தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேப்பிலை ஆடை வழிபாடுv

Go down

வேப்பிலை ஆடை வழிபாடுv Empty வேப்பிலை ஆடை வழிபாடுv

Post  gandhimathi Wed Jan 23, 2013 12:54 pm

`அம்மா தாயே என் வேண்டுதலை நிறைவேற்று; முடிகாணிக்கை செலுத்துகிறேன், அலகு குத்துகிறேன், தீச்சட்டி எடுக்கிறேன், தீ மிதிக்கிறேன், பால்குடம் எடுக்கிறேன், பாதயாத்திரையாக வந்து வணங்குகிறேன்' - இப்படி பக்தர்களின் பல வேண்டுதல்களை பார்த்து இருக்கிறோம்.

ஆனால் ஆண்டுதோறும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் மாரியம்மன், பத்ரகாளியம்மனுக்காக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து விதவிதமான வேடமணிந்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்தும் வீட்டில் இருந்து கோவிலுக்கு நடந்து வந்து அம்மனை வணங்குகிறார்கள். இது நடப்பது வேறு எங்கும் அல்ல. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்தான்.

சிறுவன் முதல் வயதானவர் வரை வயது வித்தியாசமின்றி உடலில் வேப்பிலையை சுற்றி கட்டி கொள்கின்றனர். உடலில் பல வண்ணங்களில் அதாவது கறுப்பு, வெள்ளை, சிவப்பு என விதவிதமான நிறங்களில் சிறு, சிறு புள்ளிகள் வைத்து கொள்கின்றனர். அதன்பிறகு வீட்டில் இருந்து கோவிலுக்கு நடந்து செல்கின்றனர்.

கோவிலுக்கு சென்றதும் கையில் வைத்துள்ள வேப்பிலையை அங்கு போட்டு விட்டு அதன்மேல் படுத்து உருளுகின்றனர். இப்படி செய்வதன் மூலம், அந்த அம்மன் தங்களை நோய், நொடியில் இருந்து காத்து அருளுகிறாள் என்பது நம்பிக்கை. வித்தியாசமாகவும், மெய்சிலிர்க்கும் வகையிலும் நடக்கும் இந்த திருவிழா மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதமும், பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை மாதமும் நடக்கிறது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum