தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீசில் ஆஜர்

Go down

நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீசில் ஆஜர் Empty நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீசில் ஆஜர்

Post  ishwarya Sat May 04, 2013 5:00 pm

அங்காடி தெரு படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை அஞ்சலி. இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை அஞ்சலி, கடந்த 8-ம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரை தேடி கண்டுபிடித்து தரவேண்டுமென்று ஐதராபாத் போலீசில் அஞ்சலியின் சகோதரர் புகார் மனு தாக்கல் செய்தார்.

இதேபோல், அவரது சித்தி பாரதி தேவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். சென்னை மற்றும் ஐதராபாத் போலீசார் இப்புகார்கள் தொடர்பாக நடிகை அஞ்சலியின் இருப்பிடம் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், அஞ்சலியின் சித்தி பாரதி தேவி, சென்னை ஐகோர்ட்டில் அஞ்சலியை தேடி கண்டுபிடித்து தரவேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், நடிகை அஞ்சலி இன்றிரவு 10 மணி அளவில் ஐதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஐதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜர் ஆகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை திரும்புகிறார் நடிகை அஞ்சலி: போலீசில் விரைவில் ஆஜர்
» ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி இன்று சரண்?: சென்னை கோர்ட்டிலும் ஆஜராகிறார்
» தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது நடிகை அஞ்சலி போலீசில் ஆஜர் பரபரப்பு தகவல்கள்.
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» ஐதராபாத்தில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயம்: அண்ணன் போலீசில் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum