூதர் இந்தியாவை விட்டு தப்பி வெளியேற முடியாது” -சுப்ரீம் கோர்ட்!
» தொடர் மோதல் எதிரொலி : போலீஸ் சீர்திருத்த சட்டம் ; மத்திய, மாநிலஅரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
» தயாரிப்பாளர் சங்க பிரச்னை வாக்கு எண்ணிக்கை நடத்த கோர்ட் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum