தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாகை சூட வா ஸ்பெஷல் ஹைலைட்ஸ்!

Go down

வாகை சூட வா ஸ்பெஷல் ஹைலைட்ஸ்! Empty வாகை சூட வா ஸ்பெஷல் ஹைலைட்ஸ்!

Post  ishwarya Fri Apr 12, 2013 2:40 pm

களவாணி படத்த‌ை தொடர்ந்து நடிகர் விமல் மற்றும் டைரக்டர் சற்குணம் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் வாகை சூட வா. இயல்பான வாழ்க்கையை திரைக்கதை அமைத்து முதல் படத்தில் வெற்றிகண்ட சற்குணம், தனது இரண்டாவது படத்தில் மறைந்து போன நமது பழக்க வழக்கங்களை ஞாபகப்படுத்தப் போகிறாராம். இப்படத்தை பற்றிய ஹைலைட்ஸ் இதோ…

* 1996-ம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் நடந்த உண்மை கதையை படமாக்கியிருக்கும் படம் தான் வாகை சூட வா.

* கருப்பட்டி பாலில் டீ போட்டு விற்கும் ஹீரோயினுக்கும், பியூசி படித்துவிட்டு, வாத்தியார் படிப்பு படிச்சிட்டு வாத்தியார் வேலைக்குத்தான் போகணும் என்று வாழும் ஹீரோவுக்கு இருக்கிற காதல் தான் படத்தின் கதை.

* படத்தின் நாயகனாக விமலும் அவருக்கு ஜோடியாக கேரள மிஸ் பட்டம் வென்ற இனியா, இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் விமல் அப்பாவாக பாக்யராஜூம், இனியா அப்பாவாக தம்பி ராமையாவும், குருவிக்காரன் கேரக்டரில் குமார வேலும் நடித்துள்ளனர்.

* படத்தின் இந்த காதல் கதையோடு அந்தகாலத்து எதார்த்த வாழ்க்கையையும், உணர்வுகளின் அழகியலையும் மிகைப்படுத்தாமல், நகைச்சுவை உணர்வோடு வாகை சூட வா படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் சற்குணம், தொப்புள் கொடி மாலை போட்டு பிறந்த குழந்தையின் முகத்தை எண்ணெய்யில் பார்க்கும் மாமன்காரன், கூண்டுக்குள் கோழி வைத்து நரி பிடிக்கும் வைத்தியர், மழை நேரத்தில் குளத்தில் உள்ள பனைமரத்தில் ஏறும் சன்னை மீன், கழுதையில் உப்பு விற்கும் வியாபாரிகள், அரசாங்கத்தின் தங்கபத்திர வேலைவாய்ப்பு திட்டம் என மறைந்துபோன அடையாளங்களை கண் முன் நிறுத்தி 1966ஆம் ஆண்டின் காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறாராம்.

* வாகை சூட வா படத்திற்காக படத்திற்காக அருப்புக்கோட்டை அருகே, ரூ.2 கோடிக்கு மேல் செலவு செய்து கண்டெடுத்தான்காடு என்ற ஒரு கிராமத்தையே செட் போட்டிருக்கிறார்கள். எதார்த்தமாக அமைந்த அந்த கிராமத்தை உண்மையான கிராமம் என்று நினைத்து போலியோ சொட்டு மருந்துபோட அரசாங்க பணியாளர்கள் வந்துவிட்டார்களாம். அந்த அளவுக்கு எதார்த்தமாக அமைக்கப்பட்டிருந்ததாம்.

* படம் 1966-ம் ஆண்டு எடுக்கப்பட்டது போல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தகாலத்தில் பயன் படுத்திய பொருட்களை கண்டு பிடித்து, கலைநயம் மாறாமல் சிலவற்றை செய்துள்ளனர். படத்தில் ஒரு ரேடியோ ஒலிப்பரப்பு ஒரு முக்கிய பங்கு வகுக்கிறதாம்.

* புதுமுக இசையமைப்பாளர் எம்.ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தபடத்தில் அ…ஆ… என்ற பாடலை, போர்ச்சுக்கல் செய்று சிம்பொனியில் இசையமைத்துள்ளார். இந்தபாட்டு பெரிதும் பேசப்படுமாம்.

களவாணி படத்திற்கு பிறகு சற்குணம், விமல் கூட்டணியில் இந்தபடம் வெளிவர இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பாட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum