தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாடல் மூலம் அம்பு விடும் ‘மன்மதன் கமல்’!

Go down

 பாடல் மூலம் அம்பு விடும் ‘மன்மதன் கமல்’! Empty பாடல் மூலம் அம்பு விடும் ‘மன்மதன் கமல்’!

Post  ishwarya Tue Apr 23, 2013 2:51 pm

மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாஸனே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

சினிமா உருவாக்கம் என்று வந்தால் கமல்ஹாஸன் ஒரு நிஜமான சகலகலா வல்லவன். இயக்கம், பாடுவது, நடனம், நடிப்பு என அவர் அனைத்து துறையிலுமே வல்லவர்தான்.

ஏற்கெனவே தன்னை ஒரு திறமையான பாடலாசிரியராக, ஹே ராம் படத்தில் நிரூபித்தார். இளையராஜா இசையில் எப்போது கேட்டாலும் இதயத்தை வருடும், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ பாட்டு கமல் எழுதியதுதான்.

அடுத்து மன்மதன் அம்பு படத்துக்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 4 பாடல்களை எழுதியுள்ளார் கமல்.

இதுகுறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறுகையில், “மன்மதன் அம்பு படத்தில் கமல்தான் ஹைலைட். நடிப்பு என்றில்லாமல், பல துறைகளிலும் கமலின் பங்களிப்பு இந்தப் படத்தில் அதிகம். அதற்கு ஒரு உதாரணம், இந்தப் படத்தின் 5 பாடல்களில் நான்கை கமல் சாரே எழுதியிருப்பதுதான்…” என்றார்.

பாடல் வெளியீட்டு விழா நவம்பர் 20-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. படம் டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum