தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பா.ம.க. கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Go down

பா.ம.க. கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு Empty பா.ம.க. கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Post  ishwarya Fri May 03, 2013 1:11 pm


சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவர் வாராகி (வயது 38). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மகாபலிபுரத்தில், கடந்த மாதம் 25-ந்தேதி பா.ம.க. சார்பில் "சித்திரை திருவிழா" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த சில நிபந்தனைகளுடன் பா.ம.க.வினருக்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி வழங்கினார். ஆனால், இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பா.ம.க.வினர் மீறியுள்ளனர்.

மேலும் 3 அரசு பஸ்கள், 3 தனியார் வாகனங்கள், துணை சூப்பிரண்டுகளின் வாகனங்கள் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர். மேலும், மரக்காணத்தில் அப்பாவி தலித் மக்கள் மீது கொடூரமாக தாக்கல் நடத்தி, அவர்களது வீடுகளை பா.ம.க.வினர் தீ வைத்து எரித்துள்ளனர்.

நிகழ்ச்சியை இரவு 10 மணிக்குள் முடித்து விடவேண்டும் என்ற போலீசாரின் நிபந்தனையை மீறி, இரவு 11 மணிக்கு மேலும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். மகாபலிபுரத்தில் உள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை சேப்படுத்தியுள்ளனர்.

இத்தனைக்கும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மூன்றாம் தர அரசியல்வாதிகள் கிடையாது. அவர்கள் இருவரும் டாக்டர்கள். ஆனால், அவர்கள் அரசியல் சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறி செயல்பட்டு வருகின்றனர். காதல் திருமணத்தையும், இருபிரிவினரின் ஒற்றுமைக்கும் எதிராக பா.ம.க. கட்சியினர் செயல்படுகின்றனர்.

எனவே இருபிரிவினர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி, அரசியல் சட்டத்துக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிராக செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாராகி தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவில், "பா.ம.க.வினருக்கு எதிராக நான் வழக்கு தொடர்ந்ததால், என் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று பா.ம.கவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே என் அலுவலகத்தை பா.ம.க.வினர் தாக்கியுள்ளனர்.

எனவே எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவும் நாளை விசாரணைக்கு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'லட்டுதின்ன ஆசையா?' பட கதை விவகாரம்: ஐகோர்ட்டில் கே.பாக்யராஜ் வழக்கு
» நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக ஐகோர்ட்டில் புகார் மனு
» மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. மீதான நில அபகரிப்பு வழக்கு வாபஸ்
» விஜயகாந்த் கட்சி நடிகர் மீது திடீர் கொலை மிரட்டல் வழக்கு
» உலக அங்கீகாரத்தை நோக்கி விஸ்வரூபம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum