விநாயகர் விரதங்கள்
Page 1 of 1
விநாயகர் விரதங்கள்
வெள்ளிக்கிழமை விரதம்: வைகாசி மாதம் வளர்பிறை, முதல் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி, வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருக்க வேண்டும். விநாயகரைத் தியானிக்க வேண்டும். இரவில் ஒரு பொழுது பழம் முதலியன உண்ணலாம். சிலர் வெள்ளிக்ழமைகளுக்குப் பதிலாக வியாழக்கிழமைகளில் விநாயகரை சிறப்பாக வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விரதம்: ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று, விநாகர் வழிபாட்டுடன் இந்த வழிபாட்டைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாத வளர்பிறைச் சதுர்த்தியன்றும் விரதம் காக்க வேண்டும். விரதத்தின் போது பகலில் ஒருபொழுது உண்ணலாம். அல்லது இரவில் சிறிதளவு சிற்றுண்டியோ, சில பழத் துண்டுகளோ சாப்பிடலாம்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்: தேய்பிறைச் சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத் தடைகளாகிய சங்கடங்கள் தாமே ஒழிந்து, விலகிப் போய்விடும். ஆகவே, இந்தச் சதுர்த்தியைச் சங்கடஹரசதுர்த்தி என்பர். ஹர என்றால் அறுத்துவிடு என்று அர்த்தம். ஆவணி தேய்பிறைச் சங்கடஹர சதுர்த்தியன்று விரதத்தைத் தொடங்கி ஒவ்வொரு மாதத் தேய்பிறை சதுர்த்தியிலும் விரதமிருக்க வேண்டும்.
கார்த்திகை, சஷ்டி விரதம்: கார்த்திகை மாதம் தேய்பிறை, பிரதமை முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை தொடர்ந்து இருபத்தொரு நாள்கள் விரதமிருக்க வேண்டும். முதல் இருபது நாள்கள் ஒரு பொழுது உண்ணலாம். இருபத்தியோராம் நாள் முழு விரதம் காக்கவேண்டும். இருபத்தோர் இழைகளைக் கொண்ட காப்பு நூலை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் அணிந்திருக்க வேண்டியது அவசியம். விநாயகரைத் தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விரதம்: ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று, விநாகர் வழிபாட்டுடன் இந்த வழிபாட்டைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாத வளர்பிறைச் சதுர்த்தியன்றும் விரதம் காக்க வேண்டும். விரதத்தின் போது பகலில் ஒருபொழுது உண்ணலாம். அல்லது இரவில் சிறிதளவு சிற்றுண்டியோ, சில பழத் துண்டுகளோ சாப்பிடலாம்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்: தேய்பிறைச் சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத் தடைகளாகிய சங்கடங்கள் தாமே ஒழிந்து, விலகிப் போய்விடும். ஆகவே, இந்தச் சதுர்த்தியைச் சங்கடஹரசதுர்த்தி என்பர். ஹர என்றால் அறுத்துவிடு என்று அர்த்தம். ஆவணி தேய்பிறைச் சங்கடஹர சதுர்த்தியன்று விரதத்தைத் தொடங்கி ஒவ்வொரு மாதத் தேய்பிறை சதுர்த்தியிலும் விரதமிருக்க வேண்டும்.
கார்த்திகை, சஷ்டி விரதம்: கார்த்திகை மாதம் தேய்பிறை, பிரதமை முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை தொடர்ந்து இருபத்தொரு நாள்கள் விரதமிருக்க வேண்டும். முதல் இருபது நாள்கள் ஒரு பொழுது உண்ணலாம். இருபத்தியோராம் நாள் முழு விரதம் காக்கவேண்டும். இருபத்தோர் இழைகளைக் கொண்ட காப்பு நூலை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் அணிந்திருக்க வேண்டியது அவசியம். விநாயகரைத் தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum