தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெங்காயம் – திரை விமர்சனம்

Go down

வெங்காயம் – திரை விமர்சனம் Empty வெங்காயம் – திரை விமர்சனம்

Post  ishwarya Tue Apr 16, 2013 6:11 pm

ஒரு கிராமத்தில் திடீர் திடீரென சாமியார்களும் ஜோசியக்காரர்களும் காணாமல் போகிறார்கள். விஷயம் காவல்துறைக்கு செல்ல, காவல்துறையும் விசாரிக்க ஆரம்பிக்கிறது. கடத்தப்பட்டவர்கள் மீட்கப்படுகிறார்களா? கடத்தியது யார்? ஏன் கடத்தினார்கள்? என்பதை விறுவிறுப்பாக சொல்வதுதான் வெங்காயம் படத்தின் கதை.

இந்த விறுவிறுப்பான திரைக்கதையில் ஒரு காதல் ஜோடியின் கதையை இணைத்து படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனரான சங்ககிரி ராச்குமார்.

மூடநம்பிக்கைகளை வளர்த்து விடும் போலி சாமியார்களும், பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கும் ஜோசியர்களும் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் இடம் பெற்றுள்ள நெகிழ்ச்சியான காட்சிகள், நேர்த்தியான திரைக்கதை, சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் இயல்பான நகைச்சுவை வசனங்கள் ஆகியவற்றின் மூலம் வெங்காயத்தை நேர்த்தியாக பயரிட்டு வளர்த்திருக்கிறார். கௌரவ வேடத்தில் சத்தியராஜ் தோன்றுகிறார். பெரியாராக நடித்தவருக்கு இப்படத்தில் சொல்லித் தரவேண்டுமா என்ன?. அவரது பேச்சில் இடம்பெற்ம் பகுத்தறிவு வசனங்கள் அறியாமையை, மூடநம்பிக்கைகளை கிழித்தெறியும் வாளைப் போல் இருக்கிறது. சில காட்சிகளே வந்தாலும் மனதில் நின்றுவிட்டுப் போகிறார் சத்தியராஜ்.

படத்தில் நடித்திருப்பது நிறைய புதுமுகங்கள் என்றாலும், அவர்களது நடிப்பு கதாபாத்திரங்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்தி படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.. குறிப்பாக, பிளாஷ்பேக் காட்சிகளில் இடம்பெறும் நாடகக் கலைஞரின் வறுமையான வாழ்வை சொல்லலாம். அக்கலைஞருடைய மகனின் மருத்துவச் செலவுக்காக, பணம் இல்லாமல் போகவே மருத்துவமனைக்கு எதிரே கூத்துக்கட்டும் காட்சிகள் மனதை நெகிழச் செய்கின்றன.

நாடகக் கலைஞராக நடித்துள்ள எஸ்.எம்.மாணிக்கம் இயக்குனர் ராச்குமாரின் தந்தைதான். இவருக்கு சினிமாவில் தனி இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இயக்குநர் ராச்குமாரும் நடித்திருக்கிறார். அவருடைய சேலத்து தமிழ் உச்சரிப்பும், யதார்த்தமான நடிப்பும் மனதில் பதிகின்றன.

இளம் காதல் ஜோடிகளாக வரும் அலெக்சாண்டர், பவீனா ஆகியோரின் நடிப்பு கனகச்சிதம். பவினாவின் கிராமத்து பேச்சும், குறும்பும் நம்மனதை கொள்ளை கொள்கின்றன. , பூ விற்கும் சிறுமி, சைக்கிள் கடைச் சிறுவன், டீ கடை சிறுவன், மனநலம் பாதித்த மூதாட்டி என படத்தில் வரும் துணை கதாபாத்திரங்களும் தங்களது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் பரணியின் இசைத்தாலாட்டில் “அச்சமென்ன அச்சமென்ன ஆசைத் தமிழே…’பாடல் மனதில் தாளம் போடுகின்றன. பகுத்தறிவு வசனங்களுக்கேற்ப பின்னணி இசையும் படத்திற்கு உயிரூட்டுகின்றன.

ஒளிப்பதிவாளர் சபா ரத்தினம் செதுக்கிய காட்சிகளை, செ.மா.செந்தில்குமாரின் படத்தொகுப்பு சிற்பமாக்கி காட்டியிருக்கிறது. சுப. வீரபாண்டியன் மற்றும் அறிவுமதியின் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது
படத்தில் சில ‘லாஜிக்’ மீறல்கள் இருக்கின்றன, கிளைமாக்ஸ் காட்சியில் வயதுக்கு மீறிய அனுபவத்துடன் சிறுவர்கள் பேசும் பகுத்தறிவு வசனங்கள் ஒட்டவில்லை. இப்படி சில குறைகள் இருப்பினும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் தோலுரித்துக் காட்ட ‘வெங்காயத்தை’ பயன்படுத்திய சங்க்கிரி ராச்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அன்று பெரியார் சொன்ன ‘வெங்காயம்’ அன்றைய தமிழக மக்களுக்கு விழிப்புணர்வைத் தந்தது. இன்று வெள்ளித்திரையில் உரிக்கப்பட்ட ‘வெங்காயம்’ எல்லோருக்கும் விழிப்புணர்வைத் தரும் எனலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum