தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொத்துக்களை மீட்க அஞ்சலி வழக்கு?: வக்கீல்களுடன் சந்திப்பு

Go down

சொத்துக்களை மீட்க அஞ்சலி வழக்கு?: வக்கீல்களுடன் சந்திப்பு Empty சொத்துக்களை மீட்க அஞ்சலி வழக்கு?: வக்கீல்களுடன் சந்திப்பு

Post  ishwarya Sat May 04, 2013 5:31 pm

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தன் உயிருக்கு ஆபத்து என்றும் பேட்டி அளித்தது தமிழ் திரைஉலகை பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

அஞ்சலி படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகையாகியுள்ளார். 'அங்காடி தெரு' படம் அவரை பிரபலப்படுத்தியது. 'கலகலப்பு' படம் வெற்றிகரமாக ஓடியதால் சம்பளத்தை உயர்த்தினார். 'சேட்டை' படத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கிலும் அஞ்சலிக்கு வாய்ப்புகள் வந்தன. அங்கு வெங்கடேஷ் ஜோடியாக நடித்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து மீண்டும் வெங்கடேஷ் ஜோடியாக இன்னொரு படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் தங்கி இருந்தபோது சென்னை நிருபர்களை போனில் தொடர்பு கொண்டு சித்தி பாரதிதேவி மீதும் டைரக்டர் களஞ்சியம் மீதும் குற்றச்சாட்டுகளை கூறினார். இருவரும் தன்னை சித்ரவதைபடுத்தியதாகவும் பணம் கொட்டும் ஏ.டி.எம். மெஷின்போல் பயன்படுத்தினர் என்றும் கூறினார்.

இதுவரை சம்பாதித்த கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களை பறித்துக் கொண்டதாகவும் புகார் கூறினார். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் ஐதராபாத் வந்து விட்டேன் என்றும் இனிமேல் சென்னைக்கு வரமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

டைரக்டர் களஞ்சியமும் பாரதிதேவியும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். அஞ்சலி சம்பாதித்த பணத்தை நான் சுருட்டவில்லை என்று களஞ்சியம் கூறினார். அஞ்சலி பற்றிய சில ரகசியங்களை வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளார்.

களஞ்சியம் தற்போது அஞ்சலியை வைத்து 'ஊர் சுற்றி புராணம்' என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்துக்காக இதுவரை ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் அஞ்சலி இன்னும் 15 நாட்கள் இதில் நடிக்க வேண்டி உள்ளது என்றும் களஞ்சியம் தெரிவித்தார்.

ஆனால் அஞ்சலி இதில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் ஐதராபாத்தில் அஞ்சலி வக்கீல்களை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. பணம், சொத்துக்களை மீட்பது பற்றியும் சித்தி மற்றும் டைரக்டர் களஞ்சியம் மீது வழக்கு தொடர்வது குறித்தும் அவர் ஆலோசிப்பதாக அஞ்சலிக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவித்தனர். போலீசிலும் புகார் செய்ய முடிவெடுத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபு தேவா வழக்கு… வக்கீல்களுடன் ஆலோசிக்கும் மனைவி ரம்லத்!
» சொத்துக்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு: நடிகர் சங்கத்தில் அஞ்சலி புகார்?
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» நடிகை அஞ்சலி மீதான ஹேபியஸ் கார்பஸ் வழக்கு வாபஸ் இல்லை: சித்தி பாரதிதேவி வக்கீல் தகவல்
» பார்வையை மீட்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum