தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதீத மாதவிடாய் நோய்

Go down

அதீத மாதவிடாய் நோய்  Empty அதீத மாதவிடாய் நோய்

Post  ishwarya Fri Apr 12, 2013 11:41 am

அதீத மாதவிடாய் நோய்
அளவுக்கு அதிகமாக இரத்தம் மாதவிடாயின் போது கழிவதை நாம் அதீத மாதவிடாய் என்று சொல்லுகிறோம். இந்த அதீத மாதவிடாய் ஏற்பட பல காரணங்கள் உண்டு. மாதவிடாய் நிற்கும் காலத்தில், அதாவது 40-45 வயதுகளில் அதீத மாதவிடாய் காணலாம். குழந்தை பிறந்ததும் சில சமயஙகளில் சரியாகக் கோழைப்படலம் அல்லது சூல் ஆகியவை சிறிது உள்ளே தங்கியிருந்தாலும் அதீத மாதவிடாய் நிச்சயமாக உண்டாக வாய்ப்பு மிகுதி. பெண்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் கேடுற்று இருந்தாலும் அதீத மாதவிடாய் ஏற்படும். நம் உடலில் பித்தம் சுரப்பது அதிகமாவதாலும் ஹார்மோன் சுரப்பு கேடடைகிறது. பல விதமான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களாலும் அல்லது கருப்பையில் புற்றுநோய் கண்டாலும் அதீத ரத்த போக்கு ஏற்படும்.
குறி குணங்கள்:
அடி வயிற்றுப் பகுதியில் மிக்க வலியுடன் மாதவிடாய் ஏற்படும். நீண்ட நாட்களுக்கு அதீத மாதவிடாய் ஏற்படின் உடல் மிக இளைத்து விடும். எழுந்து நடக்க முடியாத அளவுக்குச் சக்தியிருக்காது மயக்கம், தலைவலி, தோள் பட்டைகளில் அதிகவலி, தூக்கமின்மை முதலியன ஏற்படும். இவற்றால் அனீமியா என்னும் ரத்தசோகை நோயும் ஏற்படக்கூடும். இதயத் துடிப்பும் மிக அதிகமாகும்.

மருந்து 1

நாகமரம்
நாகமரம்

நாகமரம்
நாகமரம்

நாகமரம்
நாகமரம்



உபயோகிக்கும் முறை:
நாகப்பட்டையை சிறிது தண்ணீர் விட்டு இடித்துப் பிழிந்த சாறில் 30 மி.லி காலை, மாலை என குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் அதிக ரத்தப் போக்குக் குறையும்.
**************************************
மருந்து 2
உபயோகிக்கும் முறை:
வாழைப் பூவை இடித்துப் பிழிந்த சாறு 30 மி.லி குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்குக் குறையும்.
**************************************
மருந்து 3
உபயோகிக்கும் முறை:
கருவேலம் பட்டையை இடித்து 60 கிராம் அளவு எடுத்து 600 மி.லி தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து, 100 மி.லியாகச் சுண்ட வைத்து மருந்துகளைப் பிழிந்து வடிகட்டி வேளைக்கு 50 மி.லி வீதம், ஒருநாளைக்கு இரண்டு வேளை குடித்து வந்தால் அதிக ரத்தப்போக்குக் குறையும்.
**************************************
மருந்து 4
உபயோகிக்கும் முறை:
மாதுளை வேர்ப் பட்டையைக் கஷாயம் செய்து அதில் மாதுளம் பட்டையின் சூரணத்தைக் கலந்து குடித்து வந்தால் அதிக ரத்தப்போக்குக் குறையும்.
**************************************
மருந்து 5
தேவையான பொருட்கள்:

மாங்காய்.
நெய்.

உபயோகிக்கும் முறை:
மாங்காயின் தோலைச் சீவி நெய்யில் வறுத்து அம்மியில் அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்குக் குறையும்.
**************************************
மருந்து 6
தேவையான பொருட்கள்:

மாம்பருப்பு.
தேன்.

உபயோகிக்கும் முறை:
மாம்பருப்பை வெயிலில் காய வைத்து, இடித்து, பொடித்து, சலித்து 1/4 – 1/2 டீஸ்பூன் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குறையும்.
**************************************
மருந்து 7
உபயோகிக்கும் முறை:
அசோகப் பட்டையைப் பஞ்சு போல் இடித்து 50 கிராம் எடுத்துக்கொண்டு 60 மி.லி தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றிச் சிறு தீயாக எரித்து 150 மி.லியாகச் சுண்ட வைத்து வேளைக்கு 50 மி.லி ஆகக் குடித்து வந்தால் பெரும்பாடு குறையும்.
**************************************
மருந்து 8
உபயோகிக்கும் முறை:
சீரகத்தை இடித்து, பொடித்து, சலித்து சம அளவு சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு 1/2 -1 டீஸ்பூன் அரிசி களைந்த நீருடன் ஒருநாளைக்கு இரண்டு வேளை குடித்து வந்தால் அதிக ரத்தப்போக்குக் குறையும்.
**************************************

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum