தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேதி 1, மாதம் 11, வருடம் 2011 நாளை அதிர்ஷ்ட நாள்: 6 ராசிகளுக்கு ராகு-கேது தோஷம் நீங்கும்

Go down

 தேதி 1, மாதம் 11, வருடம் 2011 நாளை அதிர்ஷ்ட நாள்: 6 ராசிகளுக்கு ராகு-கேது தோஷம் நீங்கும் Empty தேதி 1, மாதம் 11, வருடம் 2011 நாளை அதிர்ஷ்ட நாள்: 6 ராசிகளுக்கு ராகு-கேது தோஷம் நீங்கும்

Post  gandhimathi Mon Jan 21, 2013 1:51 pm


இந்த நவம்பர் மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக திகழ்கிறது. நாளை 1-11-2011 என்று வருவது எண்கணித ராசிப்படி மிகவும் அதிர்ஷ்டமான நாளாகும்.

இதையடுத்து வரும் 11-ந் தேதியும் அதிர்ஷ்ட நாள் தான். அன்றைய தினமான 11-11-2011ல் 6 ஒன்றாம் எண் வருவது விசேஷமானது. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இது போன்ற நாள் வரும்.

அடுத்ததாக 22-2- 2022-ம் ஆண்டு தான் ஒரே எண் 6 முறை வருவது போல் அமையும். நாளைய தினமான 1-11-2011-ல் 5 எண்கள் ஒரே மாதிரி (ஒன்று) அமைந்துள்ளன. இந்த அதிர்ஷ்ட நாள் பலன்கள் பற்றி பிரபல ஜோதிடர் யோகஸ்ரீ மணிபாரதி கூறியதாவது:-

தேதியில் வரும் எண் 1 சூரியனை குறிக்கிறது. மாதத்தின் கூட்டு எண் 2 சந்திரனையும், வருடத்தின் கூட்டு எண்.4, ராகுவையும் கூட்டு எண் 7 கேதுவையும் குறிக்கிறது.

இந்த (1-11-2011) எண் கணித அதிர்ஷ்ட நாளில் சிம்மம், கடகம், தனுசு, மிதுனம், கன்னி, துலாம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் ராகு-கேது தோஷம் நீங்கும். தேதியில் வரும் கூட்டு எண்-1க்குரிய பலன்: 1-ம் எண் என்று சொல்லக்கூடிய 1,10,19,28-ந் தேதியில் பிறந்தவர்கள் மேலும் கூட்டு எண் 1 வரக்கூடியவர்கள் தற்போது கிரக கோச்சாரப்படி சூரியன் நீச்ச நிலையில் இருந்தாலும் குருவால் பார்க்கப்படும் யோக நிலையை பெற்றதால் நீசம் பங்கமாகி ராஜயோகத்தை தரக்கூடியதாக இந்நாள் உள்ளது.

சிம்ம ராசிக்காரர்கள் சிம்ம லக்னக்காரர்கள் ஐப்பசியில் பிறந்த அத்தனை பேருக்கும் யோகத்தை தரக்கூடியது. மாதத்தில் வரும் கூட்டு எண் 2 வருவற்கான பலன்கள் இதில் 11 என்பது 2-ம் எண்ணான சந்திர ஆதிபத்தியத்தில் சிறப்பு நிலை உடைய எண் ஆகும்.

சந்திரனால், சூரியனால் ஒளி பெறுகிறது என்பதற்கு சான்றாக இருக்கும் எண் 11. இது மாதத்தின் எண்ணாக வருவதால் 2-ம் எண் ஆதிபத்தியம் உடைய சந்திரனின் எண்ணாக இருப்பதால் (நவம்பர் 11) அதில் சிறப்பு எண்ணான 11 ஆக அமைவதால் இம்மாதம் அதிர்ஷ்டமான மாதமாக அமைகிறது. கவலை இல்லாத தன்மையும் ஏற்படும். எனவே 2-ம் எண்காரர்கள் அனைவரும் ஆனந்தமாக இருக்கலாம்.

ஆண்டின் கூட்டு எண் 4-க்குரிய பலன்கள் ஆண்டு 2011-ன் கூட்டு எண் 4. எனவே 4,13,22-ந் தேதி பிறந்தவர்களும், ராகு ஆதிபத்தியம் பெற்றவர்களும் ராகு திசை, ராகு புத்தி நடப்பவர்களும் சிறப்பான பலன்களை பெறுவர். ராகு-கேது தோஷம் நீங்கும் 2-என்கிற சந்திரன் பூஜ்ஜியம் என்கிற சூரியன், ஒன்று, ஒன்று என்கிற சூரியன், ஒரு சந்திரன் இணைப்பு பெற்ற இந்த ஆண்டு 3 சூரியன், 1 சந்திரனின் இணைப்பு பெற்றதாக அமைகிறது.

அதில் 21-ம் நூற்றாண்டின் 11-ம் ஆண்டாக அதிலும் சந்திரனின் சிறப்பு ஆண்டாக அமைகின்ற இந்த கூட்டணி நாள் ராகு-கேது தோஷங்களை நீக்கும் வல்லமை வாய்ந்தது. இந் நாளில் ராகு-கேதுவை வழிபட்டு தோஷம் நீங்க பெறலாம். எண் ராசிப்படி குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சிம்மம், கடகம், தனுசு, மிதுனம், கன்னி, துலாம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் ராகு-கேது தோஷம் நீங்கும்.

வழிபாடு ராகு-கேதுவால் திருமண தோஷம், புத்திரதோஷம் இருப்பவர்கள் சிறப்பு வழிபாடு செய்வதன் மூலம் தோஷம் நீங்கி செழிப்பை பெறுவர். இதில் 1-11-2011 கூட்டு எண்ணான கேதுவின் அம்சம் பெற்ற 7-ம் எண் அமைவதால் இம் மாதத்தில் ஆன்மீக சிந்தனை உள்ள அனைவரும் முன்னேற்றம் காண்பர். மேஷம் 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும், கேது புத்தி நடப்பவர்களுக்கும் யோக கேதுவாக அமைகிறார்.

அதுமட்டுமின்றி 1-11-11 என்பது 5 என்ற சிறப்பு நிலையை உணர்த்துவதால் புதனின் ஆதிபத்தியம் பெற்ற இந்த 5 பொருளதார மேன்மை, கல்வியில் சிறப்பு நிலையை உண்டாக்கும். புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும். ஆக சூரியன், சந்திரன், ராகு, கேது என்ற இணைப்பு நிலைகளுக்கு அப்பாற்பட்டு புதனின் ஆதிபத்தியத்தை அதிகம் தரக்கூடிய நாளாக இந்த நாள் அமைகிறது.

பரிகாரம் இந்த நாளில் மற்ற 3,6,8,9 தேதிகளில் பிறந்தவர்களும் இந்த அதிர்ஷ்ட நாளின் யோகத்தை பெறுவதற்காக நாளை காலை சிவன் கோவிலுக்கும், பிற்பகலில் அம்பாள், மகாவிஷ்ணு கோவில்களுக்கும், மாலையில் விநாயகர் கோவிலுக்கும் சென்று வழிபடுவதன் மூலமும் காலை, மாலை நேரம் சிவஸ்தலம் விஷ்ணு தலம் சென்று வழிபடலாம்.

இதன் மூலம் திருமண தடை நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும், பொருளாதார ஏற்றம் உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும். எலெக்ட்ரானிக் துறையை சார்ந்த கம்ப்யூட்டர் தொழிலில் உள்ளவர்கள் மேன்மை பெறுவர். குடும்ப ஒற்றுமை ஓங்கும். பூர்வ புண்ணிய சொத்துக்களில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். ஆடை ஆபரண சேர்க்கைகள் உண்டாகும் என்கிறார் யோகஸ்ரீ மணிபாரதி.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum