தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீபம் தரும் நன்மைகள்

Go down

தீபம் தரும் நன்மைகள் Empty தீபம் தரும் நன்மைகள்

Post  amma Fri Jan 11, 2013 5:41 pm

1 நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது. நெய்தீபம் ஏற்றி பரம் பொருளைத் துதித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதோடு, இல்லத்தில் நன்மைகள் பெருகும்.

2 விளக்கெண்ணெய் தீபம் தேக நலம் தரும். புகழ் ஓங்கும். நல்ல நட்பு வாய்க்கப்பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கச் செய்யும். சுகங்கள் பெருகும். சுற்றத்தாரும் சுகம் அடைவர். இல்லற இன்பம் கிட்டும். எக்காரணத்தை முன்னிட்டும் கடலை எண்ணெயில் தீபம் ஏற்றக்கூடாது.

3 வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றினால் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மைகள் வந்து சேரும்.

4 நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் போன்ற ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீபமிட்டு ஒரு மண்டலம் பூஜை செய்தால் அம்பிகையின் அருள் தட்டாமல் கிட்டும். சகல நலன்களும் பெறலாம்.

5 பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபமேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும். கிழக்கு திசை நோக்கி தீபமேற்றினால் வாழ்வின் அனைத்துத் துன்பங்களும் தீரும். மேற்கு திசை நோக்கி தீபமேற்றினால் கடன் தொல்லை தீரும், சனிபீடை தொலையும், வீட்டில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அகலும், குடும்ப ஒற்றுமை கூடும். வடக்கு திசை நோக்கி தீபமேற்றினால் செல்வம் பெருகும், திருமணத் தடைகள் அகலும், மங்கள காரியங்கள் நடைபெறும். தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது.

6 பஞ்சுதிரி போட்டு தீபமேற்ற மிக மிக உத்தமம். முன்வினைப்பயன்கள் தொலைய, செல்வவளம் பெருக தாமரைத் தண்டு நாரில் தீபம் ஏற்றலாம். மழலை வரம் வேண்டுவோர் வாழை நாரில் தீபம் ஏற்றலாம்.

7 ஒருமுகம் கொண்ட தீபம் ஏற்றினால், வாழ்வில் மத்திமமான பலன் ஏற்படும்; இரண்டு முக தீபத்தால், குடும்ப ஒற்றுமை ஓங்கும்; மும்முக தீபம், புத்திர சுகம் தரும்; நான்கு முக தீபம் பசு, பூமியால் லாபம் கிட்டும்; ஐந்துமுக தீபம் செல்வவளம் மலையெனப் பெருகும். புண்ணியங்கள் பெருகும்.

8 மகாலட்சுமியை நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும். நாராயணனுக்கு நல்லெண்ணெயையும் இலுப்ப எண்ணெயையும் கலந்து தீபம் ஏற்றி வழிபடவேண்டும். விநாயகரை தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். அம்பிகையை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும். அனைத்து தெய்வங்களையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum