தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘கோடி’ நடிகைகளுக்கு நெருக்கடி!

Go down

‘கோடி’ நடிகைகளுக்கு நெருக்கடி! Empty ‘கோடி’ நடிகைகளுக்கு நெருக்கடி!

Post  ishwarya Thu Apr 25, 2013 12:19 pm

குறைந்த விலை, கூடுதல் லாபம் என்று ஜவுளிக் கடைகளில் கூறுவதைப் போல இப்போது கோலிவுட்டிலும் புது டிரென்ட் உருவாகியுள்ளது. பெரிய பெரிய சம்பளம் கேட்கும் நடிகைகளைப் போடுவதை விட புதுமுக நடிகைகளை நடிக்க வைத்து குறைந்த சம்பளத்தில் நிறைந்த லாபம் பார்ப்பதே அது.

இந்த புதிய நடைமுறைக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளாம். டென்ஷன் இல்லாமல் படத்தை முடிக்க முடிகிறது, புது நாயகிகள் தொல்லை கொடுப்பதில்லை, சமர்த்தாக நடந்து கொள்கிறார்கள், கொடுக்கும் வசதிகளைப் பெற்றுக் கொண்டு அடக்கமாக இருக்கின்றனர் என்று சந்தோஷமாக கூறுகிறார்கள் திரையுலகினர்.

விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என சில முன்னணி ஹீரோக்களுக்கு மட்டும்தான் முன்னணி ஹீரோயின்கள் தொடர்ந்து தேவைப்படுகிறார்கள். சுற்றிச் சுற்றி தமன்னா, ஆசின், திரிஷா , நயனதாரா எனத்தான் வர வேண்டியுள்ளது. ஆனால் இவர்களெல்லாம் கோடி சம்பளம் கேட்கிறார்கள். கேடி நாயகி தமன்னா லேட்டஸ்டாக ஒரு கோடி சம்பள வளையத்திற்குள் வந்துள்ளார்.

நயனதாராவுக்கு மார்க்கெட் விழுந்து விட்டது என்றாலும் கூட அவரும் ஒரு கோடி என்றுதான் விரலை காட்டுகிறாராம். 2வது கட்ட நாயகிகளும் கூட 50 லட்சத்திற்குக் கீழ் இறங்க மாட்டேன் என்கிறார்கள்.

இது சரிப்படாது என்று உணர்ந்து பல தயாரிப்பாளர்களும், புதுமுக இயக்குநர்களும் புதிய பாதை அமைத்து, பல புதுமுக நடிகைகளை சரமாரியாக இறக்குமதி செய்யத் தொடங்கி விட்டனர்.

நீண்ட காலமாகவே இந்த டிரென்ட் இருக்கிறது என்றாலும் தற்போதுதான் மகா விறுவிறுப்பாகியுள்ளதாம் புதுமுகங்களின் வரவு. சுப்ரமணியபுரம் படத்தில் ஸ்வாதிக்குக் கிடைத்த வெற்றிதான் இந்த புதுமுக அலை வேகமாக அடிக்க காரணம் என்கிறர்கள்.

தினசரி ஒரு புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தும் நிலை கோலிவுட்டில் உருவாகியுள்ளது. ஒவ்வொரு நடிகைக்கும் 5 முதல் 10 லட்சம் வரைதான் சம்பளம் கொடுக்கிறார்கள். அதிலும் முதல்முறையாக அறிமுகமாகும் நடிகைக்கு அதிகபட்சமே 5 லட்சம்தானாம். அவர் நடித்த படம் ஓடி விட்டால் 10 லட்சம் வரை போகிறார்களாம்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களின் நாயகிகள் புதுமுகங்கள்தான். அதில் களவாணி நாயகி ஓவியாவுக்கு இப்போது நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

இதேபோல அரவான் படத்தில் அறிமுகமாகும் அர்ச்சனா கவிக்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம். இதேபோல மேலும் பல புதுமுகங்கள் தமிழ்த் திரையுலகில் புதிய தென்றலாக வீசத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் என்ன கொடுமை என்றால் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக கேரளாவிலிருந்து ஷிப்ட் ஆகி வந்தவர்கள் என்பதுதான்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் நாளில் ரூ.32 கோடி…! இருவாரத்தில் ரூ.210 கோடி வசூலித்த சல்மான் கான் படம்!
» செலவு 2.5 கோடி… நஷ்டம் ரூ 8 கோடி: இயக்குநர் கிச்சாவின் ‘தப்புக் கணக்கு’!
» எந்திரன் செலவு ரூ 132 கோடி… வருமானம் ரூ 179 கோடி! – சன் டிவி அறிக்கை
» தற்கொலைக்கு தூண்டும் மன நெருக்கடி
» விஸ்வரூபத்துக்கு நெருக்கடி தரும் ஸ்டுடியோ கி‌‌ரீன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum