கால்பெருவிரல் ரேகை ஜோதிடம்
Page 1 of 1
கால்பெருவிரல் ரேகை ஜோதிடம்
மனிதர்களின் பாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிற கால் பெருவிரல் அச்சு ரேகைகளை எவ்வாறு அமைந்துள்ளது. அந்த ரேகையை உடையவர் வாழ்க்கை முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது. என்பதைத் கண்டறிந்து அதன் மூலம் ஏற்பட்டதே இந்த கால் பெருவிரல் ரேகை ஜோதிடம்.
கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகள் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றவை என்பது கண் கூடான உண்மை. கால் பெருவிரல் ரேகையை எடுத்து ஒவ்வொரு கோடுகளின் கணக்கீட்டினை கணித்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் எதிர் காலத்தன்மையும் கூறக் கேட்டு அவர்கள் முன்னேற்றம் அடையலாம்.
பிறந்த குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையை எடுத்து கணித்து அதற்கு ஏற்றார் போல் பெயர் சூட்டினால் அவர்கள் எதிர்காலம் சிறப்படையும், புகழையும் பெறுவர் என்பது நிச்சயம். கால் பெருவிரல் ரேகையில் குழிமுகம் இருந்தால் அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும்.
அவரது கால் பெருவிரல் ரேகையின் மூலம் அவர் எந்தத் தெய்வத்தினை எந்தெந்தப் பூஜைப் பொருட்கள் மற்றும் ஒவ்வொரு மனிதனின் விதி, அவன் உடல் சார்ந்த தெய்வம் எந்தத் தொழிலை அவர் செய்தால் மேன்மையடையலாம், அதன் மூலம் அவருடைய வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய பலன்கள் அனைத்தும் அவருடைய கால் பெருவிரல் ரேகையில் மட்டுமே உள்ளது.
இது பல்வேறு மனிதனின் கால் பெருவிரல் ரேகைகளைப் பதிவு செய்து ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மை. கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக் கோடுகள், வாகைக் கோடுகள், நாகக் கோடுகள், சங்குக் கோடுகள், சூரியக் கோடுகள், வருணக் கோடுகள், சக்கரக் கோடுகள் மலர்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் கண்டு அறிந்து அதன் படி அவருக்கு உரிய நேரத்தில் பக்தி சிரத்தையுடன் மூன்று பௌர்ணமி நாட்களில் கும்பிட்டு வந்தால், அவருடைய வாழ்க்கை ஒளிமயமாகும்.
கலை உலகம் என்கின்ற நடன, நாட்டியம், சங்கீதம், சினிமா சார்ந்த துறைகளில் உள்ளோர்களுக்கு பெண்களாக இருந்தால் கால் பெருவிரல் ரேகை கலச முகம் பெற்று வில்வக் கோடுகள் அல்லது சூரியக் கோடுகள் பெற்றிருந்தால் புகழுச்சிக்குச் செல்லும். ஆண்களாக இருந்தால் கால் பெருவிரல் ரேகை கோமுகம் பெற்று சந்திரக் கோடுகள் அல்லது சக்கரக் கோடுகள் அமைந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்வச் செழிப்புடன் பெரும் புகழ் பெறுவர்.
ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக் கோடுகள் இருந்தால் அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்த கோடுகளுடன் சக்கரக் கோடுக் இருந்தால் அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வர். கால் பெருவிரலில் உள்ள ஒரு சில கோடுகளும், ஒரு சில முகங்களும் ஒரு சிலருடைய நட்சத்திரங் களுக்கும், ராசிகளுக்கும் நன்மையையும், தீமைகளையும் கொடுக்கக் கூடியது என்கிறார் விஜய்சுவாமிஜி.
திருமணத் தடை நீங்க:
கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார்-யார் எந்தெந்த தெய்வங்களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? இல்லையா? என்பதையும் கணிக்க முடியும். இக்கணிப்பில் யார், யார் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப் பெரிய நற்பலன்களை அடைய முடியும் என்பதையும் கூறமுடியும்.
இதனால் வாழ்க்கையில், வியாபாரத்தில் செய்யும் தொழிலில் தோல்வி கண்டவர்களுக்கும், திருமண தடைப்பட்டவர்களுக்கும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் இன்னும் பல்வேறு பிரச்சினையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாண வழி கிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் உறுதியாக வெற்றி கிடைக்கும். எத்துணை குழப்பங்கள் இருந்தாலும் அவையனைத்தும் தீர்ந்து நிம்மதி ஏற்படும். அனைவரின் வாழ்க்கையிலும் ஒளிவிளக்கு சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.
விபத்தை அறியலாம்:
ஆண்டவன் படைப்பில் ரேகைகள் ஓர் வரப்பிரசாதமாகும். ஆயுள் ரேகை, இருதய ரேகை, புத்தி ரேகை, மனிதர்களுக்கு ஏற்படுகின்ற விதி ஆகியவற்றிற்கான விசயங்கள் பலவற்றையும் கால் பெருவிரல் ரேகையில் அறிய முடியும். மனிதர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் விபத்துக்கள், தானாகவே தேடி வரும் விபத்துக்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூட கால் பெருவிரல் ரேகையில் கணிக்க முடியும்.
நட்சத்திரமும் ரேகையும:
"பரணி'' நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல லட்சம் பேர் இருந்தும் "தரணி'' ஆள முடியவில்லை. அதற்கான காரணம் என்ன? அவர்களுடைய கால் பெருவிரல் ரேகையில் கஜமுகம், வாகைக் கோடுகளும், அமையாமல் இருப்பது தான் முதற்காரணம். ஆக `பரணி', `மகம்' நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய கால் பெருவிரல் ரேகை அமைப்பில் `கஜமுகமும்' வாகைக் கோடுகளும் அமைந்திருந்தால் ஒரு நாட்டையே (தரணியை) ஆளும் தகுதி அவர்களுக்குத் தானாகவே வந்து சேரும்.
சூரியக் கோடு மட்டும் தனிப்பட்ட முறையில் அமைந்திருப்பது கடினம், அவ்வாறு அமையப் பெற்றவர்கள் எப்போதும் சிரமமில்லாத வாழ்க்கை வாழ்வர். கத்தரிக் கோடுகள் அமையப் பெற்றவர்கள் முட்டாள் தனமாகவும், மிருகத்தனமாகவும் இருந்து கொண்டு, கொலை செய்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் அஞ்சாதவராக இருப்பார்.
அவர்கள் தண்டனையை நிச்சயம் பெறுவர். இவர்களுடைய கால் பெருவிரல் ரேகையில் சக்கரக் கோடுகள் அமையப் பெற்றிருப்பது கடினம். அவ்வாறு சக்கரக் கோடுகள் அமைந்திருந்தால் எவ்விதக் குற்றங்களிலிருந்தும் வெற்றி பெற்று சுலபமாகத் தப்பி விடுவார்.
தொழிலில் வெற்றி பெற:
முக்கியமாக செய்து கொண்டிருக்கும் தொழிலில் அல்லது ஆரம்பிக்கின்ற தொழிலில் முன்னேற்றம் அடைந்து தொழில் அதிபர்களாக ஆக முடியுமா? முடியாதா? அரசியலில் தொண்டாற்றுகிறவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளில் நிலைத்து நின்று நல்ல பதவிகளைப் பெற முடியுமா? முடியாதா? அவ்வாறு முடியாமல் போனால் என்ன செய்வது என யோசிக்கும் முன்னரே அவரவர் கால் பெருவிரல் ரேகையின் நியமப்படி அவர்கள் என்ன மாற்றத்தைச் செய்தால், தொழிலில் அரசியலில் நல்ல முன்னேற்றங்களையும், வாய்ப்புகளையும் பெறலாம் என்பதை அறிந்து கொண்டு அதன்படி தவறாது கடைபிடித்து நடந்தால் நிச்சயம் நல்ல பயன்கள் கிடைக்கும்.
மனிதர்களின் கை அமைப்பு ஆறு என்றும், ஏழு என்றும் வகைக்கு ஆராய்ந்த முனிவர்களும், நிபுணர்களும், பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின் மக்களிடத்தில் கொண்டு வந்துள்ளனர். அதில் விரல்களின் அமைப்பு, நகரங்களின் அமைப்பு, கணுக்களின் அமைப்பு, கிரக மேடுகள் அதிலுள்ள குறிகள் கங்கண, பிராயண, திருமணம், குழந்தை பேற்றுக்கான அபூர்வமான ரேகைகளும் மற்றும் இணை ரேகைகள், அலைகளுள்ள ரேகைகள், கிளை ரேகைகள் என அனைத்து ரேகைகளின் பலன்களையும் கை ரேகையில் காண்பதை விட துல்லியமாக கால் பெருவிரல் ரேகையில் கணிக்கலாம்.
குரு மேடு, சனிமேடு, சூரியமேடு, புதன் மேடு, செவ்வாய் மேடு, சுக்கிரமேடு, சந்திரமேடு, ஆகிய மேடுகள் உயர்ந்திருந்தால் ஏற்படும் பலன்கள், மத்தியமாக இருந்தால் ஏற்படும் பலன்கள், தாழ்ந்து இருந்தால், ஏற்படும் பலன்கள் ஆகியவற்றையும் கூட கால் பெருவிரல் ரேகைகளில் தெளிவாகக் காணலாம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய்சுவாமிஜி.
கோடுகளின் பலன்கள்:
கத்தரிக் கோடுகள், கூர்மக் கோடுகள், அந்திமக் கோடுகள், சந்திரக்கோடுகள், குழி முகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைளில் மாறி மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.
உதாரணமாக ஒருவருடைய கால் பெருவிரல் ரேகையில் வருணக் கோடுகள் அமைந்திருக்குமானால் அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். சதா காலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பவர். அந்தக் கோடுகளுடன் சூரியக் கோடுகளும் அவருக்கு அமைந்திருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும்.
இதுவும் ஆராய்ச்சியின் மூலம் கண்ட உண்மை, வாகைக்கோடுகள் அமையப் பெற்றவர், எல்லோருக்கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் ரகசியமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத்துடிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகளில் சிறு மாற்றம் செய்தால் வளமான வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம். அவர் செய்ய வேண்டிய மாற்றம் அவருடைய கால் பெருவிரல் ரேகைகளின் மூலம் கண்டறிய முடியும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum