தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சித்திரை மருந்து

Go down

சித்திரை மருந்து Empty சித்திரை மருந்து

Post  birundha Fri Apr 05, 2013 9:02 pm

இலங்கை வாழ் தமிழர்கள் புத்தாண்டு தினத்தன்று விசு புண்ணிய காலத்தில் மருந்துநீர் ஒன்று தயாரித்து அதனைத் தலையில் தேய்த்து நன்னீரில் நீராடுவது வழக்கம். தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, விஷ்ணுகிரந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வ இலை, அறுகு, பீர்க்கு, பால், கோஜலம், கோமயம், கோரோஜனை, மஞ்சள், மிளகு, தீப்பிலி, சுக்கு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து காய்ச்சிப் பெறப்படுவதே மருந்து நீர் ஆகும்.

இதனை இலங்கைவாழ் சிவாச்சாரியார்கள் காய்ச்சி வினியோகிப்பர். அன்று மருந்து நீரில் நீராடியபின் புத்தாடை அணியும் வழக்கமும் உண்டு. கர வருடப் பிறப்பு, வேப்பம்பூ பச்சடியுடன் வடை பாயாசம் நிவேதித்து, குலதெய்வ வழிபாடு செய்து பஞ்சாங்கம் படித்தலும் கேட்டலும் ஆண்டு முழுவதும் நற்பலன்களைத் தரும். எல்லோரும் ஆண்டின் வெண்பா படித்தல் நல்லது. `

`கர வருடமாரி பெய்யுங் காசினியு முய்யும்
உரமிகுந்த வெள்ளமெங்கு மோடும் - நிறைமிகுத்து
நாலுகாற் சீவன் நலியும் நோயான் மடியும்
பாலும் நெய்யுமே சுருங்கும்''

இன்று பெருமாளை வணங்குவதால் சகல பாவங்களும் தீரும். விசுக்கனி பார்த்தால் நன்று. சித்திரை 1-ம் நாளுக்கு முதல்நாள் இரவே பலவகைப் பழங்களை குவியலாக கோபுரம்போல் குவித்து வைத்து, அதன் மேல் மங்கள தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அதிகாலை எழுந்தவுடன் கண்ணாடியை எதிரில் வைத்து, பழங்கள், தீபத்தைக் கண்டு தரிசிப்பதால் ஆண்டு முழுவதும் சுப பலன்களும் நல்வரங்களுமே கிடைக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum