தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினியைச் சாடுகிறார் பெண்ணிடம் தகாத முறையில் ‘சாட்’ செய்து சிக்கிய சாரு நிவேதிதா!

Go down

ரஜினியைச் சாடுகிறார் பெண்ணிடம் தகாத முறையில் ‘சாட்’ செய்து சிக்கிய சாரு நிவேதிதா! Empty ரஜினியைச் சாடுகிறார் பெண்ணிடம் தகாத முறையில் ‘சாட்’ செய்து சிக்கிய சாரு நிவேதிதா!

Post  ishwarya Mon Apr 08, 2013 2:10 pm

சினிமா நடிகர்களை வைத்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் போக்கு
அதிகரித்து விட்டதாக தேவையில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை
சாடியுள்ளார் சர்ச்சை எழுத்தாளரான சாரு நிவேதிதா.
தன் எழுத்தின் பால் ஈர்க்கப்பட்டு சாட் மூலம் தொடர்பு கொண்ட ஒரு
பெண்ணிடம் அத்துமீறி பாலுணர்வைத் தூண்டும் வகையில் பேசி அசிங்கப்பட்டவர்
இந்த சாரு நிவேதிதா என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்டவர்
ரஜினியை சாடியுள்ளது அவரது ரசிகர்களை கடும்
கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் இயல் விருது
பெற்றிருக்கிறார். இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில்
எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக
ரஜினிகாந்த் கலந்து கொண்டார். மிகச் சிறப்பான உரையையும் அவர்
கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போது ரஜினியை கடுமையாக சாடியுள்ளார் சாரு நிவேதிதா. அவர்
எழுதிய ஒரு புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தை சென்னையில் நடத்தினர்.இந்த
விழாவில் நிவேதிதா பேசுகையில், ஒரு எழுத்தாளன் அதிக வாசகர்களைக் கொண்டு
கூட்டம் நடத்தி விட்டார். அவரை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கில், நூல்
வெளியீட்டுக் கூட்டங்களையும், விமர்சனக் கூட்டங்களையும் நடத்தும் போக்கு,
தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காக, சினிமா நடிகர்களைக்
கொண்டு பாராட்டுக் கூட்டங்களை நடத்திக் கொள்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு,
நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ்
இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை.

காமத்தை மையமாகக் கொண்டு நாவல்களை எழுதுவதற்கு கடும் எதிர்ப்பு
கிளம்புகிறது. இன்றைய இளைஞர்கள், காமத்தால் சீரழியும் போது அதை எழுதாமல்
இருக்க முடியாது.

ஆங்கிலப் புனை கதைகளுக்கு இருக்கும், வரவேற்பு தமிழ் புனை கதைகளுக்கு
இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சமூகத்திற்குத் தேவையான பல
கருத்துக்களைத் தெரிவித்தார் நிவேதிதா.

சாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான
எழுத்துக்களை எழுதுபவர். சமூகம் ஒரு பக்கம் சிந்தித்தால் இவர் கோணல் மாணலாக
மட்டுமே சிந்திப்பவர். மேலும், தன்னுடைய எழுத்தால் ஈர்க்கப்பட்டு நட்பு
பாராட்டிய ஒரு பெண்ணிடம், அநாகரீகமாக, அசிங்கமாக சாட்டில் வாசகங்களை
வெளியிட்டு அம்பலப்பட்டு அசிங்கப்பட்டவர் இவர் என்பது அனைவருக்கும்
நினைவிருக்கலாம்.

இப்படிப்பட்டவர் கோடானு கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ரஜினியை சாடியிருப்பது ரஜினி ரசிகர்களை கடும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நிவேதிதா நிவேதிதா
» அக் 9-ம் தேதி ரஜினியைச் சந்திக்கிறார் ஷாரூக்கான்!
» ‘கிஸ்’-அடிச்சா தப்பா..!! நிவேதிதா!
»  பல லட்சம் முதலீடு செய்து ஒரு பள்ளியை நடத்தி வருகிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனாலேயே எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. வீட்டுக்கு சென்றாலும் பள்ளிக்குள் நுழைந்தாலும் பிரச்னைகளால் மன உளைச்சல் அதிகமாகிறது. தற்கொலை செய்து கொள்ளக்கூட முய
» குழந்தைகள் சத்துக் குறைபாடு விழிப்புணர்வு பிரச்சாரம்: ரஜினியைச் சந்தித்த மத்திய அரசு அதிகாரிகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum