தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாராளுமன்ற தேர்தலில் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு: வெள்ளையன் பேட்டி

Go down

 பாராளுமன்ற தேர்தலில் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு: வெள்ளையன் பேட்டி  Empty பாராளுமன்ற தேர்தலில் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு: வெள்ளையன் பேட்டி

Post  ishwarya Thu May 02, 2013 2:33 pm

கோவை சங்கனூரில் வணிகர்கள் சங்க பேரவை மற்றும் வியாபாரிகள் சம்மேளன நிகழ்ச்சி நடைபெற்றது. வணிகர்கள் சங்க பேரவையின் மாநில தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

30-வது வணிகர் தின விழா சென்னை தீவுத்திடலில் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ்நாடு மற்றும் வெளிமாநில வணிகர் சங்க தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் 65 லட்சம் வணிகர்கள் உள்ளனர்.

சென்னையில் நடைபெற உள்ள மாநாட்டில் 3 லட்சத்துக்கும் மேலான வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே வணிகர் தினத்தையொட்டி, அனைத்து வணிகர்களும் கடைகளை அடைத்து இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளதால், அன்னிய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து வர்த்தகத்தை சீர்குலைத்து வருகின்றன. இது தேச துரோக ஒப்பந்தம் ஆகும். இதனால் விலைவாசி உயர்கிறது. இந்திய வணிகர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அனைத்து துறைகளிலும் அன்னிய நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.

இந்த பிரச்சினை குறித்து சென்னையில் நடைபெறும் மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்திய வணிகர்களை காப்பாற்றக்கோரி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு வர்த்தகங்கள் காப்பாற்றப்படும். சென்னையில் நடைபெறும் வணிகர்கள் மாநாடு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டமும் வணிகர்களை பாதிக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் வணிகர்களுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்போம்.

இதுவரை வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். சிரமத்தை கொடுப்பவர்களுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளோம். வணிகர்களின் நலனில் அக்கறை செலுத்திய கட்சிகள்தான் ஆட்சியை பிடித்துள்ளன. பாராளுமன்ற தேர்தலிலும் இதுதான் நடைபெறும்.

இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.

கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் பி.மாணிக்கம், மாவட்ட செயலாளர் கே.முத்துராஜ், மாவட்ட பொருளாளர் தங்க மாரியப்பன், தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைவர் வி.பி.வீரசிங், மற்றும் கல்யாணசுந்தரம், ஒய்.எம்.ஹபிபுல்லா, அமீர் அம்ஷா, குட்டன், ஜெயராஜ், லாரன்ஸ்துரை, சங்கரலிங்கம், தெய்வேந்திரன், எஸ்.லிங்கம், முகமது அன்சாரி, எஸ்.பக்கிள்ராஜ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பாராளுமன்ற தேர்தலில் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு: வெள்ளையன் பேட்டி
»  பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முஷரப் போட்டி
» அடுத்த ஆண்டு முதல் சினிமாக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாராம் முதல்வர் – சொல்கிறார் அமைச்சர்
» சேலையில் கடவுள் படம்: இந்து மக்கள் கட்சிக்கு நடிகை குஷ்பு கண்டனம்
» மூங்கில் குழாயில் நாய் வாலை இட்டாலும் அது நேராகாது! முன்னணி சோசலிஸக் கட்சிக்கு ஹெல உறுமய..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum