தைப்பூசம் உமாதேவிக்கு உரியது
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
தைப்பூசம் உமாதேவிக்கு உரியது
தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் முருகன் அருள் பெற தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. முருகன் அருள் பெற தைப்பூசம் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதனால்தான் உலகம் முழுக்க வாழும் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் காவடி, பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுவதை பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் வைத்துள்ளனர்.
பழனியில் தைப்பூச திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூச திருவிழா 7-ந் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. உண்மையில் தைப்பூசம் பார்வதிக்காக ஏற்பட்ட விழாவாகும். மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று சிதம்பரத்தில் சிவபெருமான் நாட்டிய மாடியதை உமையாள் அருகில் இருந்து பார்த்து ரசித்தாள். அவளுக்கு சிவன் போல தாண்டவமாட வேண்டும் என்று ஆசைப்பட்டது.
தைப்பூசத்தினத்தன்று உமாதேவி நடனக்காட்சி அருளினாள். அந்த நடனத்தை திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் கண்டனர். இதையடுத்து தைப்பூசம் அம்பிகைக்கு உரிய நாளானது. இது எப்படி முருகனுக்குரிய விழாவாக மாறியது தெரியுமா? பழனி பெரியநாயகி கோவிலில் கைலாச நாதருடன் அம்பிகை உள்ளார். அவர்கள் சன்னதிக்கு நடுவில் முருகப்பெருமான் சன்னதி உள்ளது.
இதன் காரணமாக கோவிலின் பிரதான நுழைவாயிலும், கொடி மரமும் இயற்கையாகவே முருகன் சன்னதி எதிரில் அமைந்து விட்டது. பெரியநாயகி கோவிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். தைப்பூசத்துக்காக கொடி ஏற்றப்பட்டபோது, அது முருகன் விழாவுக்கு என்ற கருத்து பரவியது. காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடப்படுவதாக மாறிவிட்டது. பழனியில் தற்போதும் தைப்பூச விழா பெரிய நாயகி கோவிலில் தான் நடக்கிறது. அந்த கோவிலில்தான் தைப்பூச கொடி ஏற்றப்படும்.
பழனியில் தைப்பூச திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூச திருவிழா 7-ந் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. உண்மையில் தைப்பூசம் பார்வதிக்காக ஏற்பட்ட விழாவாகும். மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று சிதம்பரத்தில் சிவபெருமான் நாட்டிய மாடியதை உமையாள் அருகில் இருந்து பார்த்து ரசித்தாள். அவளுக்கு சிவன் போல தாண்டவமாட வேண்டும் என்று ஆசைப்பட்டது.
தைப்பூசத்தினத்தன்று உமாதேவி நடனக்காட்சி அருளினாள். அந்த நடனத்தை திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் கண்டனர். இதையடுத்து தைப்பூசம் அம்பிகைக்கு உரிய நாளானது. இது எப்படி முருகனுக்குரிய விழாவாக மாறியது தெரியுமா? பழனி பெரியநாயகி கோவிலில் கைலாச நாதருடன் அம்பிகை உள்ளார். அவர்கள் சன்னதிக்கு நடுவில் முருகப்பெருமான் சன்னதி உள்ளது.
இதன் காரணமாக கோவிலின் பிரதான நுழைவாயிலும், கொடி மரமும் இயற்கையாகவே முருகன் சன்னதி எதிரில் அமைந்து விட்டது. பெரியநாயகி கோவிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். தைப்பூசத்துக்காக கொடி ஏற்றப்பட்டபோது, அது முருகன் விழாவுக்கு என்ற கருத்து பரவியது. காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடப்படுவதாக மாறிவிட்டது. பழனியில் தற்போதும் தைப்பூச விழா பெரிய நாயகி கோவிலில் தான் நடக்கிறது. அந்த கோவிலில்தான் தைப்பூச கொடி ஏற்றப்படும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum