சங்ககிரி காளான் குழம்பு
Page 1 of 1
சங்ககிரி காளான் குழம்பு
தேவையான பொருள்கள்:
காளான் = 100 கிராம்
சின்ன வெங்காயம் = 50 கிராம்
தக்காளி = 100 கிராம்
பச்சை மிளகாய் = 3
பூண்டு = 1 முழுதாக
இஞ்சி = காலங்குலம்
புளி = சிறிது
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
தனியா பொடி = 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
எலுமிச்சை = பாதி
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
காளானை நறுக்கி கழுநீரில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து சிறிது மஞ்சள் பொடி கலந்து 2 முறை அலசி எடுத்து லேசாகப் பிழிந்து கொள்ளவும். அழுத்திப் பிழிந்தால் காளான் பிய்ந்து போய் விடும். அது போல அதிக நேரம் ஊற விட்டால் நீர் கோர்த்துக் கொள்ளும்.
இஞ்சியையும், பூண்டையும் அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடி பொடியாக நறுக்கவும்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து உப்பு, மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்துக் கலந்து வைக்கவும்.
கரைத்த புளித் தண்ணீரை பொடிகளோடு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைக்கவும்.
அடுத்து எண்ணெயில் சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கி அடுத்தாக அரைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து காளானையும் சேர்த்து நன்றாக வதக்காமல் லேசாக வதக்கி கொதித்த புளி தண்ணீரையும் கொட்டி மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான சங்ககிரி காளான் குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
காளானில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நீர் மற்றும் ஃபைபர் காணப்படுகிறது.
நீரிழிவு உடையவர்கள் காளானை எடுத்து கொள்வதால் தொற்று நோய்கள், வீக்கம் போன்றவை குறைகிறது.
காளானில் இரும்பு, தாமிரம், பொட்டாசியம், செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது. நகங்கள், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum