நோபாலில் திரில் வெற்றி: லகான் சினிமா பட கிளைமாக்ஸ் போல் பரபரப்பு
Page 1 of 1
நோபாலில் திரில் வெற்றி: லகான் சினிமா பட கிளைமாக்ஸ் போல் பரபரப்பு
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.பி.சிங் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. ஜடேஜா தூக்கி அடித்த பந்தை `தேர்டுமேன்' திசையில் இருந்த பெங்களூர் வீரர் கேட்ச் பிடித்தார்.
ஆனால் ஆர்.பி.சிங் கோட்டை விட்டு வெளியே வந்து வீசியதால் நடுவர் `நோபால்' என்று அறிவித்தார். இதனால் சென்னை அணி 1 ரன்னில் தோல்வியில் இருந்து தப்பியது. நோபால் மூலம் ஒரு ரன்னும், ஜடேஜா ஒடியதால் ஒரு ரன்னும் கிடைத்ததால் சென்னை அணி ஒரு பந்தில் எஞ்சி இருந்த நிலையில் வெற்றி பெற்றது. வெற்றிக்கான இலக்கு எடுக்கப்பட்டு விட்டதால் பிரீஹிட்டான கடைசி பந்தை வீச வேண்டிய நிலை ஏற்படவில்லை.
ஜடேஜா அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டதால் நோபால் என்பதை அறியாமல் பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி, கிறிஸ் கெய்ல் உள்பட சில வீரர்கள் தாங்கள் வெற்றி பெற்றதாக மகிழ்ச்சி அடைந்து உணர்ச்சியை வெளிப்படுத்தினர். சில வினாடிகளில் தான் அவர்கள் கேட்ச் பிடிக்கப்பட்ட கடைசி பந்து நோபால் என்று தெரியவந்தது. இதனால் அவர்கள் தோல்வியால் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை போட்டியில் நடந்த இந்த பரபரப்பு அமீர்கான் நடித்த `லகான்' இந்தி பட கிளைமாக்ஸ் காட்சியை நினைவுப்படுத்தியது. அந்த படத்தில் அமீர்கான் தலைமையிலான இந்திய அணி நம்மை கண்ட பிரிட்டிஷ் அணியை கிரிக்கெட்டில் தோற்கடிப்பது தான் கிளைமாக்ஸ் காட்சி.
கடைசி விக்கெட்டான அமீர்கான் பந்தை சிக்சருக்கு தூக்கி அடிப்பார். அதை பிரிட்டிஷ் வீரர் கேட்ச் பிடிப்பார். ஆனால் அவர் எல்லை கோட்டுக்கு வெளியே நின்று கேட்ச் பிடிப்பார். இதனால் அமீர்கான் அணி வெற்றி பெறுவது போன்ற காட்சி இடம் பெறும். இது மாதிரியான பரபரப்பு தான் நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் நோபால் மூலம் ஏற்பட்டது.
ஆனால் ஆர்.பி.சிங் கோட்டை விட்டு வெளியே வந்து வீசியதால் நடுவர் `நோபால்' என்று அறிவித்தார். இதனால் சென்னை அணி 1 ரன்னில் தோல்வியில் இருந்து தப்பியது. நோபால் மூலம் ஒரு ரன்னும், ஜடேஜா ஒடியதால் ஒரு ரன்னும் கிடைத்ததால் சென்னை அணி ஒரு பந்தில் எஞ்சி இருந்த நிலையில் வெற்றி பெற்றது. வெற்றிக்கான இலக்கு எடுக்கப்பட்டு விட்டதால் பிரீஹிட்டான கடைசி பந்தை வீச வேண்டிய நிலை ஏற்படவில்லை.
ஜடேஜா அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டதால் நோபால் என்பதை அறியாமல் பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி, கிறிஸ் கெய்ல் உள்பட சில வீரர்கள் தாங்கள் வெற்றி பெற்றதாக மகிழ்ச்சி அடைந்து உணர்ச்சியை வெளிப்படுத்தினர். சில வினாடிகளில் தான் அவர்கள் கேட்ச் பிடிக்கப்பட்ட கடைசி பந்து நோபால் என்று தெரியவந்தது. இதனால் அவர்கள் தோல்வியால் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை போட்டியில் நடந்த இந்த பரபரப்பு அமீர்கான் நடித்த `லகான்' இந்தி பட கிளைமாக்ஸ் காட்சியை நினைவுப்படுத்தியது. அந்த படத்தில் அமீர்கான் தலைமையிலான இந்திய அணி நம்மை கண்ட பிரிட்டிஷ் அணியை கிரிக்கெட்டில் தோற்கடிப்பது தான் கிளைமாக்ஸ் காட்சி.
கடைசி விக்கெட்டான அமீர்கான் பந்தை சிக்சருக்கு தூக்கி அடிப்பார். அதை பிரிட்டிஷ் வீரர் கேட்ச் பிடிப்பார். ஆனால் அவர் எல்லை கோட்டுக்கு வெளியே நின்று கேட்ச் பிடிப்பார். இதனால் அமீர்கான் அணி வெற்றி பெறுவது போன்ற காட்சி இடம் பெறும். இது மாதிரியான பரபரப்பு தான் நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் நோபால் மூலம் ஏற்பட்டது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமா ‘செட்’ டால் பரபரப்பு
» அமெரிக்க வாலிபருடன் அசின் காதல்: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
» இணையதளத்தில் ஆபாச படம்: சினிமா பாடகி சின்மயி போலீசில் பரபரப்பு புகார்
» என் பெயர் எஸ்கோபர்: தில்.திரில், திடுக்கிடல்
» டிசம்பரில் கிளைமாக்ஸ்
» அமெரிக்க வாலிபருடன் அசின் காதல்: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
» இணையதளத்தில் ஆபாச படம்: சினிமா பாடகி சின்மயி போலீசில் பரபரப்பு புகார்
» என் பெயர் எஸ்கோபர்: தில்.திரில், திடுக்கிடல்
» டிசம்பரில் கிளைமாக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum