தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மறுமணம் வெற்றி தருமா?

Go down

மறுமணம் வெற்றி தருமா? Empty மறுமணம் வெற்றி தருமா?

Post  meenu Mon Jan 21, 2013 4:58 pm

ஏற்கனவே செய்த திருமணத்தில் ஏற்பட்ட கசப்புகள், "மறுமண வாழ்க்கையில் இருக்கக் கூடாது என்பதுதான் பலரது எண்ணமாக உள்ளது. ஆனால் மறுமணத்தில் அதே கசப்புகள் இல்லை என்றாலும், வேறுவிதமாக கசப்புகள் ஏற்படும்போது அதை முழுமையாக மறுமணத் தம்பதிகள் சகித்துக் கொள்கின்றனர்.

ஏனென்றால், மீண்டும் மண முறிவுக்கு உள்ளானால், சமுதாயம் அவர்களை கேலி பேசும் என்ற பயம்தான் அதற்குக் காரணம். `இவனு(ளு)க்கு மறுமணம் செய்வது தொழிலாகிவிட்டது' என்று மற்றவர்கள் கேலி பேசுவார்கள் என்ற எண்ணத்தினால், மறுமணத்தை கடும்பாடுபட்டு கட்டிக் காத்துக் கொள்கிறார்கள்.

அதையும் தாண்டி பிரிகிறவர்களும் உண்டு. முதல் திருமண வாழ்க்கையிலேயே அதே சகிப்புத் தன்மையோடு இருந்திருந்தால், பிரிவினை ஏற்பட்டு இருக்காதே? எல்லா மனிதர்களிடமும் நல்ல குணமும், கெட்ட குணமும் கலந்துதான் இருக்கும். பல கெட்ட குணங்கள், அந்தந்த வயதுக்கு ஏற்றாற்போல் மறைந்துவிடும்.

எனவே முதிர்ச்சி வரும்போது, அதற்கேற்றபடி மனிதன் தன்னை மாற்றிக்கொள்வான். அதுவரை தம்பதிகள் பொறுத்திருப்பது அவசியம். வாழ்க்கைத் துணையின் துரோகம் மற்றும் கடுமையான குற்ற செய்கையினால் சிலர் வாழ்க்கைத் துணையை பிரிகின்றனர். இப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் உயிர்போகும் அளவுக்கு பிரச்சினை எழும் என்று உணர்பவர்களிடம் சகிப்புத்தன்மை பற்றி பேச நான் விரும்பவில்லை.

அப்படி உணர்ந்தால் அவர்கள் பிரியட்டும். அதிலும் பிரியாமல் இருந்து குடும்பத்தை நடத்தி வரும் பெண்களும் உண்டு. உடல் கோளாறுகள், வியாதி போன்றவை கூட இன்று பிரச்சினைக்குரியவை அல்ல. இந்த உலகில் எதைத் தொலைத்தாலும் அதற்கு மாற்றானதை பெறமுடியும். மலட்டுத் தன்மையிருந்தால்கூட பல நவீன சிகிச்சை முறைகள் மூலம் குழந்தைகளை பெறலாம்.

எனவே முதல் இணையை பிரிவதற்கு எளிதான காரணங்கள் எதையும் முன்வைக்காமல், சகிப்புத் தன்மையை மட்டும் வளர்ப்பது அவசியம். குழந்தைகளை பெறுவதற்கு முன்பாகவே சிலர் பிரிந்துவிடுகின்றனர். இளமைக் காலம் வீணாக கடந்துபோவதை அவரும் அவரது குடும்பத்தினரும் பொதுவாக விரும்புவதில்லை.

எனவே அவர்களுக்கு மறுமணம்தான் அதற்கு அருமருந்தாக அமைகிறது. வாழ்க்கைத் துணை இறந்துபோனாலும் அவர்கள் மறுமணம் செய்யட்டும். ஆனால் முதல் திருமணத்தின் மூலம் குழந்தைகள் பெற்றவர்கள், மறுமணம் செய்வதை தவிர்க்கலாம். ஏனென்றால், மறுமணத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதுதான் அதிகம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum