கருடாழ்வாருக்கு கருணை காட்டிய பெருமாள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
கருடாழ்வாருக்கு கருணை காட்டிய பெருமாள்
பொதுவாக பெருமாள் கோவில்களில் கருடாழ்வார் சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் பெருமாளுக்கு அருகிலேயே கருடாழ்வார் வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு பிறந்த பெரியாழ்வார் கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம்.
ஆண்டாள் திருமணத்தின் போது கருடாழ்வார் பெருமாளை ஸ்ரீரங்கத்தில் இருந்து மிக வேகமாக அழைத்து வந்துவிட்டாராம். இதனால் அவருக்கு அருள்புரிய நினைத்த பெருமாள் அவரிடம் என்ன வேண்டும் என வினவியபோது, மாப்பிள்ளை தோழனாகவும், எப்போதும் பெருமாளை வணங்க வேண்டும் என்றும் கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட பெருமாள், அவரை தன் அருகிலேயே இருக்க அருள் புரிந்ததாக சொல்லப்படுகிறது. அவசர காலத்தில் ஓடி வந்து தாமாகவே உதவுபவர்கள் செய்த நன்றியை மறக்கக் கூடாது என்பதற்கு இக்கோலம் உதாரணம் என்கிறார்கள்.
மேலும், பெரியாழ்வார் தன் மகளை திருமாலுக்கு திருமணம் செய்து கொடுத்த போது மாப்பிள்ளை அருகில் நின்று கொண்டு தாரை வார்த்து கொடுத்தார். இதன் அடிப்படையில் பெரியாழ்வாரின் அம்சமான கருடாழ்வார், பெருமாள் அருகில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கருணை பொழியும் காள மேகப் பெருமாள்
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» கடவுளைக் காட்டிய ஸ்ரீராமகிருஷ்ணர்
» விவேகானந்தர் காட்டிய வழி...
» விவேகானந்தர் காட்டிய வழி...
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» கடவுளைக் காட்டிய ஸ்ரீராமகிருஷ்ணர்
» விவேகானந்தர் காட்டிய வழி...
» விவேகானந்தர் காட்டிய வழி...
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum