தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை ரஞ்சிதா சர்ச்சையில் சிக்கிய “நித்யானந்தா” படத்தை வெளியிட தடை: கோர்ட்டு உத்தரவு

Go down

நடிகை ரஞ்சிதா சர்ச்சையில் சிக்கிய “நித்யானந்தா” படத்தை வெளியிட தடை: கோர்ட்டு உத்தரவு Empty நடிகை ரஞ்சிதா சர்ச்சையில் சிக்கிய “நித்யானந்தா” படத்தை வெளியிட தடை: கோர்ட்டு உத்தரவு

Post  ishwarya Wed Apr 10, 2013 1:20 pm

நித்யானந்தா சாமியாரும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருப்பது போன்ற டி.வி.யில் வெளியான வீடியோ படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. நித்யானந்தா கைது செய்யப்பட்டார். ரஞ்சிதா தலைமறைவானார். இதையடுத்து நாடு முழுவதும் இருந்த நித்யானந்தாவின் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று நித்யானந்தா மறுத்தார். கிராபிக்ஸ் மூலம் போலியாக உருவாக்கப்பட்டு உள்ளது என்றார்.

இதுபோல் ரஞ்சிதாவும் திடீரென பத்திரிகையாளர்கள் முன்தோன்றி வீடியோ படம் போலியானது என்றார். இந்த நிலையில் நித்யானந்தா, ரஞ்சிதா சர்ச்சைகளை மையமாக வைத்து கன்னடத்தில் சினிமா படம் தயாரானது. மதன் பட்டேல் இயக்கினார். நித்யானந்தா வேடத்தில் ரவிசேட்டன் நடித்தார். பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

நித்யானந்தாவின் இளமை பருவம், சாமியாராக மாறிய கதை. ஆசிரம விதிமுறைகள், ரஞ்சிதா சீடரானது, படுக்கையறை சர்ச்சை உள்ளிட்ட அம்சங்கள் காட்சி படுத்தப்பட்டு உள்ளன. தெலுங்கில் சத்யானந்தா என்ற பெயரில் இப்படம் தயாராகி உள்ளது. படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று நித்யானந்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி நித்யானந்தா படத்தை வெளியிட தடை விதித்தார். நித்யானந்தா படத்தை விளம்பர படுத்தவோ விநியோகஸ்தர்களிடம் விற்கவோ ரிலீஸ் செய்யவோ கூடாது என்று உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum