தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மழை வருவது ’மயிலுக்கு’ தெரியும்…ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை

Go down

 மழை வருவது ’மயிலுக்கு’ தெரியும்…ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை Empty மழை வருவது ’மயிலுக்கு’ தெரியும்…ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை

Post  ishwarya Tue Apr 16, 2013 5:05 pm

ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு செய்யும் அலப்பறையால் நொந்து போயிருக்கிறார் தரணி. ஒரு ஷாட்டை கூட அவரால் சுதந்திரமாக வைக்க முடியவில்லை என்று மீடியாக்களில் தகவல் வெளியானது. (நமது இணையதளத்தில் அல்ல) தற்போது பெங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிம்பு, ரிச்சா இவர்களுடன் காமெடி நடிகர் மயில்சாமியும் நடித்து வருகிறார்.

நமக்கு கிடைத்த தகவல்படி படப்பிடிப்பில் சிம்புவால் எந்த பிரச்சனையும் இல்லையாம். மிக மிக ஜாலியாகவே படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். தரணியின் வேகத்துக்கு சிம்புவும் ஈடு கொடுத்து வருகிறாராம். அப்படியென்றால் மழை வர வேண்டுமே? நிஜமாகவே மழையும் வந்திருக்கிறது ஷுட்டிங்கில். இடைவிடாமல் மழை அடிக்க, நொந்து போனார்களாம் அத்தனை பேரும்.

அந்த நேரம் பார்த்துதான் ஒரு காரியம் செய்தார் மயில்சாமி. அருகில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வீசி எறிந்தாராம். இப்படி செஞ்சா மழை நிக்கும் தெரியுமா என்று விளக்கமும் கொடுத்தாராம். காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக மயில்சாமியின் கதைக்கேற்ப மழையும் நின்று விட்டது.

பக்கத்திலிருந்த சிம்பு மயில்சாமியிடம், மழை வருவது மயிலுக்கு தெரியும்னு பாட்டு ஒண்ணு இருக்கு. மழை நிக்கிறதும் மயிலுக்கு தெரியுதே என்று கூற யூனிட் மொத்தமும் விழுந்து விழுந்து சிரித்ததாம்.

நல்லாதான் இருக்கு எல்லாம். ஆத்தா எப்ப மலையேறுவாளோ?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum