தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!!

Go down

முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!! Empty முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!!

Post  ishwarya Mon Apr 08, 2013 1:50 pm

முதலில் சிம்புவை நம்பி ஏமாந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவையும் நம்பி
ஏமாந்துவிட்டாள் என்று நயன்தாராவின் உறவினர்கள் புலம்பி வருகின்றனர்.
சிம்பு உடனான காதல் முறிவுக்கு பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார்
நயன்தாரா. நயன்தாராவுக்காக முதல் முனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்
பிரபுதேவா.
அதேபோல் பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு எல்லாம் மாறினார் நயன்தாரா.
அதைவிட கல்யாணம் பண்ணா‌மலேயே இருவரும் சிறந்த தம்பதிகள் பட்டம் எல்லாம்
வாங்கினர். அப்படி ஈருடல் ஓருயிராக இருந்த வந்த இருவரும், இப்போது பிரிந்து
விட்டனர். நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் நயன்தாராவின் இந்த நிலைமையை பார்த்து அவரது சித்தி,
சித்தப்பா ஆகியோர் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,
நயன்தாராவின் நிலைமையை பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
நாங்கள் தூக்கி வளர்த்த பெண் நய‌ன்தாரா. இன்று அவளுக்கு இப்படி ஒரு
நிலைமையாகும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. நயன்தாரா
பிடிவாதக்காரி என்று எல்லோரும் சொல்கின்றனர். அவள் பிடிவாதக்காரியல்ல,
ரொம்ப வெகுளி பெண்.

சிம்புவிற்காக வல்லவன் படத்திற்கு நயன்தாரா பண உதவி எல்லாம் செய்தாள்.
கடைசியில் சிம்புவை நம்பி ஏமாந்து போனாள். அடுத்து பிரபுதேவாவை நம்பி
போனாள். இனியாவது அவள் வாழ்வில் சந்தோஷம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.
பிரபுதேவாவை ரொம்ப நம்பினாள் நயன்தாரா. கடைசியில் பிரபுதேவாவிடமும்
ஏமாந்து போனாள். ரமலத்-பிரபுதேவா விவாகரத்து உள்பட பல விஷயங்களுக்கு
பிரபுதேவாவுக்கு பண உதவி செய்தவர் நயன்தாரா தான். அவர்களுக்கு பணம்தான்
முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனி மேல்
சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாக
இருந்து இருக்கும். கடைசியில் அவளிடமிருந்‌த எல்லா பணத்தையும் சுரண்டி
விட்டு, இப்போது அவளையும் கழற்றி விட்டு விட்டார்கள். சினிமாவை மட்டும்
நயன்தாரா விட்டுவிட்டு வந்தால் நாங்களே அவளுக்கு நல்ல பையனாக பார்த்து
திருமணம் செய்து வைக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum