தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டார்! பிரபுதேவா தந்தை மீது புகார்!!

Go down

தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டார்! பிரபுதேவா தந்தை மீது புகார்!! Empty தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டார்! பிரபுதேவா தந்தை மீது புகார்!!

Post  ishwarya Mon Apr 08, 2013 1:59 pm

எனக்கு தாலி கட்டி விட்டு, குழந்தை பெற்றப் பிறகு ஏமாற்றிவிட்டு
இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று நடிகர் பிரபுதேவாவின் தந்தை
டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகார்
செய்திருப்பவர் பிரபல பெண் நடன இயக்குனர் தாரா. நூற்றுக்கணக்கான படங்களில்
நடன இயக்குனராக பணியாற்றியிருக்கும் சுந்தரம் மீது, பெண் நடன இயக்குனர்
தாரா ஐகோர்ட்டில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கும்
எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி
கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம். பிறகு ஊருக்கு போய்
விட்டு வருவதாக சொல்லி விட்டுப் போனார் அங்கு பிரபுதேவாவின் தாயை திருமணம்
செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி
என்னிடம் வருத்தப்பட்டார். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின்
நான்கு மாதம் என்னுடன் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி
விட்டு ஓடி விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டு,
ஒதுங்கியிருந்தேன். என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான்.
பொருளாதார ரீதியாக நாங்கள் இப்போது மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம்.

எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரது வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்றுதான் இத்தனை நாள் அமைதியாக
இருந்தோம். ஆனால் இப்போது நாங்கள் கஷ்டப்படுவதால், எங்களுக்கு உள்ள உரிமையை
கோருகிறோம், என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சுந்தரத்திற்கு
கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டு ஓடினார்! – பிரபு தேவா தந்தை சுந்தரம் மீது வழக்கு
» ஆள் அனுப்பி மிரட்டுறாங்க - விஜய் தந்தை மீது புகார்
» ரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா – நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்
» 15 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டி பலாத்காரம் – வாலிபர் கைது!
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum