“ரசிகர்களை தலைநிமிர்ந்து வாழச் செய்வேன்…சீக்கிரம் வருவேன்”-கலங்க வைத்த ரஜினி
Page 1 of 1
“ரசிகர்களை தலைநிமிர்ந்து வாழச் செய்வேன்…சீக்கிரம் வருவேன்”-கலங்க வைத்த ரஜினி
சிகிச்சைக்காக நேற்றிரவு சிங்கப்பூர் கிளம்பும் முன் ரஜினி தனது ரசிகர்களுக்காக பேசிய ஆடியோவை அவரது இளைய மகள் செளந்தர்யா இன்டர்நெட்டில் வெளியிட்டார்.
அந்த ஆடியோவில், தன் உடல் வலிகளையும் மறைத்துக் கொண்டு தனக்கேயுரிய சிரிப்பை உதிர்த்தபடி, ‘சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா’ என்று அவர் ரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் உடைந்த குரலில் சொன்னது… அத்தனை ரசிகர்களையும் உலுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.
அந்த ஆடியோவில் உள்ள ரஜினியின் வாய்ஸ் இது தான்:
“ஹலோ… நான் ரஜினிகாந்த் பேசறேன்… ஹாஹாஹாஹா…. ஹாப்பியா போய் வந்துக்கிட்டிருக்கேன் நான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…
நீங்க கொடுக்கிற இவ்வளவு அன்புக்கு நான் என்னத்தை திருப்பி கொடுக்கிறது…?.
பணம் வாங்கறேன், ஆக்ட் பண்றேன். அதுக்கே நீங்க இவ்வளவு அன்பு கொடுக்கறீங்கன்னா… இதுக்கு எதை நான் கொடுக்கிறது?.
டெஃபனிட்டா நீங்க எல்லாரும், உலகம் முழுக்க இருக்கிற நம்ம பேன்ஸ் எல்லாரும் தலைநிமிர்ந்து வாழ்ற மாதிரி நான் செய்வேன் கண்ணா.
கடவுள் கிருபை எனக்கு இருக்கு. குரு கிருபை இருக்கு. எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்கிற உங்க கிருபை என் மேல இருக்கு… நான் சீக்கிரம் வந்துடறேன். ஓகே… பை… குட்”.
மகிழ்ச்சியாக இருக்கிறார்-ராமச்சந்திரா:
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
நடிகர் ரஜினிகாந்த் மே 13ம் தேதி நள்ளிரவில் மூச்சுத்திணறல் காரணமாகவும் காய்ச்சல் காரணமாகவும் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக மார்ச் மாதம் முதல் அவருடைய குடும்ப டாக்டர்கள் தொடக்கத்தில் சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். இரு முறை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்த 13ம் தேதியில் இருந்து ரஜினிகாந்துக்கு முறைப்படி பொறுப்பாக பல தரப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அவரே உணவை உட்கொள்கிறார். உலாவுகிறார். குடும்பத்தினருடன் பொழுது போக்குகிறார். அவர் ஒரு மாற்றத்திற்காவும், ஓய்வு எடுக்கவும் சில குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைக்காகவும் வெளிநாடு செல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ஆடியோவில், தன் உடல் வலிகளையும் மறைத்துக் கொண்டு தனக்கேயுரிய சிரிப்பை உதிர்த்தபடி, ‘சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா’ என்று அவர் ரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் உடைந்த குரலில் சொன்னது… அத்தனை ரசிகர்களையும் உலுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.
அந்த ஆடியோவில் உள்ள ரஜினியின் வாய்ஸ் இது தான்:
“ஹலோ… நான் ரஜினிகாந்த் பேசறேன்… ஹாஹாஹாஹா…. ஹாப்பியா போய் வந்துக்கிட்டிருக்கேன் நான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…
நீங்க கொடுக்கிற இவ்வளவு அன்புக்கு நான் என்னத்தை திருப்பி கொடுக்கிறது…?.
பணம் வாங்கறேன், ஆக்ட் பண்றேன். அதுக்கே நீங்க இவ்வளவு அன்பு கொடுக்கறீங்கன்னா… இதுக்கு எதை நான் கொடுக்கிறது?.
டெஃபனிட்டா நீங்க எல்லாரும், உலகம் முழுக்க இருக்கிற நம்ம பேன்ஸ் எல்லாரும் தலைநிமிர்ந்து வாழ்ற மாதிரி நான் செய்வேன் கண்ணா.
கடவுள் கிருபை எனக்கு இருக்கு. குரு கிருபை இருக்கு. எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்கிற உங்க கிருபை என் மேல இருக்கு… நான் சீக்கிரம் வந்துடறேன். ஓகே… பை… குட்”.
மகிழ்ச்சியாக இருக்கிறார்-ராமச்சந்திரா:
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
நடிகர் ரஜினிகாந்த் மே 13ம் தேதி நள்ளிரவில் மூச்சுத்திணறல் காரணமாகவும் காய்ச்சல் காரணமாகவும் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக மார்ச் மாதம் முதல் அவருடைய குடும்ப டாக்டர்கள் தொடக்கத்தில் சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். இரு முறை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்த 13ம் தேதியில் இருந்து ரஜினிகாந்துக்கு முறைப்படி பொறுப்பாக பல தரப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அவரே உணவை உட்கொள்கிறார். உலாவுகிறார். குடும்பத்தினருடன் பொழுது போக்குகிறார். அவர் ஒரு மாற்றத்திற்காவும், ஓய்வு எடுக்கவும் சில குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைக்காகவும் வெளிநாடு செல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வழக்கு எண் 18/9: மீடியாவைக் கலங்க வைத்த பாலாஜி சக்திவேல்!
» ‘விமான நிலையத்தில் என் ரசிகர்களை நடந்தே போய் பார்க்க ஆசைப்படுகிறேன்!’ – ரஜினி நெகிழ்ச்சி
» ரஜினி கமலை போல் நிச்சயம் வருவேன்: உதய்கிரண்
» லண்டனில் தமிழ் ரசிகர்களை சந்தித்த ரஜினி!
» ஆந்திர மக்களுக்கு கஷ்டமென்றால் முதல் ஆளாய் வருவேன்! – ரஜினி
» ‘விமான நிலையத்தில் என் ரசிகர்களை நடந்தே போய் பார்க்க ஆசைப்படுகிறேன்!’ – ரஜினி நெகிழ்ச்சி
» ரஜினி கமலை போல் நிச்சயம் வருவேன்: உதய்கிரண்
» லண்டனில் தமிழ் ரசிகர்களை சந்தித்த ரஜினி!
» ஆந்திர மக்களுக்கு கஷ்டமென்றால் முதல் ஆளாய் வருவேன்! – ரஜினி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum