தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இசைஞானியின் ’நாங்கள் கேட்டவை’ – ஒரு சந்தோஷ சங்கீதம்

Go down

இசைஞானியின் ’நாங்கள் கேட்டவை’ – ஒரு சந்தோஷ சங்கீதம் Empty இசைஞானியின் ’நாங்கள் கேட்டவை’ – ஒரு சந்தோஷ சங்கீதம்

Post  ishwarya Tue Apr 16, 2013 1:00 pm

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் திருமண கொண்டாட்டம் உறவுகளும் நட்பும் சேர்ந்தே 50 பேர்களுக்குள் நடந்து முடிந்திருக்கிறது. காலகாலமாக அவருக்கு நண்பர்களாக இருக்கும் பலருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் கூட அனுப்பி கல்யாண செய்தியை பகிர்ந்து கொள்ளவில்லையாம் அவர். இதனால் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறார்கள் அவரது பெரும்பாலான நண்பர்கள்.

போதும் ஆர்ப்பாட்டம். அமைதியாகவே நடக்கட்டும் என்று கூறிவிட்டாராம் அப்பா இசைஞானி. ஆனால் இநத் திருமணத்தில் இசைஞானியை ஒரு குழந்தையை போல குதுகலமாக பார்க்க முடிந்ததே, அதுவே பெரிய வரம் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்தில். எப்படியாம்?

இந்த திருமணம் முடிந்தபின் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ஹயாத் என்ற நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடந்தது. இங்கும் ஐம்பது பேர் மட்டுமே வந்திருந்தார்களாம். ஒரு சிறிய இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்ப்டடிருந்தது. அங்குதான் இசைஞானி இளையராஜாவின் உற்சாகம் வெளிப்பட்டதாம்.

ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டவர், தனது தம்பி கங்கை அமரனிடம் தனக்கு பிடித்த பாடல்களையெல்லாம் ஒவ்வொன்றாக சொல்லி பாட சொல்ல, அங்கு வந்திருந்த சில பாடகர்களை பாட சொல்லி நிகழ்ச்சியை ’கன்டக்ட்’ செய்து கொண்டிருந்தாராம் அமரன்.

பிரபல அந்த நட்சத்திர ஓட்டலில் நடந்த முதல் மங்கள நிகழ்ச்சியும் இதுதான் என்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum