தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீனா ஊடுருவல் விவகாரம்: முப்படை தளபதிகளுடன் அந்தோணி ஆலோசனை

Go down

சீனா ஊடுருவல் விவகாரம்: முப்படை தளபதிகளுடன் அந்தோணி ஆலோசனை Empty சீனா ஊடுருவல் விவகாரம்: முப்படை தளபதிகளுடன் அந்தோணி ஆலோசனை

Post  ishwarya Thu May 02, 2013 6:02 pm

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள், காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில், 19 கிலோ மீட்டர் தூரம் முன்னேறி கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். அத்துடன் அது தங்கள் இடம் என்று பிரகடனம் செய்து, இந்தியாவுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில் அவசரம் காட்டாமல், அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இந்தியா விரும்புகிறது.

இவ்வாறு அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, லடாக் பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலவரம் மற்றும் பிரச்சினையை தீர்ப்பது குறித்து, முப்படை தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி இன்று ஆலோசனை நடத்தினார். லடாக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் தளபதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது கமாண்டர்களிடையே அந்தோணி பேசுகையில், “கிழக்கு லடாக் பகுதியில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலையை நாம் உருவாக்கவில்லை. அமைதியான முறையில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. நமது நலன்களைப் பாதுகாக்க ஒவ்வொரு சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா உறுதியாக உள்ளது. சீனாவுடனான எல்லைப் பகுதியை பாதுகாப்பதற்கு சாலைகள் அமைத்தல், நவீன இறங்கு தளம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்திருக்கிறது” என்றார்.

இக்கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா, ராணுவ தளபதி பிக்ரம் சிங், விமானப்படை தளபதி பிரவுன், கடற்படை தளபதி ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum