தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சனிபகவான் தாக்கம் நிவர்த்தி வேண்டுமா?

Go down

சனிபகவான் தாக்கம் நிவர்த்தி வேண்டுமா? Empty சனிபகவான் தாக்கம் நிவர்த்தி வேண்டுமா?

Post  gandhimathi Mon Jan 21, 2013 4:36 pm


சனிபகவான் தாக்கம் நிவர்த்தி வேண்டுமா?


சில ஆண்டுகளாக, சனிபெயர்ச்சி காலம் வந்தால் மக்கள் மனதில் இனம் புரியாத பயம் உருவாகி விடுகிறது. சனி பெயர்ச்சி காலத்தில் குச்சனூர், திருநள்ளாறு குடியிருக்கும் பகுதியில் அமைந்து இருக்கும் நவக்கிரக சன்னதியில் பரிகாரம் செய்ய பக்தர்களின் எண்ணிக்கை வருகை அதிகமாக காணப்படுகிறது.

சனியைப்போல் கொடுப்பவறில்லை, சனியைப்போல் கெடுப்பவறில்லை என்று முதுமொழி உண்டு. இவர் துன்பத்தையும் உருவாக்கி தருவார். இன்பத்தையும் உருவாக்கி தருவார். இவர் சூரிய பகவானின் மகன். இவருடைய மகன் மாந்தி. இவருக்கும், தந்தை சூரிய பகவானுக்கு உறவு குறைவு என ஜோதிடம் கூறுகிறது.

இவர் மந்த நிலை உள்ளவர். இவர் அதிகார சக்தி படைத்தவர். இவர் ஆட்சின் காலங்களில் கிடைக்கும் சொத்து மூன்று தலைமுறைக்கு பயன்படும் என ஜோதிடம் கூறுகிறது. நல்லதையும், தீயவையும் செய்யும் ஆற்றல் படைத்தவர். சிலருக்கு இவரின் ஆட்சி காலத்தில் எதிர்முனை செயல்பாடுகளின் தன்மை உருவாகும் என ஜோதிட நூல் கூறுகிறது.

துன்பத்தையும், இன்பத்தையும் தரும் வல்லமை இவருக்குண்டு. ஒருவரின் பிறந்த நேரத்தின் கணக்கின் முறையில்தான் இதுபோன்ற தன்மைகளை அறிந்து கொள்ள முடியும். சனிபகவானின் தாக்கம் உருவாகி கெடுபலன்கள் நம்மை தாக்காமல் இருக்க வீரவசம் உள்ள தெய்வங்களை அணுகி வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுபடும் தன்மை உருவாகும்.

வீரவசம் உள்ள தெய்வங்கள் அய்யனார், கருப்பசாமி, முனீஸ்வரர், பதினெட்டாம்படியான், மதுரைவீரன், பாண்டிமுனி இதுபோன்ற ஏதாவது தெய்வத்தை அணுகி, சனிபகவானுக்கு பிடித்த பூஜை பொருட்களை செலுத்தி வணங்கி வந்தால் துன்பங்கள் அகலும்.

வலிமையுள்ளவர் ஒருவர் நம்மை தாக்க வரும்போது வலிமையுள்ளவரை அணுகி சமரசம் செய்து கொள்வது போன்ற நிலைதான் சனிபகவானை நாம் நேரில் சென்று தரிசித்தால், கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் உருவாகி, சனிபகவான் நம்மை தேடிவரும் முன் நாமும் நேரில் சென்றது போன்ற நிலையில் அமைந்து விடும்.

ஆகவே தாக்கத்தை நிவர்த்தி செய்ய சனிக்கு பிடித்தமான எள், கருப்பு நீள கலர் துணியால் எட்டு பொட்டலம் தயார் செய்து தலையனை அடியில் வைத்துக் கொண்டு நாள்தோறும் உறங்கி வரவும். ஒவ்வொரு சனிக்கிழமையன்று ஒரு எள் பொட்டலம், அகல், நல்லெண்ணை மூன்றையும் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அகல் விளக்கை நன்றாக எரியும் நிலையில் எட்டுமுறை வலம் வரவேண்டும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum